என் மலர்
வேலூர்
- மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதியம் 1 மணியளவில் திறந்து வைத்தார்.
- சிலம்பாட்டத்தில் கின்னஸ் சாதனை படைத்த 2 மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் இன்று, நாளை நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
இதற்காக இன்று சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 10.25 மணிக்கு புறப்படும் சாய்நகர் சீரடி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் செய்தார்.
ரெயில் நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் துரைமுருகன் தலைமையில் மாவட்ட செயலாளர் நந்தகுமார் எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், கட்சி முக்கிய நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அங்கிருந்து காரில் வேலூர் நகருக்கு வரும் அவருக்கு சாலையின் இருபுறமும் நின்று கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வேலூர் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.150 கோடி மதிப்பில் தரைத்தளம் மற்றும் 7 தளங்களுடன் கூடிய பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டு உள்ளது. இந்த மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதியம் 1 மணியளவில் திறந்து வைத்தார்.
தொடர்ந்து, வேலூர் மாவட்டத்தில் 21,766 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
வேலூர் சுற்றுலா மாளிகையில் நடந்த நிகழ்வில், 12 பேருக்கு பட்டா வழங்கி முதல்வர் தொடங்கி வைத்தார்.
12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகள் 9 பேருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார்.
சிலம்பாட்டத்தில் கின்னஸ் சாதனை படைத்த 2 மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார்.
இந்நிலையில், வேலூர் கெங்கநல்லூரில் திமுக சார்பில் கட்டப்பட்ட கலைஞர் அறிவாலயத்தை முதல்வர் திறந்து வைத்தார். 700 கிலோ வெண்கலத்தால் நிறுவப்பட்ட கலைஞர் கருணாநிதி சிலையையும் முதல்வர் திறந்து வைத்தார்
சிலை திறப்பை தொடர்ந்து 30 அடி உயர கொடிக்கம்பத்தில் திமுக கொடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்தார்.
- காட்பாடி முதல் வேலூர் வரை மேள தாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டதால் மாநகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது.
- மொத்தம் ரூ.7கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களையும் திறந்து வைத்தார்.
வேலூர்:
வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதியம் ரெயில் மூலம் காட்பாடி வந்தார்.
அவருக்கு வேலூர் மாவட்ட தி.மு.க. சார்பில் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் ஏ.பி. நந்தகுமார் எம்.எல்.ஏ. உட்பட கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து கார் மூலம் வேலூர் நோக்கி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வந்தார். வழிநெடுகிலும் அவருக்கு பல்வேறு இடங்களில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே வேலூர் மாநகர தி.மு.க. சார்பில் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் மேயர் சுஜாதா மற்றும் நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
காட்பாடி முதல் வேலூர் வரை மேள தாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டதால் மாநகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேலூர் பென்ட்லெண்ட் அரசு ஆஸ்பத்திரி வளாகத்திற்கு சென்றார்.
அங்கு ரூ.197.81 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள பென்ட்லெண்ட் அரசு வேலூர் பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மேலும் ரூ.1.20 கோடி மதிப்பில் சேர்க்காடு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம், ரூ.1.20 கோடி மதிப்பிலான திருவலம் பேரூராட்சி ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம், ரூ.50 லட்சம் மதிப்பில் ஒடுகத்தூர் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம், ரூ.50 லட்சம் மதிப்பில் ஊசூர் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம், ரூ.1.20 கோடி மதிப்பில் பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம், ரூ.60 லட்சம் மதிப்பில் வேலூர் மாநகராட்சி லட்சுமிபுரம் நகர்ப்புற சுகாதார நிலைய கட்டிடம், ரூ.1.20 கோடி மதிப்பில் தொரப்பாடி நகர்ப்புற சமுதாய சுகாதார நிலைய கட்டிடம், ரூ.30 லட்சம் மதிப்பில் பேரணாம்பட்டு நகர்ப்புற துணை சுகாதார நிலைய கட்டிடம், ரூ.30 லட்சம் மதிப்பில் அணைக்கட்டு மகமதுபுரம் துணை சுகாதார நிலைய கட்டிடம் என மொத்தம் ரூ.7கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களையும் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, ஆர்.காந்தி, மா.சுப்பிரமணியன். எஸ்.எம். நாசர், கலெக்டர் சுப்புலெட்சுமி, எம். எல்.ஏ.க்கள் நந்தகுமார், கார்த்திகேயன், மேயர் சுஜாதா, பல்வேறு துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- யோகா 5,000 ஆண்டுகள் பழமையானது.
