என் மலர்tooltip icon

    வேலூர்

    • பச்சிளம் குழந்தையின் கட்டை விரலை செவிலியர் வெட்டியுள்ளார்
    • செவிலியர் நோயாளிகளுடன் நேரடி தொடர்பில் இல்லாத பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

    வேலூர் மாவட்டத்தை சேர்ந்த நிவேதா என்ற பெண்ணிற்கு கடந்த 24-ஆம் தேதி வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.

    இதனை தொடர்ந்து நிவேதா, குழந்தையுடன் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், குழந்தையின் கையில் குளுக்கோஸ் மற்றும் மருந்து செலுத்துவதற்காக போடப்பட்டிருந்த ஊசியை செவிலியர்கள் மாற்ற முயன்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக பச்சிளம் குழந்தையின் கட்டை விரலை செவிலியர் அருணா தேவி வெட்டியுள்ளார்.

    இதனையடுத்து குழந்தையின் கையில் பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சை செய்வதற்காக உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலமாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு குழந்தையை அனுப்பி வைத்தனர்.

    குழந்தையின் விரலை துண்டித்த செவிலியர் நோயாளிகளுடன் நேரடி தொடர்பில் இல்லாத பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

    இந்நிலையில், குழந்தையின் கட்டை விரலை தவறுதலாக வெட்டிய செவிலியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குழந்தையின் பாட்டி புஷ்பா அளித்த புகாரின் அடிப்படையில் விரலை வெட்டிய செவிலியர் அருணா தேவி மீது வேலூர் தாலுகா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

    • கடந்த 6 மாதங்களாக சுரேஷ், ஷூ கம்பெனிக்கு வேலைக்கு செல்லவில்லை.
    • ஆத்திரமடைந்த சுரேஷ், தான் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியை எடுத்து சபீனாபானுவை தாக்க முயன்றுள்ளார்.

    வேலூர்:

    வேலூர் சின்ன அல்லாபுரம் கே.கே. நகர் திரவுபதியம்மன் கோவில் 3-வது தெருவை சேர்ந்தவர் சபீனாபானு (வயது 33). இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தை இல்லை.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்தார். சபீனாபானு, சின்னஅல்லாபுரத்தில் தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.

    தொடர்ந்து சதுப்பேரியில் உள்ள தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்தார். அதே கம்பெனியில் வேலூர் விருப்பாட்சிபுரம் நேதாஜி தெருவை சேர்ந்த சுரேஷ் (35) என்பவரும் வேலை செய்து வந்தார்.

    இருவரும் ஒரே இடத்தில் வேலை செய்து வந்ததால் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்திருந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 6 மாதங்களாக சுரேஷ், ஷூ கம்பெனிக்கு வேலைக்கு செல்லவில்லை. இதனால் அவருடன் பேசுவதை சபீனா பானு தவிர்த்து வந்தார்.

    பலமுறை சுரேஷ், சபீனாபானுவை தொடர்பு கொண்டும் அவர் பேச மறுத்ததாக தெரிகிறது. இதனால் சபீனாபானு மீது கோபத்தில் இருந்த சுரேஷ், நேற்றும் அவரை தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார்.

    ஆனால் அவர் போனை எடுக்கவில்லை என்று தெரிகிறது.

    இதையடுத்து நேற்று இரவு 11.30 மணியளவில் சுரேஷ், சின்ன அல்லாபுரத்தில் உள்ள சபீனாபானுவின் வீட்டுக்கு சென்றார். அவரிடம் 'ஏன் என்னிடம் 2 மாதங்களாக பேசவில்லை.

    வேறு யாருடனாவது தொடர்பு உள்ளதா?' என்று கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் ஆத்திரமடைந்த சுரேஷ், தான் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியை எடுத்து சபீனாபானுவை தாக்க முயன்றுள்ளார்.

    இதை பார்த்த சபீனாபானுவின் தந்தை சிராஜூதீன், தாய் ஆஜிரா ஆகியோர் தடுக்க முயன்றனர். இருவரையும் சுரேஷ் கம்பியால் தலையில் தாக்கினார்.

