என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை: குஜராத் தேர்தலில் சிவசேனா தனித்து போட்டி
அகமதாபாத்:
குஜராத் மாநில சட்டசபை தேர்தல் டிசம்பர் மாதம் 2 கட்டங்களாக நடக்கிறது.
இந்த தேர்தலில் ஆளும் பா.ஜனதா- காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில் மத்திய அரசிலும், மராட்டியத்திலும், பா.ஜனதா கூட்டணி ஆட்சியில் இடம் பெற்றுள்ள சிவசேனா கட்சி குஜராத் தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது.
பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லாமல் குஜராத் தேர்தலில் தனித்து போட்டியிடுவது என்று சிவசேனாவின் தேசிய செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டது.
இது குறித்து சிவசேனாவின் மூத்த தலைவரும், மேல்-சபை எம்.பி.யுமான அனில் தேசாய் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்துத்துவா கொள்கைகளை முன்னிறுத்தி குஜராத் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ளோம். மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் 75 இடங்களுக்கு வேட்பாளரை நிறுத்த திட்டமிட்டுள்ளோம்.
பா.ஜனதா உள்பட எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்க வேண்டிய அவசியம் சிவசேனாவுக்கு இல்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்