- அனைவரும் யோகா செய்யுங்கள். அது மனதிற்கும் உடலுக்கும் நல்லது.
இன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி மாவட்டந்தோறும் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த வகையில், வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் நிர்வாகியான நடிகை நமீதா ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் நடிகை நமீதா பேசியதாவது:-
யோகா 5,000 ஆண்டுகள் பழமையானது. புதியது கிடையாது. 2007-ம் ஆண்டு பாலிவுட் நடிகை கரீனா கபூர் யோகா மூலம் உடலைக் கட்டுப்பாட்டோடு வைத்தபின் தான் யோகா பற்றி அனைவருக்கும் தெரிய வந்தது. அனைவரும் யோகா செய்யுங்கள். அது மனதிற்கும் உடலுக்கும் நல்லது.
என் குழந்தைகளிடம் நான் இன்றுவரை ஆங்கிலத்தில் பேசமாட்டேன். ஆனால் தமிழ், தெலுங்கு, குஜராத்தி உள்ளிட்ட தாய்மொழியில் தான் பேசுவேன். ஏனெனில் அவையே அவர்களின் தாய்மொழி. அதுதான் எனக்கு பெருமை. ஆங்கிலத்தை டி.வி.யிலோ, அல்லது வேறு எங்கேயாவது அவர்கள் கற்றுக்கொள்ளட்டும்.
அவர்களுக்கு ஸ்பைடர் மேன் தெரியாது. சூப்பர் மேன் தெரியாது, ஆனால் ஜெய் அனுமான் தெரியும் என்றார்.
- ஊழல் செய்தவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கிறது காவல் துறை.
- தி.மு.க.வில் இருந்து சில கட்சிகள் விலகும். விஜய்யோடும் சில கட்சிகள் கூட்டணி சேரும்.
கே.வி.குப்பம்:
வேலூர் மாவட்டம், கே.வி.குப்பத்தில் புதிய கலை, அறிவியல் கல்லூரி தொடக்க விழாவில் புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி. குப்பம் எம்.எல்.ஏ.வுமான பூவை எம்.ஜெகன் மூர்த்தி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
எனக்கு வாக்களித்த மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, மக்கள் மன்றத்திலும், சட்டமன்றத்திலும் தொடர்ந்து பேசி வருகிறேன். இதனால் என்மீது, தமிழக அரசு காழ்ப்புணர்ச்சி காரணமாக, சம்பந்தமே இல்லாமல், என்னை சிக்கலில் சிக்க வைத்துள்ளது. ஐகோர்ட்டு சில கருத்துக்களை சொல்லி உள்ளது. கோர்ட்டுக்கு நாங்கள் கட்டுப்பட்டுள்ளோம்.
ஊழல் செய்தவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கிறது காவல் துறை. நான் என்ன தீவிரவாதியா? பயங்கரவாதியா? எந்த பிரச்சனையும் இல்லாத ஒரு சாதாரண மனிதனான என்னிடம் இவ்வளவு நெருக்கடி கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? இது போன்ற நெருக்கடி கொடுத்தால், அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகி, அவர்கள் கூட்டணிக்கு வந்து விடுவேன் என்ற எண்ணமா? எப்போது இருந்தாலும், நியாயம், உண்மை வெளிப்படும்.
