என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் 27-ம் தேதி ரஷியா பயணம்
Byமாலை மலர்22 Nov 2017 12:21 PM GMT (Updated: 22 Nov 2017 12:21 PM GMT)
இந்தியா - ரஷியா இடயே தீவிரவாத ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு புதிய ஒப்பந்தங்களை செய்வதற்காக மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் மூன்றுநாள் பயணமாக வரும் 27-ம் தேதி மாஸ்கோ நகருக்கு செல்கிறார்.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதுடெல்லியில் இன்று மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின்போது, இந்தியா - ரஷியா இடயே தீவிரவாத ஒழிப்பு, திட்டமிட்ட குற்றச்செயல்கள், போதைப்பொருள் கடத்தல் தடுப்பு, கள்ளநோட்டு நடமாட்டம், சைபர் குற்றத்தடுப்பு உள்ளிட்ட பல்வேறு புதிய பூர்வாங்க ஒப்பந்தங்களை ஏற்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இவ்விவகாரங்கள் தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரஷியாவுக்கு செல்ல தீர்மானிக்கப்பட்டது. ஆனால், காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில் உள்ள விமானப் படை தளத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலையடுத்து, அவரது பயண திட்டம் இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்தியா - ரஷியா இடையே அனைத்து வகையான தீவிரவாதங்களை ஒழிப்பது உள்ளிட்ட பல்வேறு புதிய ஒப்பந்தங்களை செய்வதற்காக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மூன்றுநாள் பயணமாக வரும் 27-ம் தேதி மாஸ்கோ நகருக்கு செல்கிறார். அவருடன் மத்திய உள்துறை அமைச்சகத்தை சேர்ந்த உயரதிகாரிகள் குழுவும் உடன் செல்கிறது.
இந்த பயணத்தின்போது ரஷிய உள்துறை மந்திரி விளாடிமிர் கோலோகோல்ட்ஸேவ் மற்றும் ரஷிய தலைவர்களை சந்திக்கும் ராஜ்நாத் சிங் இருநாடுகளுக்கு இடையிலான நட்புறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்துவார் என உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதுடெல்லியில் இன்று மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின்போது, இந்தியா - ரஷியா இடயே தீவிரவாத ஒழிப்பு, திட்டமிட்ட குற்றச்செயல்கள், போதைப்பொருள் கடத்தல் தடுப்பு, கள்ளநோட்டு நடமாட்டம், சைபர் குற்றத்தடுப்பு உள்ளிட்ட பல்வேறு புதிய பூர்வாங்க ஒப்பந்தங்களை ஏற்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இவ்விவகாரங்கள் தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரஷியாவுக்கு செல்ல தீர்மானிக்கப்பட்டது. ஆனால், காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில் உள்ள விமானப் படை தளத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலையடுத்து, அவரது பயண திட்டம் இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்தியா - ரஷியா இடையே அனைத்து வகையான தீவிரவாதங்களை ஒழிப்பது உள்ளிட்ட பல்வேறு புதிய ஒப்பந்தங்களை செய்வதற்காக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மூன்றுநாள் பயணமாக வரும் 27-ம் தேதி மாஸ்கோ நகருக்கு செல்கிறார். அவருடன் மத்திய உள்துறை அமைச்சகத்தை சேர்ந்த உயரதிகாரிகள் குழுவும் உடன் செல்கிறது.
இந்த பயணத்தின்போது ரஷிய உள்துறை மந்திரி விளாடிமிர் கோலோகோல்ட்ஸேவ் மற்றும் ரஷிய தலைவர்களை சந்திக்கும் ராஜ்நாத் சிங் இருநாடுகளுக்கு இடையிலான நட்புறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்துவார் என உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X