என் மலர்
வேலூர்
- சுமார் 3 மணி நேரம் சோதனை நடந்தது.
- அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
வேலூர்:
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த தொண்டான் துளசியை சேர்ந்தவர் மேத்தா கிரிரெட்டி. இவர் வேலூர் மாநகரில் பல்வேறு இடங்களில் ஓட்டல்கள், ரியல் எஸ்டேட், கேட்டரிங் சர்வீஸ் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை சென்னையில் இருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 பேர் ஒரே காரில் காட்பாடிக்கு வந்தனர்.
ஓடை பிள்ளையார் கோவில் அருகே மெயின் ரோட்டை ஒட்டி உள்ள மேத்தா கிரிரெட்டி அலுவலகத்தில் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரம் சோதனை நடந்தது.
பின்னர் காலை 7.30 மணிக்கு தொண்டான்துளசியில் உள்ள மேத்தா கிரிரெட்டி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
- மது அருந்திக்கொண்டு இருந்தவர்களுக்கும் சரத்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
- விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரி முன்பு குவிந்தனர்.
வேலூர்:
வேலூர் அடுத்த அரியூர், ஆவாரம் பாளையம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரத்குமார் (வயது 34). ஆட்டோ டிரைவர்.
இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணி அமை ப்பாளராக இருந்து வந்தார். இன்னும் திருமணமாகவில்லை.
இந்த நிலையில் நேற்று சரத்குமார் அரியூரில் உள்ள டாஸ்மாக் கடை அருகே மது அருந்தி கொண்டு இருந்தார். அப்பகுதியில் மது அருந்திக்கொண்டு இருந்தவர்களுக்கும் சரத்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த 4 பேர் கொண்ட கும்பல் சரத்குமாரை சரமாரியாக வெட்டினர். இதில் அவர் படுகாயடைந்தார். கும்பல் அங்கிருந்து தப்பி ஓடினர்.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த சரத்கு மாரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி சரத்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த அரியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரி முன்பு குவிந்தனர்.
இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவியது. அசம்பாவித சம்பவங்களை தவிர்ப்பதற்காக ஆஸ்பத்திரி முன்பாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
அரியூர் போலீஸ் நிலைய எல்லைக்குள் அடிக்கடி கொலை சம்பவங்கள் நடந்து வருவதால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.
- நோட்டமிட்ட அந்த நபர் செல்வகுமாரின் பையை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் விசாரணையில் இறங்கினர்.
வேலூர்:
தூத்துக்குடியைச் சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 39). இவர் திருப்பதியில் பால்கோவா கடை நடத்தி வருகிறார்.
செல்வகுமார் திருப்பதியில் இருந்து தூத்துக்குடி செல்வதற்காக அரசு பஸ்சில் பயணம் செய்து கொண்டிருந்தார். அவரது கைப்பையில் ரூ. 5 லட்சம் பணத்தை வைத்திருந்தார்.
பஸ் வேலூர் புதிய பஸ் நிலையம் வந்ததும் வாலிபர் ஒருவர் பஸ்சில் ஏறினார். அவர் செல்வகுமாரிடம் எனக்கு பணம் தேவைப்படுகிறது. நான் உங்களுக்கு யு.பி.ஐ மூலம் பணம் அனுப்புகிறேன். எனக்கு பணமாகக் கொடுங்கள் என கேட்டுள்ளார் .
தொடர்ந்து செல்வகுமார் பஸ்சிலிருந்து கீழே இறங்கி அருகில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார். இதனை நோட்டமிட்ட அந்த நபர் செல்வகுமாரின் பையை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அலறி சத்தம் போட்டார். அதற்குள் அந்த நபர் அங்கிருந்து மாயமானார். இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் விசாரணையில் இறங்கினர்.
பணத்தை திருடி சென்ற தேனி மாவட்டம் போடிநாயக்கனூரை அடுத்த விஸ்வாசபுரத்தை சேர்ந்த கதிர்வேல் (28) என்பவரை போலீசார் மதுரையில் வைத்து கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வேலூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த அன்பழகனை தேடி வந்தனர்.
- கைது செய்யப்பட்ட அன்பழகனிடம் தனிப்படை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
வேலூரில் உள்ள ஊரீசு கல்லூரி துணை முதல்வர் அன்பழகன். இவர் அதே கல்லூரியில் பணியாற்றி வந்த பெண் விரிவுரையாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வேலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது.
