என் மலர்
திருப்பூர்
- கடந்த 19-ந் தேதி முதல் விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
- திருப்பூர், கோவை மாவட்டங்களில் சுமார் 2 லட்சம் கிலோ நூல்கள் பயன்படுத்தப்படுகிறது.
பல்லடம்:
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றது. இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 5 லட்சம் பேர் வேலை வாய்ப்பை பெற்று வருகின்றனர்.
இந்தநிலையில், மின் கட்டண உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, உதிரிபாகங்கள் விலை உயர்வு, வாடகை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் விசைத்தறி தொழில் நலி வடைந்துள்ளது. கடந்த 2022 நெசவு கூலி உயர்வு ஒப்பந்தத்தின்படி கூலி உயர்வு வழங்க வலியுறுத்தியும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், கடந்த 19-ந் தேதி முதல் விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விசைத்தறிகள் வேலை நிறுத்தப்போராட்டத்தால் மறு சுழற்சி நூல் மில்களில் ரூ.300 கோடி மதிப்பிலான நூல்கள் தேக்கமடைந்துள்ளது.
இது குறித்து மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு மாநில தலைவர் ஜெயபால் நிருபர்களிடம் கூறியதாவது:-
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் விசைத்தறிகள் வேலை நிறுத்த போராட்டத்தால் ரூ.300 கோடி மதிப்பிலான நூல்கள் தேக்கமடைந்துள்ளது. தமிழ்நாட்டில் 1,700 ஸ்பின்னிங் நூற்பாலைகளும், 650 ஓ.இ.மில் என்கின்ற மறுசுழற்சி நூற்பாலைகளும், 5.5 லட்சம் விசைத்தறிகளும் உள்ளன. இதில் நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.10 கோடி மதிப்பில் 5.50 லட்சம் கிலோ நூல்கள் உற்பத்தியாகின்றது.
இதில் திருப்பூர், கோவை மாவட்டங்களில் சுமார் 2 லட்சம் கிலோ நூல்கள் பயன்படுத்தப்படுகிறது. இவற்றின் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.
இதற்கிடையே விசைத்தறிகள் வேலை நிறுத்தத்தால் நூற்பாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் ரூ.300 கோடி மதிப்பிலான நூல்கள் தேங்கியுள்ளது. எனவே தமிழ்நாடு அரசு இதனை விசைத்தறியாளர்கள்-ஜவுளி உற்பத்தியாளர்கள் பிரச்சனை என்று பாராமல், ஒட்டு மொத்த ஜவுளி தொழிலுக்கு ஏற்பட்ட பிரச்சனை என்பதனை கருத்தில் கொண்டு உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- அவருக்கு மதுரையைச்சேர்ந்த ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.
- அந்த பெண்ணுக்கு 16 வயதில் மகள் உள்ளார்.
மதுரை அலங்காநல்லூரை சேர்ந்தவர் பிரான்சிஸ்(வயது 48). இவருக்கு திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளனர். அவருக்கு மதுரையைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணுக்கு 16 வயதில் மகள் உள்ளார்.
இந்த நிலையில் பிரான்சிஸ் தனது கள்ளக்காதலி மற்றும் கள்ளக்காதலியின் மகள் ஆகியோருடன் கடந்த 3 மாதத்திற்கு முன்பு திருப்பூர் மாஸ்கோ நகரில் வாடகைக்கு தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளார்.
அப்போது கள்ளக்காதலியின் 16 வயது மகளை பிரான்சிஸ் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்தநிலையில் அந்த சிறுமிக்கு திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவரிடம் சென்று பரிசோதித்த போது சிறுமி 8 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து சிறுமியின் தாய் திருப்பூர் வடக்கு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிரான்சிசை கைது செய்தனர்.
- போலீசார் தேடுவதை அறிந்த தம்பதியினர் தலைமறைவானார்கள்.
- ஐதராபாத்தில் தங்கியிருந்த தம்பதியை கைது செய்து திருப்பூர் அழைத்து வந்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் ராமசாமி. இவர் அதே பகுதியில் பனியன் துணிகள் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரிடம் இருந்து தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சோ்ந்த பிரவீன் குமார், கல்பனா தம்பதியினர் ரூ.1 கோடியே 45 லட்சத்திற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பனியன் துணிகள் கொள்முதல் செய்துள்ளனர். ஆனால் அந்த பணத்தை தராமல் ஏமாற்றி வந்தனர்.
