என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "banana trees damaged"

    • சூறாவளி காற்றால் சுமார் 20-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன.
    • வாழை விவசாயிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே முசுவனூத்து கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 62). இவர் தற்போது வாழை, தென்னை மரங்களை சாகுபடி செய்து இருந்தார். இப்பகுதியில் கடந்த 2 நாட்களாக பெய்த சூறாவளி காற்றால் சுமார் 20-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன.

    மேலும் மிளகாய்பட்டி, ஆண்டிபட்டி, முசுவனூத்து உள்ளிட்ட கிராமங்களிலும் மின்வினியோகம் தடைபட்டு இருளில் மூழ்கி கிடந்தன. இந்நிலையில் மின்சார வாரியத்துறையின் நடவடிக்கையால் மீண்டும் மின்வினியோகம் வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே மீண்டும் திடீரென இப்பகுதியில் வீசிய சூறாவளி காற்றால் ராஜேந்திரன் என்பவரின் தோட்டத்தில் இருந்த சுமார் 2000 வாழை மரங்களின் நடுப்பகுதி முறிந்து தரையில் சாய்ந்தது. இதைப் பார்த்த விவசாயி ராஜேந்திரன் மற்றும் அவரது உறவினர்கள் மிகுந்த கவலையடைந்தனர்.

    மேலும் இதுகுறித்து விவசாயிகள் தெரிவிக்கையில், திண்டுக்கல் மாவட்டத்தில் அக்னி நட்சத்திர சீசனில் மழை பெய்வது ஆறுதலாக இருந்த போதிலும், சூறாவளி காற்றுடன் பெய்த மழை பலத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. மாவட்டத்தில் வாழை விவசாயிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். நிலக்கோட்டை, பழனி, சத்திரப்பட்டி, ஆத்தூர் உள்ளிட்ட இடங்களிலும் இதுபோன்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    மேலும் தென்னை மரங்களும் சாய்ந்து விழுந்துள்ளன. எனவே வேளாண் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட விவசாய இடங்களில் ஆய்வு செய்து அவர்களுக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    • பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.
    • வாழை மரங்கள் கணக்கெடுக்கும் பணியில் தோட்டக்கலைத்துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

    அவினாசி:

    திருப்பூா் மாவட்டம் அவினாசி, சேவூா் சுற்று வட்டாரப்பகுதிகளில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் செம்பியநல்லூா் ஊராட்சி கந்தம்பா ளையத்தில் கணேஷ், ராஜாமணி, சுப்பிரமணி ஆகியோரது தோட்டத்தில் குலை தள்ளிய நிலையில் இருந்த 2 ஆயிரத்துக்கும் அதிகமான வாழை மரங்கள் சேதமடைந்தன.

    இதேபோல் சேவூா் சுற்று வட்டாரப்பகுதிகளில் வீசிய சூறாவளிக்காற்றால் முறியாண்டம்பாளையம், மங்கரசுவலையபாளையம், சாலையப்பாளையம், கானூா், புலிப்பாா் உள்ளி ட்ட பகுதிகளில் அறு வடைக்கு தயாராக இருந்த நேந்திரன், செவ்வாழை, ரஸ்தாலி ஆகிய வகைகளை சோ்ந்த 8 ஆயிரத்துக்கும் அதிகமான வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன.

    கடந்த 2 நாட்களில் அவிநாசி, சேவூா் சுற்று வட்டாரப்பகுதிகளில் வீசிய சூறாவளிக்காற்றுக்கு 10 ஆயிரத்துக்கும் அதிகமான வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்துள்ளன. இதனால் பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.

    மேலும், சேதமடைந்த வாழை மரங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் தெரி வித்துள்ளனா்.இதையடுத்து சேதமடைந்த வாழை மரங்கள் குறித்து கணக்கெடுக்கும் பணியில் தோட்டக்கலைத்துறையினா் ஈடுபட்டுள்ளனா். 

    கடலூர் பகுதியில் நேற்று வீசிய சூறை காற்றில் 200 ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. இதைப்பார்த்த விவசாயிகள் கவலை அடைந்தனர்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காலையில் கடும் வெயிலும், மாலையில் இடி-மின்னல், சூறைக்காற்றுடன் பலத்த மழையும் பெய்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று மாலை கடலூர், திருப்பாதிரிப்புலியூர், ராமாபுரம், முதுநகர், மஞ்சக்குப்பம், தூக்கணாம்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் இடி-மின்னல் சூறை காற்றுடன் பலத்த மழை பெய்தது.

    இதில் நெல்லிக்குப்பம் காமராஜர் நகர் பகுதியில் மின் கம்பம் முறிந்து விழுந்து மின்தடை ஏற்பட்டது. மேலும் கடலூர் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.

    கடலூர் அடுத்த ராமாபுரம், வி.காட்டுப்பாளையம், ஒதியடிக்குப்பம், காத்தாங் குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் வாழை மரம் விவசாயிகள் பயிரிட்டு இருந்தனர்.

    நேற்று வீசிய சூறை காற்றில் 200 ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. இதைப்பார்த்த விவசாயிகள் கவலை அடைந்தனர்.

    இது பற்றி விவசாயி சிற்றரசன் என்பவர் கூறியதாவது:-

    எங்கள் பகுதியில் நேற்று மாலை சூறை காற்றுடன் மழை பெய்தது. சூறை காற்றால் வாழை மரங்கள் முறிந்து சாய்ந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தோம். ஒரு ஏக்கர் வாழை பயிரிடுவதற்கு குறைந்தது ரூ.1½ லட்சம் வரை செலவாகிறது.

    நேற்று பலத்த சூறை காற்று வீசியதால் வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. இதில் வாழை தார்கள், வாழை பிஞ்சுகள் உள்ளிட்ட அனைத்தும் சேதமானது.

    இந்த பாதிப்பில் ஒட்டுமொத்த விவசாயிகளுக்கும் சுமார் ரூ.2 கோடி அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளோம். இதற்கு தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் முறிந்து விழுந்து சேதமான வாழை மரங்களை நேரில் பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×