நாங்கள் நியாயத்தை எதிர்பார்க்கிறோம். இந்த மிரட்டல்களுக்கெல்லாம் நாங்கள் அடிபணிய மாட்டோம். தி.மு.க.வில் இருந்து சில கட்சிகள் விலகும். விஜய்யோடும் சில கட்சிகள் கூட்டணி சேரும். வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஜெயிலில் இருந்த நாகராஜுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
- வேலூர் ஜெயிலில் உடல் நலக்குறைவு காரணமாக கைதிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடக்கிறது.
வேலூர்:
வேலூர் விருப்பாட்சிபுரத்தை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 50). இவர் கடந்த 2018-ம் ஆண்டு போக்சோ வழக்கில் 10 ஆண்டுகள் தண்டனை பெற்று வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
நேற்று ஜெயிலில் இருந்த நாகராஜுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. தரையில் சரிந்து விழுந்த அவரை மீட்டு ஜெயில் ஆஸ்பத்திரியில் முதலுதவி அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அவரை சேர்த்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே நாகராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனைப் போல தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டி பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன் (70). இவர் கடந்த 2019-ம் ஆண்டு குற்ற வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார். இவருக்கு கடந்த மே மாதம் 31-ந் தேதி திடீரென மூச்சுத் திணறல் மற்றும் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அவர் வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு ஜெயராமன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது சம்பந்தமாக பாகாயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் ஜெயிலில் உடல் நலக்குறைவு காரணமாக கைதிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடக்கிறது.
இதனை தடுக்க ஜெயிலில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- சித்திரை முழு நிலவு மாநாட்டை பார்த்து தி.மு.க. பயந்து விட்டது.
- தண்டபாணி முதலியார் திருமண மண்டபத்தில் வேலூர் மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம் நடந்தது.
வேலூர்:
பா.ம.க.வில் டாக்டர் ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அன்புமணி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களை தொடர்ந்து நேற்று மாலை ராணிப்பேட்டை மாவட்ட பா.ம.க. பொதுக்குழுவில் அன்புமணி கலந்து கொண்டார்.
சித்திரை முழு நிலவு மாநாட்டை பார்த்து தி.மு.க. பயந்து விட்டது. வன்னியர்களுக்கு தி.மு.க. நம்பிக்கை துரோகம் இழத்தது.
நம் கட்சிக்குள் சூழ்ச்சியாளர்கள் உள்ளனர் அவர்கள் டாக்டர் ராமதாசிடம் தேவையில்லாததை சொல்லி சூழ்ச்சி செய்கிறார்கள் இந்த சூழ்ச்சியின் பின்னணியில் தி.மு.க. உள்ளது. அவர்களுடைய கனவு ஒருபோதும் பலிக்காது என்றார்.
இதனை தொடர்ந்து இன்று காலை அன்புமணி வேலூர் வந்தார். தண்டபாணி முதலியார் திருமண மண்டபத்தில் வேலூர் மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம் நடந்தது.
இதில் வேலூர், அணைக்கட்டு, குடியாத்தம், கே.வி.குப்பம், காட்பாடி சட்டமன்ற தொகுதி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அன்புமணி கலந்து கொண்டு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
- மினி பஸ் திட்டத்தால் ஆட்டோ டிரைவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு மாற்று திட்டம் கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
- அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தான் தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு சம்பவம் நிகழ்ந்தது.
வேலூர்:
வேலூர் புதிய பஸ் நிலையத்தில் புதிய விரிவான மினி பஸ் திட்ட தொடக்க விழா இன்று நடந்தது.
சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு 18 வழித்தடங்களில் மினி பஸ்களை இயக்குவதற்கான ஆணை வழங்கி, கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதன்பின் அவர் கூறியதாவது:-
நந்தன் கால்வாய் திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்துள்ளோம். எந்த காலத்திலும் பெண்களுக்கு எதிரான பிரச்சனைகள் இருந்து வருகிறது. அதுவும் வளர்ந்து வரும் சமுதாயத்தில் குற்றங்கள் நிகழும்.