இதனால் ஏமாற்றம் அடைந்த மகேஷ் ராமசாமி ஐதராபாத் தம்பதி மீது திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் திருப்பூர் மாநகர மத்திய குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
போலீசார் தேடுவதை அறிந்த தம்பதியினர் தலைமறைவானார்கள். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த தம்பதியை மத்திய குற்றப்பிரிவு தனிப்படையினர் தெலுங்கானா சென்று தேடிவந்தனர். அப்போது ஐதராபாத்தில் தங்கியிருந்த தம்பதியை கைது செய்து திருப்பூர் அழைத்து வந்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- திருப்பூர் பின்னலாடைத்துறையின் பங்கு 49 சதவீதமாகும்.
- அடுத்த ஆண்டுகளில் இந்த மேல்நோக்கிய வளர்ச்சியை தக்க வைப்போம்.
திருப்பூர்:
இந்தியாவின் ஆயத்த ஆடை வர்த்தகம் தொடர்ந்து ஏறுமுகத்தில் பயணித்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் முந்தைய ஆண்டை விட வர்த்தகம் உயர்ந்து வந்த நிலையில், கடந்த 2024-25-ம் நிதியாண்டு ஏற்றுமதியில் 10 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இந்தியாவில் கடந்த நிதியாண்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி ரூ.1 லட்சத்து 36 ஆயிரம் கோடியாகும். இதில் திருப்பூர் பின்னலாடைத்துறையின் பங்கு 49 சதவீதமாகும்.
திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது 20 சதவீதம் வளர்ச்சியை எட்டியுள்ளது. இந்த சாதனை, பின்னலாடை துறையின் நீடித்த வேகத்தையும், இந்திய நிட்வேர் மற்றும் ஆடைகளுக்கான வலுவான உலகளாவிய தேவையை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
இதுகுறித்து ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.) துணை தலைவர் சக்திவேல் கூறியதாவது:-
இந்திய ஆயத்த ஆடையின் சீரான, நிலையான வளர்ச்சி மாதந்தோறும் திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகத்தின் மீதான நம்பிக்கை பிரதிபலிப்பதாக இருந்தது. குறிப்பாக ஆயத்த ஆடை வர்த்தகத்தில் இந்த ஆண்டு திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி 15 முதல் 20 சதவீதம் வளர்ச்சியை எட்டும் என்று கடந்த ஜனவரி மாதம் நான் தெரிவித்தேன்.
அதபோல் கடந்த ஆண்டை விட திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் 20 சதவீதம் வளர்ச்சியை எட்டியுள்ளது. நாம் எதிர்பார்த்தது போல் ரூ.40 ஆயிரம் கோடி என்ற இலக்கை அடைந்து சாதனை படைத்தது மகிழ்ச்சியை அளிக்கிறது. பின்னலாடை ஏற்றுமதியின் வளர்ச்சி என்பது திருப்பூர் உற்பத்தியாளர்களுக்கு மிகவும் ஊக்கமளிக்கும். ஏற்றுமதியாளர்களின் உலகளாவிய போட்டித்தன்மையை எடுத்துக்காட்டுகிறது. அடுத்த ஆண்டுகளில் இந்த மேல்நோக்கிய வளர்ச்சியை தக்க வைப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் கூறியதாவது:-
முந்தைய ஆண்டைவிட, கடந்த நிதியாண்டின் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் குறைந்தபட்சம் 15 சதவீதம் வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் 20 சதவீதம் வளர்ச்சியை எட்டியுள்ளது. ரூ.40 ஆயிரம் கோடியை எட்டுவோம் என்று நம்பினோம். அதை நோக்கியே எங்களின் பயணம் இருந்தது. அதன்படி கடந்த நிதியாண்டு வர்த்தகம் ரூ.40 ஆயிரம் கோடியை எட்டியது மகிழ்ச்சியளிக்கிறது. 2030-ம் ஆண்டுக்குள் ரூ.1 லட்சம் கோடி என்ற இலக்குடன் பயணித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அனைத்து தொண்டர்களின் ஒரே நோக்கம் தி.மு.க.வை தோற்கடிக்க வேண்டும் என்பது தான்.
- உண்மையான செய்திகளை முழுமையாக கொண்டு சென்றால் பிரச்சனை இல்லை.