இதுகுறித்து வேலூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த அன்பழகனை தேடி வந்தனர்.
கல்லூரி மாணவ, மாணவிகள் அன்பழகனுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியவாறு ஊர்வலமாக வந்து அன்பழகனை கைது செய்ய கோரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் தனிப்படை போலீசார் ஆந்திர மாநிலம், ராசன பள்ளியில் பதுங்கி இருந்த அன்பழகனை இன்று அதிகாலை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அன்பழகனிடம் தனிப்படை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆரம்ப சுகாதார மையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
- ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே சாமியார், ஒரே சாப்பாடு இதெல்லாம் நடக்காது.
வேலூர்:
வேலூர் மாநகராட்சி 10-வது வார்டு காங்கேயநல்லூர் பகுதியில் தேசிய நகர்ப்புற சுகாதார திட்டத்தின் கீழ் ரூ1.20 கோடி மதிப்பீட்டில் புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து வைத்து பணியை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் தந்தை வழியை முதல்-அமைச்சர் பின்பற்றவில்லை என நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். என்ன ஒரு சிறு பிள்ளைத்தனமான பேச்சு இது. ஒரு மத்திய மந்திரி இப்படியா பேசுவது.
ஒரே நாடு ஒரே தேர்தல் எல்லாம் நடக்காது... ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே சாமியார், ஒரே சாப்பாடு இதெல்லாம் நடக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
- யார் யாரோடு சேர்கிறார்கள் என்ற கவலை இல்லை
- யார் யாரை சந்தித்தாலும் அது பற்றி எங்களுக்கு கவலை இல்லை.
வேலூர்:
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் 100 நாள் வேலை திட்டத்திற்கு மத்திய அரசு நிதி வழங்காததை கண்டித்து இன்று தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டார். அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நடிகர் விஜய் தி.மு.க.வுக்கும் அவரது கட்சிக்கும் தான் போட்டி என கூறியிருக்கிறார். யார், யாருக்கு போட்டி என்பது குறித்து எங்களுக்கு கவலை இல்லை.
நாங்கள் உழைப்போம், ஜெயிப்போம். யார் யாரோடு சேர்கிறார்கள் என்ற கவலை இல்லை. எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தாலும் சரி யார் யாரை சந்தித்தாலும் அது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. காட்பாடி ரெயில்வே மேம்பாலப் பணிகள் அடுத்த மாதம் தொடங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் தவெக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்.
- தவெக சார்பில் தொடங்கப்பட்ட கையெழுத்து இயக்கம் தொடர்பாக பேனர் வைக்கப்பட்டிருந்தது.
சர்வதேச அளவில் இன்று மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வீடியோ ஒன்றை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது, " 2026-ல் நாம எல்லாம் சேர்ந்து மகளிருக்கான பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய திமுக ஆட்சியை மாற்றுவோம். அதற்கு மகளிர் தினமான இன்று நாம் எல்லோரும் சேர்ந்து உறுதி ஏற்போம்" என்றார்.
மேலும், பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதற்கு, அக்கட்சியின் தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்தார்.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது ஆங்காங்கே தவெக சார்பில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது.
அப்போது, வேலூர் கிழக்கு மாவட்ட த.வெ.க சார்பாக இன்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், அக்கட்சியால் தொடங்கப்பட்ட கையெழுத்து இயக்கம் தொடர்பாக பேனர் வைக்கப்பட்டிருந்தது.
அதில், "WE STAND FOR WOMEN HARRASEMENT" என்று அச்சிடப்பட்டுள்ளது சர்ச்சையாகியுள்ளது.
WE STAND AGAINST WOMEN HARASSMENT என்பதே பெண்கள் துன்புறுத்தலுக்கு எதிராக நாங்கள் நிற்கிறோம் என்பதற்கான பொருள்.
இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தொல்லை கொடுப்பவர்கள் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
- நட்புக்கும் ஒரு எல்லை உண்டு. நாம் நமது கலாச்சாரத்தை பேணி பாதுகாக்க வேண்டும்.