    இதில் படுகாயமடைந்த அவர்கள் மயங்கினர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சபீனாபானு, வீட்டில் இருந்து வெளியே தப்பி ஓடினார். அவரை விரட்டி சென்ற சுரேஷ், சபீனாபானு வீட்டின் அருகில் இருந்த மின்கம்பம் அருகே மடக்கி அவரை சரமாரியாக தாக்கினார் .

    இதில் சம்பவ இடத்திலேயே சபீனாபானு பரிதாபமாக இறந்தார். உடனே, சுரேஷ் தனது பைக்கில் ஏறி அங்கிருந்து தப்பிச் சென்றார்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், பாகாயம் சப்-இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், ஏட்டுகள் சக்கரவர்த்தி, செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து சுரேஷின் செல்போன் எண்ணை வைத்து விருபாட்சிபுரம் நேதாஜி தெருவில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றனர்.

    அங்கு தனது அறையில் மின்விசிறி கொக்கியில் சேலையால் தூக்கிட்ட நிலையில் சுரேஷ் பிணமாக தொங்கினார்.

    சபீனாபானுவை கொலை செய்த பின்னர், வீட்டுக்கு திரும்பிய சுரேஷ், தூக்கிட்டு தற்கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.

    இதையடுத்து இருவரின் பிணத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    காயமடைந்து மயங்கிய நிலையில் கிடந்த சபீனாபானுவின் பெற்றோரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

    மேலும் இந்த கொலை மற்றும் தற்கொலை தொடர்பாக பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, அம்மன் கண் திறப்பு நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.
    • அம்மனுக்கு சிறப்பு அலங்கார ஆராதனைகள் நடந்தன.

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கெங்கையம்மன் சிரசு ஊர்வலம் இன்று நடந்தது.

    காலை 5.30 மணியளவில் குடியாத்தம் தரணம்பேட்டை முத்தியாலம்மன் கோவிலில் இருந்து அம்மன் சிரசு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. அப்போது, சிலம்பாட்டம், மயிலாட்டம், புலியாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன், பம்பை, உடுக்கை, மேள-தாளம் முழங்க அம்மன் சிரசு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.

    பழைய ஆஸ்பத்திரி ரோடு, காந்திரோடு, ஜவஹர்லால் தெரு வழியாக நடைபெற்ற ஊர்வலம் கெங்கையம்மன் கோவிலில் நிறைவடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். குறிப்பாக, தரணம்பேட்டை முதல்கோபாலபுரம் வரை சாலையின் இருபுறமும் பக்தர்கள் திரண்டிருந்தனர்.

    வேலூர் மாவட்டம் மட்டுமின்றி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    சிரசு ஊர்வலம் சென்ற பாதையில் கெங்கை யம்மனுக்கு பூமாலை சூட்டியும், கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு மக்கள் வெள்ளத்தில் நீந்திச்சென்ற சிரசு, கெங்கையம்மன் கோவில் மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த சண்டாளச்சி உடலில் பொருத்தப்பட்டது.

    தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, அம்மன் கண் திறப்பு நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.

    மேலும் பக்தர்கள் தேங்காய்களை உடைத்தும், ஆடு, கோழி பலியிட்டும், பலர் அலகுத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்கார ஆராத னைகள் நடந்தன. பின்னர் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    மலர் மாலை, எலுமிச்சை மாலை, ரூபாய் நோட்டு மாலை ஆகியவற்றை பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து அம்மனுக்கு அணிவித்து வழிபட்டனர். வழி எங்கும் பக்தர்களுக்கு நீர், மோர், கூழ் இலவசமாக வழங்கினர்.

    தொடர்ந்து இன்று இரவு அம்மன் உடலில் இருந்து சிரசு பிரிக்கப்பட்டு, கவு ண்டன்ய ஆற்றங்கரை யில் அலங்காரம் கலைக்கப்பட்டு மீண்டும் கோவிலுக்கு கொண்டு வரப்பட உள்ளது.

    ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

    • சுமார் 3 மணி நேரம் சோதனை நடந்தது.
    • அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த தொண்டான் துளசியை சேர்ந்தவர் மேத்தா கிரிரெட்டி. இவர் வேலூர் மாநகரில் பல்வேறு இடங்களில் ஓட்டல்கள், ரியல் எஸ்டேட், கேட்டரிங் சர்வீஸ் நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை சென்னையில் இருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 பேர் ஒரே காரில் காட்பாடிக்கு வந்தனர்.

    ஓடை பிள்ளையார் கோவில் அருகே மெயின் ரோட்டை ஒட்டி உள்ள மேத்தா கிரிரெட்டி அலுவலகத்தில் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரம் சோதனை நடந்தது.

    பின்னர் காலை 7.30 மணிக்கு தொண்டான்துளசியில் உள்ள மேத்தா கிரிரெட்டி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

    அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. 

    • மது அருந்திக்கொண்டு இருந்தவர்களுக்கும் சரத்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
    • விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரி முன்பு குவிந்தனர்.

    வேலூர்:

    வேலூர் அடுத்த அரியூர், ஆவாரம் பாளையம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரத்குமார் (வயது 34). ஆட்டோ டிரைவர்.

    இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணி அமை ப்பாளராக இருந்து வந்தார். இன்னும் திருமணமாகவில்லை.

    இந்த நிலையில் நேற்று சரத்குமார் அரியூரில் உள்ள டாஸ்மாக் கடை அருகே மது அருந்தி கொண்டு இருந்தார். அப்பகுதியில் மது அருந்திக்கொண்டு இருந்தவர்களுக்கும் சரத்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த 4 பேர் கொண்ட கும்பல் சரத்குமாரை சரமாரியாக வெட்டினர். இதில் அவர் படுகாயடைந்தார். கும்பல் அங்கிருந்து தப்பி ஓடினர்.

    ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த சரத்கு மாரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி சரத்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த அரியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரி முன்பு குவிந்தனர்.

    இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவியது. அசம்பாவித சம்பவங்களை தவிர்ப்பதற்காக ஆஸ்பத்திரி முன்பாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

    அரியூர் போலீஸ் நிலைய எல்லைக்குள் அடிக்கடி கொலை சம்பவங்கள் நடந்து வருவதால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.

    • நோட்டமிட்ட அந்த நபர் செல்வகுமாரின் பையை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் விசாரணையில் இறங்கினர்.

    வேலூர்:

    தூத்துக்குடியைச் சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 39). இவர் திருப்பதியில் பால்கோவா கடை நடத்தி வருகிறார்.

    செல்வகுமார் திருப்பதியில் இருந்து தூத்துக்குடி செல்வதற்காக அரசு பஸ்சில் பயணம் செய்து கொண்டிருந்தார். அவரது கைப்பையில் ரூ. 5 லட்சம் பணத்தை வைத்திருந்தார்.

    பஸ் வேலூர் புதிய பஸ் நிலையம் வந்ததும் வாலிபர் ஒருவர் பஸ்சில் ஏறினார். அவர் செல்வகுமாரிடம் எனக்கு பணம் தேவைப்படுகிறது. நான் உங்களுக்கு யு.பி.ஐ மூலம் பணம் அனுப்புகிறேன். எனக்கு பணமாகக் கொடுங்கள் என கேட்டுள்ளார் .

    தொடர்ந்து செல்வகுமார் பஸ்சிலிருந்து கீழே இறங்கி அருகில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார். இதனை நோட்டமிட்ட அந்த நபர் செல்வகுமாரின் பையை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.

    இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அலறி சத்தம் போட்டார். அதற்குள் அந்த நபர் அங்கிருந்து மாயமானார். இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் விசாரணையில் இறங்கினர்.

