என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பா.ஜனதாவுக்கு ஆதரவு: சசிகலாவும், எடப்பாடியும் சேர்ந்து எடுத்த முடிவு - தம்பித்துரை
Byமாலை மலர்23 Jun 2017 5:45 AM GMT (Updated: 23 Jun 2017 5:45 AM GMT)
பா.ஜனதாவுக்கு அ.தி.மு.க. ஆதரவு அளிப்பது சசிகலாவும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் சேர்ந்து எடுத்த முடிவு தான் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை கூறினார்.
புதுடெல்லி:
ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா வேட்பாளராக போட்டியிடும் ராம்நாத் கோவிந்துக்கு அ.தி.மு.க.வின் இரு அணிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. அ.தி.மு.க. அம்மா அணியின் ஆதரவை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
முன்னதாக சிறையில் இருக்கும் சசிகலாவை பாராளுமன்ற துணை சபாநாயகர் சந்தித்துப் பேசினார். அப்போது ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். அதன்பிறகே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த நிலையில் துணை சபாநாயகர் தம்பித்துரை இன்று காலை டெல்லியில் பா.ஜனதாவின் ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்தை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் தம்பித்துரை நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதாவுக்கு அ.தி.மு.க. ஆதரவு தெரிவித்துள்ளது. இது அ.தி.மு.க. தலைமை கழகம் சார்பாக எடுத்த முடிவு. தலைமை கழக பொறுப்பாளர்கள் எல்லோரும் சேர்ந்து இந்த முடிவு எடுத்துள்ளனர்.
பொது செயலாளர் சசிகலாவும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து எடுத்த முடிவு தான்.
அ.தி.மு.க.வின் இரு அணிகளும் பா.ஜனதாவுக்கு ஆதரவு தெரிவித்து இருப்பதால் அ.தி.மு.க.வில் பிளவு இல்லை என்பது தெளிவாகிறது. கருத்து வேறுபாடு மட்டுமே உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா வேட்பாளராக போட்டியிடும் ராம்நாத் கோவிந்துக்கு அ.தி.மு.க.வின் இரு அணிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. அ.தி.மு.க. அம்மா அணியின் ஆதரவை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
முன்னதாக சிறையில் இருக்கும் சசிகலாவை பாராளுமன்ற துணை சபாநாயகர் சந்தித்துப் பேசினார். அப்போது ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். அதன்பிறகே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த நிலையில் துணை சபாநாயகர் தம்பித்துரை இன்று காலை டெல்லியில் பா.ஜனதாவின் ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்தை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் தம்பித்துரை நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதாவுக்கு அ.தி.மு.க. ஆதரவு தெரிவித்துள்ளது. இது அ.தி.மு.க. தலைமை கழகம் சார்பாக எடுத்த முடிவு. தலைமை கழக பொறுப்பாளர்கள் எல்லோரும் சேர்ந்து இந்த முடிவு எடுத்துள்ளனர்.
பொது செயலாளர் சசிகலாவும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து எடுத்த முடிவு தான்.
அ.தி.மு.க.வின் இரு அணிகளும் பா.ஜனதாவுக்கு ஆதரவு தெரிவித்து இருப்பதால் அ.தி.மு.க.வில் பிளவு இல்லை என்பது தெளிவாகிறது. கருத்து வேறுபாடு மட்டுமே உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X