என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிலக்கோட்டை"

    • சூறாவளி காற்றால் சுமார் 20-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன.
    • வாழை விவசாயிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே முசுவனூத்து கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 62). இவர் தற்போது வாழை, தென்னை மரங்களை சாகுபடி செய்து இருந்தார். இப்பகுதியில் கடந்த 2 நாட்களாக பெய்த சூறாவளி காற்றால் சுமார் 20-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன.

    மேலும் மிளகாய்பட்டி, ஆண்டிபட்டி, முசுவனூத்து உள்ளிட்ட கிராமங்களிலும் மின்வினியோகம் தடைபட்டு இருளில் மூழ்கி கிடந்தன. இந்நிலையில் மின்சார வாரியத்துறையின் நடவடிக்கையால் மீண்டும் மின்வினியோகம் வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே மீண்டும் திடீரென இப்பகுதியில் வீசிய சூறாவளி காற்றால் ராஜேந்திரன் என்பவரின் தோட்டத்தில் இருந்த சுமார் 2000 வாழை மரங்களின் நடுப்பகுதி முறிந்து தரையில் சாய்ந்தது. இதைப் பார்த்த விவசாயி ராஜேந்திரன் மற்றும் அவரது உறவினர்கள் மிகுந்த கவலையடைந்தனர்.

    மேலும் இதுகுறித்து விவசாயிகள் தெரிவிக்கையில், திண்டுக்கல் மாவட்டத்தில் அக்னி நட்சத்திர சீசனில் மழை பெய்வது ஆறுதலாக இருந்த போதிலும், சூறாவளி காற்றுடன் பெய்த மழை பலத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. மாவட்டத்தில் வாழை விவசாயிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். நிலக்கோட்டை, பழனி, சத்திரப்பட்டி, ஆத்தூர் உள்ளிட்ட இடங்களிலும் இதுபோன்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    மேலும் தென்னை மரங்களும் சாய்ந்து விழுந்துள்ளன. எனவே வேளாண் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட விவசாய இடங்களில் ஆய்வு செய்து அவர்களுக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    • வீட்டின் அருகே உள்ள நத்தம் புறம்போக்கு இடத்திற்கு பட்டா கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
    • காயம் அடைந்த ராஜ்குமார் நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள பிள்ளையார் நத்தத்தை சேர்ந்தவர் குகன் (வயது 32). இவர் அணைப்பட்டி சாலையில் உள்ள பேரூராட்சி வளாகத்தில் ரப்பர் ஸ்டாம்ப் செய்து தரும் கடை நடத்தி வருகிறார்.

    இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிள்ளையார் நத்தம் கிராம நிர்வாக அலுவலராக உள்ள ராஜ்குமார் என்பவரிடம் தனது வீட்டின் அருகே உள்ள நத்தம் புறம்போக்கு இடத்திற்கு பட்டா கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

    இந்த இடத்திற்கு பட்டா வழங்குவதில் ஆட்சேபனை இருப்பதாக ராஜ்குமார் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த குகன் நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் வைத்து ராஜ்குமாரை கன்னத்தில் அறைந்தார். இதில் காயம் அடைந்த ராஜ்குமார் நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    இது குறித்து நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து குகனை கைது செய்தனர். பின்னர் நிலக்கோட்டை கோர்ட்டில் ஆஜர் படுத்தி திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.

    ×