ஆனால் அந்த குற்றத்தின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தான் முக்கியம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
மினி பஸ் திட்டத்தால் ஆட்டோ டிரைவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு மாற்று திட்டம் கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். தி.மு.க ஆட்சி காலத்தில் துப்பாக்கி கலாச்சாரம் தலை தூக்கி உள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர்.
ஆனால் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தான் தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு சம்பவம் நிகழ்ந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இணைகிறதா? என கேள்வி எழுப்பினர். அதற்கு தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ளன என துரைமுருகன் கூறினார்.
- கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- பல நூறு ஆண்டு பழமையான வடிவேல் சுப்பிரமணிய சாமி கோவில் இயற்கை எழிலுடன் அமைந்துள்ளது.
வேலூர்:
வேலூர், பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வெங்கடாபுரம் அடுத்த புது வசூர் தீர்த்தகிரி மலையில் பல நூறு ஆண்டு பழமையான வடிவேல் சுப்பிரமணிய சாமி கோவில் இயற்கை எழிலுடன் அமைந்துள்ளது.
இந்த கோவிலுக்கு முன்பாக 92 அடி உயரத்தில் மிகப்பிரமாண்டமான முருகன் சிலை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் சிலையை வடிவமைத்த திருவாரூர் ஸ்தபதி இந்த சிலையையும் வடிவமைத்துள்ளார். தென் வடக்கு திசையை பார்த்தவாறு மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட இந்த முருகன் சிலை மலை உச்சியில் கம்பீரமாக காட்சியளிக்கிறது.
தற்போது திருப்பணிகள் முடிந்து கோவிலில் மகா கும்பாபிஷேகம் இன்று காலை நடந்தது.
கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு கோவில் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. கோவிலில் இன்று இரவு வான வேடிக்கை மகா அபிஷேகம் அலங்கார தரிசனம் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.
இன்று மாலை 6 மணிக்கு இசையமைப்பாளர் கங்கை அமரன் குழுவினரின மாபெரும் இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 10 மணிக்கு சாமி வீதி உலா நடைபெறுகிறது.
பிரமாண்ட முருகன் சிலையின் முன்பு குடும்பத்துடன் பக்தர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
- டாக்டர் ராமதாசுடன் ஏற்பட்ட மோதலுக்கு பிறகு அன்புமணி கூட்டிய கூட்டங்களில் வட மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- பிரச்சனைக்கு விரைவில் தீர்வு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை இருப்பதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
வேலூர்:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவருடைய மகன் அன்புமணி இடையே கட்சி பூசல் தற்போது உச்ச கட்டத்தை எட்டியுள்ளது.
டாக்டர் ராமதாஸ் கட்சி நிர்வாகிகளை நீக்கி புதிய நிர்வாகிகளை நியமிப்பதும், நீக்கப்பட்ட நிர்வாகிகள் தொடர்வார்கள் என்று அன்புமணி அறிவிப்பதும் தொடர்கதையாகி வருகிறது.
நேற்று தைலாபுரத்தில் இருவரும் சந்தித்து பேசியதாக கூறப்பட்டது. ஆனால் இந்த சந்திப்பு தோல்வியில் முடிந்ததாக தகவல் வெளியாகி அந்த கட்சியினரை விரக்தியில் ஆழ்த்தியது.
இந்த நிலையில் வேலூர் மாநகர் பகுதி மற்றும் குடியாத்தம், அணைக்கட்டு பள்ளி கொண்டா, மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் டாக்டர் ராமதாசுக்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
அந்த சுவரொட்டிகளில் அய்யா தான் அடையாளம்.. அய்யா தான்... அதிகாரம் அய்யா தானே எல்லாம். சிறை சென்றவனே தலைவன் என்ற வாசகங்கள் அடங்கியுள்ளன.