திருப்பூர்:
அ.தி.மு.க., பா.ஜ.க., கூட்டணி தொடர்பாக திருப்பூரில் 2 கட்சி நிர்வாகிகள் பேசிய பேச்சுகள் சற்று சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் திருப்பூரில் இன்று அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவை இணை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான குணசேகரன், பா.ஜ.க. திருப்பூர் மாவட்ட தலைவர் சீனிவாசன் ஆகியோர் ஒன்றாக இணைந்து நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது சீனிவாசன் கூறுகையில்,
முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் பேசிய வீடியோ முழுமையாக வெளியிடப்படவில்லை என்பதால் தான் தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி பிடிக்காதவர்களால் திட்டமிட்டு வீடியோ பரப்பப்பட்டுள்ளது. அனைத்து தொண்டர்களின் ஒரே நோக்கம் தி.மு.க.வை தோற்கடிக்க வேண்டும் என்பது தான்.
இரண்டும் சேர்ந்தால் தி.மு.க., காணாமல் போய்விடும் என்பதால் தான் திட்டமிட்டு பரப்பப்பட்டுள்ளது. இஸ்லாமியர்கள் பயப்பட வேண்டாம் என்று தான் குணசேகரன் தெரிவித்துள்ளார். ஆவாஸ் யோஜனா திட்டத்தில் ஏராளமான பயன்களை பெற்றவர்கள் இஸ்லாமியர்கள். பொய்யான வாக்குறுதிகளை வழங்குபவர்கள் நாங்கள் அல்ல.
இந்த முறை எங்கள் கூட்டணிக்கு அதிகபட்ச இஸ்லாமியர்கள் வாக்கு கிடைக்கும். திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் கார்த்தி சாதாரண தொண்டரின் உணர்வு போல தான் பேசியுள்ளார். அவர் மீது எந்தவிதமான நடவடிக்கையும் இருக்காது. அவர் அ.தி.மு.க., குறித்து எதுவும் பேசவில்லை என்றார்.
அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் பேசுகையில்,
சமூகவலைதளங்கள் அதிக வளர்ச்சி பெற்றுள்ளது. உண்மையான செய்திகளை முழுமையாக கொண்டு சென்றால் பிரச்சனை இல்லை. அதனை வெட்டி ஒட்டி போடும் போது தான் சிக்கல் எழுகிறது. அ.தி.மு.க., பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்ற கருத்தை தான் நான் ஏற்பேன். கட்சி ஒற்றுமையாக உள்ள இடத்தில் தான் நான் இருப்பேன். எல்லோரையும் தாய் போல் காப்பாற்றியவர் எடப்பாடி பழனிசாமி.
இஸ்லாமியர்களுக்கு எதிரான திட்டங்களை கொண்டு வந்தது தி.மு.க., பின்னர் பழியை தூக்கி மற்றவர்கள் மேல் போட்டு விடுகின்றனர். எதிரியை வீழ்த்த அமைக்கப்பட்டதே தேர்தல் கூட்டணி. தேசியத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றும் கட்சியை வீழ்த்தவே இந்த கூட்டணி. அடிச்சு ஆடுவோம். இந்த கூட்டணி தமிழகத்தில் 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். இஸ்லாமியர்கள், இந்துக்கள், கிறிஸ்துவர்களுக்கான கூட்டணி இது தான்.தி.மு.க., கூட்டணி குடும்பத்திற்கான கூட்டணி. அ.தி.மு.க.-பா.ஜ.க., கூட்டணி ஆட்சியின் போது தான் தமிழகத்திற்கு 11 மருத்துவ கல்லூரிகள் உள்பட பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது என்றார்.
- பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தது வருத்தமாக உள்ளது.
- இஸ்லாமியர்களுடன் அ.தி.மு.க. துணை நிற்கும்.
தமிழ்நாட்டில் நடைபெற இருக்கும் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளது.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன் கூறியதாவது:
* பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தது வருத்தமாக உள்ளது.
* இஸ்லாமியர்கள் யாரும் வருத்தம் கொள்ள வேண்டாம் என்று அவர் கூறினார்.
கூட்டத்தில் பேசிய திருப்பூர் மாமன்ற எதிர்க்கட்சி கொறடா கண்ணப்பன் கூறுகையில், நிர்பந்தம் காரணமாக பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்களுடன் அ.தி.மு.க. துணை நிற்கும் என்று அவர் நாதழுதழுக்க பேசினார்.
- பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.
- வாழை மரங்கள் கணக்கெடுக்கும் பணியில் தோட்டக்கலைத்துறையினா் ஈடுபட்டுள்ளனா்.
