search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆடை கட்டுப்பாடு"

    • இந்திய கலாசாரத்தை மனதில் வைத்து செயல்படுங்கள்.
    • கோவிலின் புனிதம் காக்கப்பட வேண்டும்.

    உஸ்மனாபாத்தில் உள்ள துல்ஜாப்பூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற துல்ஜா பவானி கோவிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபாட்டுக்காக வருகை தருகின்றனர். இந்த கோவிலுக்குள் நுழைய ஆடை கட்டுப்பாடுகளை கோவில் நிர்வாகம் விதித்துள்ளது.

    இது குறித்து அறிவிப்பு பலகை கோவிலில் வைக்கப்பட்டு உள்ளது. மராத்தி மொழியில் வைக்கப்பட்டுள்ள இந்த அறிவிப்பு பலகையில், "கோவிலுக்கு அநாகரீகமாக உடல் பாகங்கள் தெரியும் வகையிலான ஆடைகள், அரை பேன்ட் மற்றும் பெர்முடாஸ் போன்றவற்றை அணிந்துவரும் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். தயவு செய்து நமது இந்திய கலாசாரத்தை மனதில் வைத்து செயல்படுங்கள்" என்று எழுதப்பட்டு உள்ளது.

    இது குறித்து கோவிலின் மக்கள் தொடர்பு அதிகாரி நாகேஷ் ஷிடோல் கூறுகையில், "அறிவிப்பு பலகை மக்களின் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது. நாம் பக்தியுடன் கோவிலுக்கு செல்கிறோம். கோவிலின் புனிதம் காக்கப்பட வேண்டும். எனவே துல்ஜா பவானி கோவிலில் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. இதுபோன்ற விதிமுறைகள் நாடு முழுவதும் பல்வேறு கோவில்களில் ஏற்கனவே உள்ளது" என்றார்.

    துல்ஜா பவானி கோவிலில் பிரார்த்தனை செய்ய சோலாப்பூரில் இருந்து வந்த பக்தரான பிரதிபா மகேஷ் கோவிலின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்தார். அவர் கூறுகையில், "இந்த முடிவு நமது கலாசாரத்தை பாதுகாக்க உதவும். நான் அதை வரவேற்கிறேன்" என்றார்.

    • கல்லூரிகளில் பேராசிரியர்கள் ‘மேல் அங்கி' (ஓவர் கோட்) அணிய வேண்டும்.
    • இதற்கு பேராசிரியர்கள் தரப்பில் சிலர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    சென்னை

    உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழகம் சிறந்த மாநிலமாக திகழ்கிறது.

    அதேபோல், கல்வி வளர்ச்சி, ஆராய்ச்சி உள்பட அனைத்திலும் உயர்கல்வித் துறை சிறந்ததாக மாற வேண்டும், அதிலும் தமிழ்நாடு உயர்கல்வித்துறையின் பொற்காலமாக இருக்க வேண்டும் என்ற முயற்சியில் தற்போதைய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

    இதன் ஒரு அங்கமாக, பல்கலைக்கழகம், கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு அவசியம் என்ற கருத்தை உயர்கல்வித் துறை சமீபத்தில் அறிவுறுத்தி இருக்கிறது.

    இது தொடர்பாக உயர்கல்வித் துறையின் துணை செயலாளர் ப.தனசேகர், உயர்கல்வித் துறைக்குட்பட்ட அனைத்து பல்கலைக்கழகம், கல்லூரிக்கல்வி இயக்குனர், தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் ஆணையர் ஆகியோருக்கு ஒரு சுற்றறிக்கையையும் அனுப்பி உள்ளார்.

    அதில், 'கல்லூரிகளில் பேராசிரியர்கள் அனைவரும் தங்களை மாணவர்களிடம் இருந்து தனியாக வேறுபடுத்தி காட்டும் விதமாகவும், உடல் அமைப்பை மறைக்கும் விதமாகவும் 'மேல் அங்கி' (ஓவர் கோட்) அணிய வேண்டும். மேலும் பேராசிரியர்களுக்குள் ஏற்றத்தாழ்வை வெளிப்படுத்தாதவாறு சீருடை போன்ற கண்ணியமான ஆடைகளை அணிய வேண்டும். இதற்கு அந்தந்த நிர்வாகங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கு பேராசிரியர்கள் தரப்பில் சிலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். சிலர் எதிர்ப்பு குரலையும் பதிவு செய்கின்றனர்.

    ×