டாக்டர் ராமதாசுடன் ஏற்பட்ட மோதலுக்கு பிறகு அன்புமணி கூட்டிய கூட்டங்களில் வட மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
குறிப்பாக வேலூர் மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் 80 சதவீதத்திற்கும் மேல் கலந்து கொண்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் டாக்டர் ராமதாசுக்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருப்பது கட்சியிலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த பிரச்சனைக்கு விரைவில் தீர்வு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை இருப்பதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
- பச்சிளம் குழந்தையின் கட்டை விரலை செவிலியர் வெட்டியுள்ளார்
- செவிலியர் நோயாளிகளுடன் நேரடி தொடர்பில் இல்லாத பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
வேலூர் மாவட்டத்தை சேர்ந்த நிவேதா என்ற பெண்ணிற்கு கடந்த 24-ஆம் தேதி வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.
இதனை தொடர்ந்து நிவேதா, குழந்தையுடன் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், குழந்தையின் கையில் குளுக்கோஸ் மற்றும் மருந்து செலுத்துவதற்காக போடப்பட்டிருந்த ஊசியை செவிலியர்கள் மாற்ற முயன்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக பச்சிளம் குழந்தையின் கட்டை விரலை செவிலியர் அருணா தேவி வெட்டியுள்ளார்.
இதனையடுத்து குழந்தையின் கையில் பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சை செய்வதற்காக உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலமாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு குழந்தையை அனுப்பி வைத்தனர்.
குழந்தையின் விரலை துண்டித்த செவிலியர் நோயாளிகளுடன் நேரடி தொடர்பில் இல்லாத பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில், குழந்தையின் கட்டை விரலை தவறுதலாக வெட்டிய செவிலியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குழந்தையின் பாட்டி புஷ்பா அளித்த புகாரின் அடிப்படையில் விரலை வெட்டிய செவிலியர் அருணா தேவி மீது வேலூர் தாலுகா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
- கடந்த 6 மாதங்களாக சுரேஷ், ஷூ கம்பெனிக்கு வேலைக்கு செல்லவில்லை.
- ஆத்திரமடைந்த சுரேஷ், தான் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியை எடுத்து சபீனாபானுவை தாக்க முயன்றுள்ளார்.
வேலூர்:
வேலூர் சின்ன அல்லாபுரம் கே.கே. நகர் திரவுபதியம்மன் கோவில் 3-வது தெருவை சேர்ந்தவர் சபீனாபானு (வயது 33). இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தை இல்லை.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்தார். சபீனாபானு, சின்னஅல்லாபுரத்தில் தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.
தொடர்ந்து சதுப்பேரியில் உள்ள தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்தார். அதே கம்பெனியில் வேலூர் விருப்பாட்சிபுரம் நேதாஜி தெருவை சேர்ந்த சுரேஷ் (35) என்பவரும் வேலை செய்து வந்தார்.
இருவரும் ஒரே இடத்தில் வேலை செய்து வந்ததால் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்திருந்தனர்.
இந்த நிலையில் கடந்த 6 மாதங்களாக சுரேஷ், ஷூ கம்பெனிக்கு வேலைக்கு செல்லவில்லை. இதனால் அவருடன் பேசுவதை சபீனா பானு தவிர்த்து வந்தார்.
பலமுறை சுரேஷ், சபீனாபானுவை தொடர்பு கொண்டும் அவர் பேச மறுத்ததாக தெரிகிறது. இதனால் சபீனாபானு மீது கோபத்தில் இருந்த சுரேஷ், நேற்றும் அவரை தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார்.
ஆனால் அவர் போனை எடுக்கவில்லை என்று தெரிகிறது.
இதையடுத்து நேற்று இரவு 11.30 மணியளவில் சுரேஷ், சின்ன அல்லாபுரத்தில் உள்ள சபீனாபானுவின் வீட்டுக்கு சென்றார். அவரிடம் 'ஏன் என்னிடம் 2 மாதங்களாக பேசவில்லை.
வேறு யாருடனாவது தொடர்பு உள்ளதா?' என்று கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் ஆத்திரமடைந்த சுரேஷ், தான் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியை எடுத்து சபீனாபானுவை தாக்க முயன்றுள்ளார்.
இதை பார்த்த சபீனாபானுவின் தந்தை சிராஜூதீன், தாய் ஆஜிரா ஆகியோர் தடுக்க முயன்றனர். இருவரையும் சுரேஷ் கம்பியால் தலையில் தாக்கினார்.