அவினாசி:
திருப்பூா் மாவட்டம் அவினாசி, சேவூா் சுற்று வட்டாரப்பகுதிகளில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் செம்பியநல்லூா் ஊராட்சி கந்தம்பா ளையத்தில் கணேஷ், ராஜாமணி, சுப்பிரமணி ஆகியோரது தோட்டத்தில் குலை தள்ளிய நிலையில் இருந்த 2 ஆயிரத்துக்கும் அதிகமான வாழை மரங்கள் சேதமடைந்தன.
இதேபோல் சேவூா் சுற்று வட்டாரப்பகுதிகளில் வீசிய சூறாவளிக்காற்றால் முறியாண்டம்பாளையம், மங்கரசுவலையபாளையம், சாலையப்பாளையம், கானூா், புலிப்பாா் உள்ளி ட்ட பகுதிகளில் அறு வடைக்கு தயாராக இருந்த நேந்திரன், செவ்வாழை, ரஸ்தாலி ஆகிய வகைகளை சோ்ந்த 8 ஆயிரத்துக்கும் அதிகமான வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன.
கடந்த 2 நாட்களில் அவிநாசி, சேவூா் சுற்று வட்டாரப்பகுதிகளில் வீசிய சூறாவளிக்காற்றுக்கு 10 ஆயிரத்துக்கும் அதிகமான வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்துள்ளன. இதனால் பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.
மேலும், சேதமடைந்த வாழை மரங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் தெரி வித்துள்ளனா்.இதையடுத்து சேதமடைந்த வாழை மரங்கள் குறித்து கணக்கெடுக்கும் பணியில் தோட்டக்கலைத்துறையினா் ஈடுபட்டுள்ளனா்.
- திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்ளை தடுக்க மாநகர போலீசாா் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
- வாகன சோதனையின்போது வாகன ஓட்டுனர் பெயர், வாகன எண் ஆகியவை பதிவு செய்யப்படுகிறது.
திருப்பூர்:
திருப்பூரில் பனியன் சார்ந்த தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன. பனியன் நிறுவனங்களில் பணியாற்ற வெளிமாவட்டம் மற்றும் வடமாநில தொழிலாளிகள் ஏராளமானோர் தங்கி பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்புத்தாண்டு கொண்டாட திருப்பூரில் தங்கி வேலை செய்யும் வெளி மாவட்ட தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வருகின்றனர். இதனால் பல்வேறு பகுதிகளில் திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்ளை தடுக்க மாநகர போலீசாா் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் திருப்பூர் மாநகரின் முக்கிய பகுதிகளில் நேற்று போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். தொடர்ந்து வாகன சோதனையின்போது வாகன ஓட்டுனர் பெயர், வாகன எண் ஆகியவை பதிவு செய்யப்படுகிறது. அதேபோல் முறையான ஆவணங்கள் இல்லாமல் வரும் இருசக்கர வாகனம், தலைக்கவசம் இல்லாமல் வருபவர்கள் மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு அபராதம் விதித்தனர்.
- விபத்தில் முருகன் மற்றும் அவரது மனைவி கல்யாணி உயிரிழந்தனர்.
- 19 வயதுள்ள ஓட்டுநர் உரிமம் இல்லாத கவியரசன் ஆம்புலன்சை ஓட்டிச் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சாலையோரமாக நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து ஏற்பட்டது.
முருகன் என்பவரை மேல் சிகிச்சைக்காக கோவைக்கு அழைத்து சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் முருகன் மற்றும் அவரது மனைவி கல்யாணி உயிரிழந்தனர்.
ஆம்புலன்ஸை ஓட்டிய கவியரசனுக்கு 2 கால்களும் முறிந்த நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
19 வயதுள்ள ஓட்டுநர் உரிமம் இல்லாத கவியரசன் ஆம்புலன்சை ஓட்டிச் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கோடையிலும் பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
- பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் திருமூர்த்திமலையில் குவிந்தனர்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலையில் பஞ்சலிங்க சுவாமி கோவில், பஞ்சலிங்க அருவி மற்றும் மலையடிவாரத்தில் தோணியாற்றின் கரையில் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில், திருமூர்த்தி அணை உள்ளது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
தற்போது கோடை வெயிலின் தாக்கம் மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பஞ்சலிங்க அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கோடையிலும் பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் திருமூர்த்திமலையில் குவிந்தனர். அவர்கள் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வரும் நிலையில், நீண்ட வரிசையில் காத்திருந்து, அருவியில் குளித்து வருகின்றனர்.