வேலூர்:
வேலூர் வி.ஐ.டி.யில் சர்வதேச மகளிர் தின விழா நடந்தது. விழாவிற்கு வேந்தர் ஜி. விசுவநாதன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக சென்னை ஐகோர்ட்டு நீதிபதி பவானி சுப்பராயன் பங்கேற்றார். அவர் பேசியதாவது:-
பெண்கள் சிறுவயதிலிருந்தே அடக்குமுறையில் இருந்தே வளர்க்கப்படுகிறார்கள் பருவ வயது அடைந்தவுடன் இயல்பாக மற்றவர்களுடன் பழக முடிவதில்லை. பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை ஏற்பட்டால் தயங்காமல் புகார் அளிக்கலாம்.
பெண் குழந்தைகளுக்கு சிறு வயது முதலே நற்போதனைகளை வழங்க வேண்டும். நல்ல தொடுதல், தீய தொடுதல் குறித்து குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கக் கூடாது. யாரும் தொடவே கூடாது என சொல்லிக் கொடுக்க வேண்டும். ஆண்களும் பெண்களும் சமம் என சிறு வயது முதலே குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தொல்லை கொடுப்பவர்கள் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சாதி, நிறம், உயரம் ஆகியவற்றை கொண்டு வேறுபாடுகள் வரக்கூடாது. பெண்களின் அழகை வர்ணித்தால் அவர்கள் மீது புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். மகாகவி பாரதியார், மோதி மிதித்து விடு பாப்பா அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா என கூறியுள்ளார்.
'நட்புக்கும் ஒரு எல்லை உண்டு. நாம் நமது கலாச்சாரத்தை பேணி பாதுகாக்க வேண்டும். பெண்கள் அதிகளவில் கல்வி கற்றால் சமூகம் மாற்றங்கள் ஏற்படும். நமது அடிப்படை உரிமைகள் குறித்து பெண்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். ஒரு காலத்தில் பெண்கள் சைக்கிள் ஓட்டவே அனுமதிக்கப்படவில்லை. தற்போது கல்பனா சாவ்லா முதல் சுனிதா வில்லியம்ஸ் வரை விண்வெளிக்கு சென்று வந்துள்ளனர். இதற்கு காரணம் பெண்கள் மனதிற்குள் இருக்கும் தீராத வேட்கை தான். 2 கைகள் தட்டினால் தான் ஓசை வரும். அதுபோல ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்ந்தால் தான் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- பேராசிரியர் அன்பழகனின் 5-ம் ஆண்டு நினைவு தினம்.
- அமைச்சர் துரைமுருகன் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி.
வேலூர்:
வேலூர் மாவட்டம், காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் பேராசிரியர் அன்பழகனின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு காட்பாடி தெற்கு பகுதி தி.மு.க. சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது.
இதில் அன்பழகன் உருவப் படத்திற்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:-
ஒவ்வொரு மாநில மொழிக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் தந்து வருகிறது என அமித்ஷா பேசியது குறித்து கேட்டதற்கு, பெரிய மனிதர்கள் எது வேண்டுமானாலும் பேசிவிட்டு போகலாம் என்றார்.
மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை தமிழ் மொழியில் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முயற்சி மேற்கொள்ள வேண்டும்-அமித்ஷா பேசியது குறித்து கேட்டதற்கு, `சொல்லுதல் யாவருக்கும் எளிய அரியவாம்' என திருக்குறளை மேற்கோள் காட்டினார்.
- பிரசாந்த் கிஷோர் இது குறித்து அ.தி.மு.க.விடமும் பேசியதாகத் தெரிகிறது.
- விஜய்க்கு ஆந்திர மாநில அரசியலைக் பிரசாந்த் கிஷோர் உதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
வேலூர்:
த.வெ.க. தலைவர் விஜய் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி வேகமாக காய் நகர்த்தி வருகிறார். மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க.வும் மாநிலத்தில் ஆட்சி செய்யும் தி.மு.க.வும் தனக்கு எதிரிகள் என்று விஜய் அறிவித்துள்ளார்.
மேலும் தனது தலைமையை ஏற்றுக்கொள்ளும் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் அறிவித்தார்.
அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் தமிழக வெற்றிக்கழக 2-ம் ஆண்டு விழாவில் விஜயை சந்தித்தார். அவர் விஜய்க்கு சில பரிந்துரைகளை வழங்கியதாக கூறப்படுகிறது.
இதனால் விஜய் தனது அரசியல் எதிர்காலத்தை மனதில் கொண்டு சமரசம் செய்து கொள்ள வேண்டிய நிலையில் இருப்பதாகத் தெரிகிறது.