    பணத்தை திருடி சென்ற தேனி மாவட்டம் போடிநாயக்கனூரை அடுத்த விஸ்வாசபுரத்தை சேர்ந்த கதிர்வேல் (28) என்பவரை போலீசார் மதுரையில் வைத்து கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேலூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த அன்பழகனை தேடி வந்தனர்.
    • கைது செய்யப்பட்ட அன்பழகனிடம் தனிப்படை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர்:

    வேலூரில் உள்ள ஊரீசு கல்லூரி துணை முதல்வர் அன்பழகன். இவர் அதே கல்லூரியில் பணியாற்றி வந்த பெண் விரிவுரையாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வேலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    இதுகுறித்து வேலூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த அன்பழகனை தேடி வந்தனர்.

    கல்லூரி மாணவ, மாணவிகள் அன்பழகனுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியவாறு ஊர்வலமாக வந்து அன்பழகனை கைது செய்ய கோரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் தனிப்படை போலீசார் ஆந்திர மாநிலம், ராசன பள்ளியில் பதுங்கி இருந்த அன்பழகனை இன்று அதிகாலை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அன்பழகனிடம் தனிப்படை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆரம்ப சுகாதார மையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
    • ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே சாமியார், ஒரே சாப்பாடு இதெல்லாம் நடக்காது.

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி 10-வது வார்டு காங்கேயநல்லூர் பகுதியில் தேசிய நகர்ப்புற சுகாதார திட்டத்தின் கீழ் ரூ1.20 கோடி மதிப்பீட்டில் புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து வைத்து பணியை தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் தந்தை வழியை முதல்-அமைச்சர் பின்பற்றவில்லை என நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். என்ன ஒரு சிறு பிள்ளைத்தனமான பேச்சு இது. ஒரு மத்திய மந்திரி இப்படியா பேசுவது.

    ஒரே நாடு ஒரே தேர்தல் எல்லாம் நடக்காது... ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே சாமியார், ஒரே சாப்பாடு இதெல்லாம் நடக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • யார் யாரோடு சேர்கிறார்கள் என்ற கவலை இல்லை
    • யார் யாரை சந்தித்தாலும் அது பற்றி எங்களுக்கு கவலை இல்லை.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் 100 நாள் வேலை திட்டத்திற்கு மத்திய அரசு நிதி வழங்காததை கண்டித்து இன்று தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டார். அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நடிகர் விஜய் தி.மு.க.வுக்கும் அவரது கட்சிக்கும் தான் போட்டி என கூறியிருக்கிறார். யார், யாருக்கு போட்டி என்பது குறித்து எங்களுக்கு கவலை இல்லை.

    நாங்கள் உழைப்போம், ஜெயிப்போம். யார் யாரோடு சேர்கிறார்கள் என்ற கவலை இல்லை. எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தாலும் சரி யார் யாரை சந்தித்தாலும் அது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. காட்பாடி ரெயில்வே மேம்பாலப் பணிகள் அடுத்த மாதம் தொடங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் தவெக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்.
    • தவெக சார்பில் தொடங்கப்பட்ட கையெழுத்து இயக்கம் தொடர்பாக பேனர் வைக்கப்பட்டிருந்தது.

    சர்வதேச அளவில் இன்று மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வீடியோ ஒன்றை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தார்.

    அப்போது, " 2026-ல் நாம எல்லாம் சேர்ந்து மகளிருக்கான பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய திமுக ஆட்சியை மாற்றுவோம். அதற்கு மகளிர் தினமான இன்று நாம் எல்லோரும் சேர்ந்து உறுதி ஏற்போம்" என்றார்.

    மேலும், பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    அவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதற்கு, அக்கட்சியின் தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்தார்.

    இந்நிலையில், தமிழகம் முழுவதும் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது ஆங்காங்கே தவெக சார்பில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது.

    அப்போது, வேலூர் கிழக்கு மாவட்ட த.வெ.க சார்பாக இன்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், அக்கட்சியால் தொடங்கப்பட்ட கையெழுத்து இயக்கம் தொடர்பாக பேனர் வைக்கப்பட்டிருந்தது.