இதில் படுகாயமடைந்த அவர்கள் மயங்கினர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சபீனாபானு, வீட்டில் இருந்து வெளியே தப்பி ஓடினார். அவரை விரட்டி சென்ற சுரேஷ், சபீனாபானு வீட்டின் அருகில் இருந்த மின்கம்பம் அருகே மடக்கி அவரை சரமாரியாக தாக்கினார் .
இதில் சம்பவ இடத்திலேயே சபீனாபானு பரிதாபமாக இறந்தார். உடனே, சுரேஷ் தனது பைக்கில் ஏறி அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், பாகாயம் சப்-இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், ஏட்டுகள் சக்கரவர்த்தி, செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து சுரேஷின் செல்போன் எண்ணை வைத்து விருபாட்சிபுரம் நேதாஜி தெருவில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றனர்.
அங்கு தனது அறையில் மின்விசிறி கொக்கியில் சேலையால் தூக்கிட்ட நிலையில் சுரேஷ் பிணமாக தொங்கினார்.
சபீனாபானுவை கொலை செய்த பின்னர், வீட்டுக்கு திரும்பிய சுரேஷ், தூக்கிட்டு தற்கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து இருவரின் பிணத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
காயமடைந்து மயங்கிய நிலையில் கிடந்த சபீனாபானுவின் பெற்றோரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
மேலும் இந்த கொலை மற்றும் தற்கொலை தொடர்பாக பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, அம்மன் கண் திறப்பு நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.
- அம்மனுக்கு சிறப்பு அலங்கார ஆராதனைகள் நடந்தன.
குடியாத்தம்:
வேலூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கெங்கையம்மன் சிரசு ஊர்வலம் இன்று நடந்தது.
காலை 5.30 மணியளவில் குடியாத்தம் தரணம்பேட்டை முத்தியாலம்மன் கோவிலில் இருந்து அம்மன் சிரசு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. அப்போது, சிலம்பாட்டம், மயிலாட்டம், புலியாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன், பம்பை, உடுக்கை, மேள-தாளம் முழங்க அம்மன் சிரசு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.
பழைய ஆஸ்பத்திரி ரோடு, காந்திரோடு, ஜவஹர்லால் தெரு வழியாக நடைபெற்ற ஊர்வலம் கெங்கையம்மன் கோவிலில் நிறைவடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். குறிப்பாக, தரணம்பேட்டை முதல்கோபாலபுரம் வரை சாலையின் இருபுறமும் பக்தர்கள் திரண்டிருந்தனர்.
வேலூர் மாவட்டம் மட்டுமின்றி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சிரசு ஊர்வலம் சென்ற பாதையில் கெங்கை யம்மனுக்கு பூமாலை சூட்டியும், கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு மக்கள் வெள்ளத்தில் நீந்திச்சென்ற சிரசு, கெங்கையம்மன் கோவில் மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த சண்டாளச்சி உடலில் பொருத்தப்பட்டது.
தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, அம்மன் கண் திறப்பு நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.
மேலும் பக்தர்கள் தேங்காய்களை உடைத்தும், ஆடு, கோழி பலியிட்டும், பலர் அலகுத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்கார ஆராத னைகள் நடந்தன. பின்னர் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
மலர் மாலை, எலுமிச்சை மாலை, ரூபாய் நோட்டு மாலை ஆகியவற்றை பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து அம்மனுக்கு அணிவித்து வழிபட்டனர். வழி எங்கும் பக்தர்களுக்கு நீர், மோர், கூழ் இலவசமாக வழங்கினர்.
தொடர்ந்து இன்று இரவு அம்மன் உடலில் இருந்து சிரசு பிரிக்கப்பட்டு, கவு ண்டன்ய ஆற்றங்கரை யில் அலங்காரம் கலைக்கப்பட்டு மீண்டும் கோவிலுக்கு கொண்டு வரப்பட உள்ளது.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.