விஜயை சந்தித்தபோது. நிரந்தர வாக்கு வங்கியைக் கொண்ட அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தால் மட்டுமே தி.மு.க. வெற்றியை தடுக்க முடியும் என்று பிரசாந்த் கிஷோர் விஜயிடம் கூறியதாகக் கூறப்படுகிறது.
பிரசாந்த் கிஷோர் இதுகுறித்து அ.தி.மு.க.விடமும் பேசியதாகத் தெரிகிறது. தற்போது அ.தி.மு.க.வுக்கு குறைந்தபட்சம் 25 சதவீத வாக்குகள் உள்ளன.
த.வெ.க. அதிகபட்சமாக 20 சதவீத வாக்குகளைப் பெற வாய்ப்புள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளையும் சேர்த்தால் மொத்த வாக்கு சதவீதம் 50 சதவீதமாக மாறும் என்றும் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விஜய்க்கு ஆந்திர மாநில அரசியலைக் பிரசாந்த் கிஷோர் உதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவும், நடிகர் பவன் கல்யாணும் தங்கள் கூட்டணியால் வெற்றி பெற்றனர்.
அங்கு சந்திரபாபு நாயுடு முதல் முதல்-மந்திரியாகவும், நடிகர் பவன் கல்யாண் துணை முதல் முதல்-மந்திரியாகவும் உள்ளனர்.
அதே பாணியில் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகவும், விஜய் துணை முதலமைச்சராகவும் உடன்பாடு ஏற்படுத்த பிரசாந்த் கிஷோர் ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகிறது.
ஆனால் இந்தக் கொள்கையை ஏற்க விஜய் இன்னும் தயங்குவதாகத் தெரிகிறது.
இருப்பினும் கூட்டணி இப்போதே உருவாக்கப்பட்டு விட்டதைப் போல த.வெ.க. தொண்டர்கள் உற்சாகமாக உள்ளனர்.
இதுகுறித்து சில த.வெ.க. நிர்வாகிகள் கூறியதாவது:-
சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து பல அரசியல் வியூக வல்லுநர்களுடன் விவாதித்து வருகின்றனர்.
கூட்டணியின் பொறுப்பு பிரசாந்த் கிஷோர் மற்றும் ஆதவ் அர்ஜுனாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
அவர்களின் ஆலோசனைகளை நிச்சயமாக ஏற்றுக்கொள்வதாக விஜய் கூறியுள்ளார்.
2026-ம் ஆண்டில் கூட்டணி ஆட்சி அமைக்க ஒப்புக்கொண்டாலும் அடுத்த தேர்தலில் தனது சொந்த ஆட்சி அமைக்கும் அளவிற்கு மக்கள் ஆதரவைப் பெறுவேன் என்று விஜய் தெரிவித்தார்.
அதன் ஒரு பகுதியாக தேர்தல் நெருங்கும்போது பொது எதிரியை தோற்கடிக்க சில சமரசங்களை செய்து கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- கேரளா மற்றும் தமிழகத்தில் ஆதார் அட்டைகள் வாங்கி உள்ளார்.
- வேலூரில் 3 ஆண்டுகள் பல இடங்களில் ரகசிய கூட்டம் நடத்தி உள்ளனர்.
வேலூர்:
தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில், 11 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த, மாவோயிஸ்டு பண்ணைபுரம் கார்த்திக் என்பவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில், 'கியூ' பிரிவு போலீசார் கைது செய்தனர்.
மேலும் ஓசூரில் நடந்த அதிரடி வேட்டையில் கோவை மாவட்டம், பொள்ளாச்சியைச் சேர்ந்த கார்த்திக்கின் கூட்டாளி சந்தோஷ்குமார் என்பவர் பிடிபட்டார். இவரிடம் விசாரித்ததில் வேலூரைச் சேர்ந்த மாவோயிஸ்டு ராகவேந்திரா (வயது 36) என்பவர் தலைவராக செயல்பட்டது தெரியவந்தது.
கேரளாவில் கைதான ராகவேந்திராவை காவலில் எடுத்து என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
ராகவேந்திராவின் சொந்த ஊர் வேலுார் சத்துவாச்சாரி. இவரின் தந்தை வணிக வரித்துறையில் காசாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
ராகவேந்திரா, பட்டப்படிப்பை பாதியில் நிறுத்தி உள்ளார். மாவோயிஸ்டு இயக்கத்தில் சேர்ந்தார். தன் பெயரை வினோத்குமார், ரவிமுகேஷ் என மாற்றி, கேரளா மற்றும் தமிழகத்தில் ஆதார் அட்டைகள் வாங்கி உள்ளார்.