    அதில், "WE STAND FOR WOMEN HARRASEMENT" என்று அச்சிடப்பட்டுள்ளது சர்ச்சையாகியுள்ளது.

    WE STAND AGAINST WOMEN HARASSMENT என்பதே பெண்கள் துன்புறுத்தலுக்கு எதிராக நாங்கள் நிற்கிறோம் என்பதற்கான பொருள்.

    இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தொல்லை கொடுப்பவர்கள் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    • நட்புக்கும் ஒரு எல்லை உண்டு. நாம் நமது கலாச்சாரத்தை பேணி பாதுகாக்க வேண்டும்.

    வேலூர்:

    வேலூர் வி.ஐ.டி.யில் சர்வதேச மகளிர் தின விழா நடந்தது. விழாவிற்கு வேந்தர் ஜி. விசுவநாதன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக சென்னை ஐகோர்ட்டு நீதிபதி பவானி சுப்பராயன் பங்கேற்றார். அவர் பேசியதாவது:-

    பெண்கள் சிறுவயதிலிருந்தே அடக்குமுறையில் இருந்தே வளர்க்கப்படுகிறார்கள் பருவ வயது அடைந்தவுடன் இயல்பாக மற்றவர்களுடன் பழக முடிவதில்லை. பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை ஏற்பட்டால் தயங்காமல் புகார் அளிக்கலாம்.

    பெண் குழந்தைகளுக்கு சிறு வயது முதலே நற்போதனைகளை வழங்க வேண்டும். நல்ல தொடுதல், தீய தொடுதல் குறித்து குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கக் கூடாது. யாரும் தொடவே கூடாது என சொல்லிக் கொடுக்க வேண்டும். ஆண்களும் பெண்களும் சமம் என சிறு வயது முதலே குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தொல்லை கொடுப்பவர்கள் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    சாதி, நிறம், உயரம் ஆகியவற்றை கொண்டு வேறுபாடுகள் வரக்கூடாது. பெண்களின் அழகை வர்ணித்தால் அவர்கள் மீது புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். மகாகவி பாரதியார், மோதி மிதித்து விடு பாப்பா அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா என கூறியுள்ளார்.

    'நட்புக்கும் ஒரு எல்லை உண்டு. நாம் நமது கலாச்சாரத்தை பேணி பாதுகாக்க வேண்டும். பெண்கள் அதிகளவில் கல்வி கற்றால் சமூகம் மாற்றங்கள் ஏற்படும். நமது அடிப்படை உரிமைகள் குறித்து பெண்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். ஒரு காலத்தில் பெண்கள் சைக்கிள் ஓட்டவே அனுமதிக்கப்படவில்லை. தற்போது கல்பனா சாவ்லா முதல் சுனிதா வில்லியம்ஸ் வரை விண்வெளிக்கு சென்று வந்துள்ளனர். இதற்கு காரணம் பெண்கள் மனதிற்குள் இருக்கும் தீராத வேட்கை தான். 2 கைகள் தட்டினால் தான் ஓசை வரும். அதுபோல ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்ந்தால் தான் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பேராசிரியர் அன்பழகனின் 5-ம் ஆண்டு நினைவு தினம்.
    • அமைச்சர் துரைமுருகன் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் பேராசிரியர் அன்பழகனின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு காட்பாடி தெற்கு பகுதி தி.மு.க. சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் அன்பழகன் உருவப் படத்திற்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:-

    ஒவ்வொரு மாநில மொழிக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் தந்து வருகிறது என அமித்ஷா பேசியது குறித்து கேட்டதற்கு, பெரிய மனிதர்கள் எது வேண்டுமானாலும் பேசிவிட்டு போகலாம் என்றார்.

    மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை தமிழ் மொழியில் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முயற்சி மேற்கொள்ள வேண்டும்-அமித்ஷா பேசியது குறித்து கேட்டதற்கு, `சொல்லுதல் யாவருக்கும் எளிய அரியவாம்' என திருக்குறளை மேற்கோள் காட்டினார்.

    ×