என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று சர்ச்சையை ஏற்படுத்திய இடதுசாரி எம்.எல்.ஏ
Byமாலை மலர்1 Jun 2017 7:27 AM GMT (Updated: 1 Jun 2017 7:27 AM GMT)
கேரள மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ அருணன் பங்கேற்றது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ அருணன் பங்கேற்றது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திரிச்சூர் மாவட்டத்தில் உள்ள ஊராக்கம் என்ற பகுதியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் தங்கள் முன்னாள் சேவர்களின் நினைவு தினத்தை அனுசரிக்கும் விதமாக நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில், ஆச்சரியப்படும் வகையில் அம்மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க.வுக்கு நேர் எதிராக இருக்கும் மார்க்சிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ அருணன் பங்கேற்றுள்ளார்.
ஆர்.எஸ்.எஸ் ஏற்பாடு செய்திருந்த நிகழ்சியில் இடதுசாரி எம்.எல்.ஏ. ஒருவர் பங்கேற்ற செய்தி வெளியே தெரியவில்லை. ஆனால், காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ பால்ராம் இந்த செய்தி மற்றும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவு செய்து விமர்சித்திருந்தார். அதன் பின்னரே, ஊடகங்களில் இந்த செய்தி கசிந்தது.
இது குறித்து அருணனிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, “அந்த நிகழ்ச்சி ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என முன்னரே தெரியாது. தெரிந்திருந்தால் நான் எப்படி சென்றிருப்பேன். கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி என்று தான் தொலைபேசி மூலம் என்னிடம் தெரிவிக்கப்பட்டது. நான் அங்கு சென்ற போதுதான் எனக்கு தெரியும். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பேனர்கள் கட்டப்பட்டிருந்தது. மாணவர்கள் பலர் வந்திருந்தார்கள் அதனால் அவர்களுக்கு பரிசுப்பொருட்கள் அளித்துவிட்டு உடனே வெளியேறிவிட்டேன்” எனக் கூறியுள்ளார்.
இது தொடர்பாக கட்சி மேலிடத்திற்கு விளக்கமளித்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X