என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருப்பூரில் கனமழை: மின் கம்பிகள் அறுந்து விழுந்து 2 பேர் பலி
- கடுமையான சூறைக்காற்று வீசியது.
- கல் விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழப்பு.
பல்லடம்:
திருப்பூர் மாநகர் மற்றும் பல்லடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக செய்த மழையின் போது மங்களம் சாலை, இடுவாய், பல்லடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கடுமையான சூறைக்காற்று வீசியது.
இதில் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்தது. மின் கம்பங்களும் சாய்ந்த தால் சின்ன ஆண்டி பாளையம், குளத்துபுதூர், இடுவாய் பல்லடத்தில் பல்வேறு பகுதிகளிலும் மின்சார வினியோகம் தடைப்பட்டது.
இதனால் பொதுமக்கள் இரவு முழுவதும் தவித்தனர். இதனை தொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள் மரங்களை அகற்றும் பணியிலும் மின்கம்பங்களை சீரமைக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மாலைக்குள் மின்விநியோகம் சீராகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மழை காரணமாக 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது திருப்பூர் அம்மா பாளையம் பாறைக்குழி பகுதியில் உள்ள தகர கொட்டகையில் திருவண்ணாமலையை சேர்ந்த ராஜ் என்பவர் தங்கி இருந்தார்.
மழையின் போது மேற்கூரை தகரம் மற்றும் கல் விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே ராஜ் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து திருமுருகன் பூண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் பல்வேறு இடங்களில் மேற்கூரைகள் காற்றில் பறந்தன. பல்லடம் மங்கலம் ரோடு சிதம்பரனார் வீதியில் மரம் ஒன்று சாய்ந்து விழுந்ததில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக பல்லடம் நகரில் மின்தடை ஏற்பட்டது.
பல்லடம் மகாலட்சுமி நகர் அருகே பலத்த காற்றினால் மரங்கள் சாய்ந்து விழுந்தன.இதே போல காமநாய க்கன்பாளையம் போலீஸ் நிலையம் அருகே தென்னை மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் அங்குள்ள மாரியம்மன் கோவில் வீதியில் உள்ள மின் கம்பிகள் அறுந்து விழுந்தன.
பல்லடம் அருகே பச்சாங்காட்டுபாளையம் பகுதியில் உள்ள சாயத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த மதுரையை சேர்ந்த செல்லையா என்பவரது மகன் வினோத் (40), ரோட்டில் நடந்து செல்லும் போது கீழே கிடந்த மின்சார வயரை மிதித்ததில் மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு ள்ளனர்.