- பக்தர்கள் பலர் கைக்குழந்தையுடனும் குண்டம் இறங்கினர்.
- மாலை 3.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் மிகவும் பழமை வாய்ந்ததும், கொங்கு மண்டலத்தில் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வங்களில் ஒன்றுமாகிய பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா சகுனம் கேட்டல் நிகழ்ச்சியுடன் கடந்த மார்ச் மாதம் 11-ந்தேதி தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி இன்று அதிகாலை 4 மணிக்கு தொடங்கியது. இதில் திருப்பூர், ஈரோடு, கோவை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும், தமிழ்நாட்டில் பிற பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் மேற்கொண்டு, இங்கு வந்து பக்தி பரவ சத்துடன் குண்டம் இறங்கினர்.

ஓம் சக்தி, ஓம் காளி கோஷம் விண்ணதிர பக்தர்கள் பலர் கைக்குழந்தையுடனும் குண்டம் இறங்கினர். முன்னதாக நேற்று இரவே லட்சக்கணக்கான பக்தர்கள் பெருமாநல்லூர் வந்து குவிந்தனர்.
பிற்பகல் 11 மணிக்கு குண்டம் மூடப்பட்டது. பின்னர் சிறப்பு அபிஷேக பூஜை, அம்மன் யாழி வாகனத்தில் திருத்தேர் எழுந்தருளல், மண்டபக்கட்டளை, மிராசுதாரர்களுக்கு மரியாதை செலுத்துதல், தேங்காய் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது.
மாலை 3.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவையொட்டி போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு ள்ளனர்.
நாளை 9-ந்தேதி முதல் காலை , இரவு அபிஷேகம், தீபாராதனை, அம்மன் வீதி உலா, மண்டபக்கட்டளை நடக்கிறது. 12-ந்தேதி காலை 11 மணிக்கு மகாதரிசனம் , அம்மன் புறப்பாடு, கொடி இறக்கம், மண்டபக்கட்டளை யுடன் விழா நிறைவடைகிறது.
- கடுமையான சூறைக்காற்று வீசியது.
- கல் விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழப்பு.
பல்லடம்:
திருப்பூர் மாநகர் மற்றும் பல்லடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக செய்த மழையின் போது மங்களம் சாலை, இடுவாய், பல்லடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கடுமையான சூறைக்காற்று வீசியது.
இதில் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்தது. மின் கம்பங்களும் சாய்ந்த தால் சின்ன ஆண்டி பாளையம், குளத்துபுதூர், இடுவாய் பல்லடத்தில் பல்வேறு பகுதிகளிலும் மின்சார வினியோகம் தடைப்பட்டது.
இதனால் பொதுமக்கள் இரவு முழுவதும் தவித்தனர். இதனை தொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள் மரங்களை அகற்றும் பணியிலும் மின்கம்பங்களை சீரமைக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மாலைக்குள் மின்விநியோகம் சீராகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மழை காரணமாக 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது திருப்பூர் அம்மா பாளையம் பாறைக்குழி பகுதியில் உள்ள தகர கொட்டகையில் திருவண்ணாமலையை சேர்ந்த ராஜ் என்பவர் தங்கி இருந்தார்.
மழையின் போது மேற்கூரை தகரம் மற்றும் கல் விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே ராஜ் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து திருமுருகன் பூண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் பல்வேறு இடங்களில் மேற்கூரைகள் காற்றில் பறந்தன. பல்லடம் மங்கலம் ரோடு சிதம்பரனார் வீதியில் மரம் ஒன்று சாய்ந்து விழுந்ததில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக பல்லடம் நகரில் மின்தடை ஏற்பட்டது.
பல்லடம் மகாலட்சுமி நகர் அருகே பலத்த காற்றினால் மரங்கள் சாய்ந்து விழுந்தன.இதே போல காமநாய க்கன்பாளையம் போலீஸ் நிலையம் அருகே தென்னை மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் அங்குள்ள மாரியம்மன் கோவில் வீதியில் உள்ள மின் கம்பிகள் அறுந்து விழுந்தன.
பல்லடம் அருகே பச்சாங்காட்டுபாளையம் பகுதியில் உள்ள சாயத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த மதுரையை சேர்ந்த செல்லையா என்பவரது மகன் வினோத் (40), ரோட்டில் நடந்து செல்லும் போது கீழே கிடந்த மின்சார வயரை மிதித்ததில் மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு ள்ளனர்.