கேரள மாநிலம், எடக்கரை வனப்பகுதியில், 20 மாவோயிஸ்டுகள் ஆயுதப் பயிற்சி பெற்றனர். இவர்களுக்கு, ராகவேந்திரா தான் தலைமை தாங்கினார்.
இவர்கள், மேற்கு தொடர்ச்சி மலையின், தமிழகம், கேரளா, கர்நாடகா வனப்பகுதிகளை, சிறப்பு மண்டலமாக அறிவித்து செயல்பட்டனர்.
கடந்த, 2015-ல், மாவோயிஸ்டு ரூபேஷ் கைது செய்யப்பட்டார். அதன்பின், மாவோயிஸ்டுகளை வழிநடத்தும் பொறுப்பை, ராகவேந்திரா ஏற்றார்.
அதே ஆண்டு, கேரள மாநிலம், நிலம்பூர் வனப்பகுதியில், மாவோயிஸ்டுகள் ஆயுதப்பயிற்சி பெற்றனர். இதில், குப்பு தேவராஜ் என்பவர், போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பாலக்காடு மாவட்டம், மஞ்சக்கண்டியில், மாவோயிஸ்டு மணிவாசகம், ரேமா, பெரிய கார்த்திக், அரவிந்த் ஆகியோரும் கொல்லப்பட்டனர்.
கடந்த, 2019-ல், வயநாடு பகுதியில் மாவோயிஸ்டு, 'கேடர் லீடர்' ஜலீல், 2020-ல் மற்றொரு கேடர் லீடர் வேல்முருகன், 'என்கவுண்டர்' செய்யப்பட்டனர்.
இதனால், ராகவேந்திரா தலைமையிலான மாவோயிஸ்டுகள், நிலை குலைந்தனர்.
அமைப்பை பலப்படுத்த, ராகவேந்திரா தலைமையில்பண்ணைபுரம் கார்த்திக், சந்தோஷ்குமார் மற்றும் ஷர்மிளா ஆகியோர், தமிழகத்தில் வேலுாரிலும், கேரளாவில் கண்ணாரிலும் ரகசிய கூட்டங்கள் நடத்தினர். வேலூரில் 3 ஆண்டுகள் பல இடங்களில் ரகசிய கூட்டம் நடத்தி உள்ளனர்.
கடந்த 2021-ல் நிலம்பூரில் மீண்டும் ஆயுதப் பயிற்சி பெற முயன்றனர். அப்போது ராகவேந்திரா சிக்கினார். மேலும் சமீபத்தில் ஆற்காட்டை சேர்ந்த மாவோயிஸ்டு ஒருவர் பெங்களூரில் சரணடைந்தார்.
இதுகுறித்து தொடர்ந்து ராகவேந்திராவிடம் விசாரணை நடந்து வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- பாபு ஷேக் காட்பாடியில் நடந்த கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றார்.
- சித்தேரி ரெயில்வே தண்டவாளம் அருகே உள்ள செங்கல் சூளை புதரில் பதுங்கி இருந்த பாபு ஷேக்கை போலீசார் கைது செய்தனர்.
வேலூர்:
கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் பாபு ஷேக். இவர் காட்பாடியில் நடந்த கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றார். கடந்த 2023-ம் ஆண்டு முதல் வேலூர் ஜெயிலில் தண்டனை அனுபவித்து வந்தார்.
அவருக்கு குடலிறக்க அறுவை சிகிச்சை செய்வதற்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அதிகாலை 5 மணி அளவில் பாபுஷேக் ஆஸ்பத்திரியிலிருந்து தப்பிச் ஓடி விட்டார். தப்பிச்சென்ற பாபு ஷேக்கை போலீசார் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை வேலூர் அடுத்த சித்தேரி ரெயில்வே தண்டவாளம் அருகே உள்ள செங்கல் சூளை புதரில் பதுங்கி இருந்த பாபு ஷேக்கை போலீசார் கைது செய்தனர்.
ஆஸ்பத்திரியில் இருந்து கைதி தப்பிச் சென்ற சம்பவத்தில் பணியில் கவனக் குறைவாக இருந்ததாக 4 ஆயுதப்படை போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு மதிவாணன் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.






