search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாவூர்சத்திரம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த மாணவர் பலி
    X

    பாவூர்சத்திரம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த மாணவர் பலி

    • எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கவிழ்ந்ததில் அன்பு சரவணன் பலத்த காயமடைந்தார்.
    • அன்பு சரவணனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பாவூர்சத்திரம்:

    சென்னை மயிலாப்பூர் குடிசைப்பகுதி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பாபு. இவரது மகன் அன்பு சரவணன்(வயது 20).

    கல்லூரி மாணவரான இவருடன் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள புல்லுக்காட்டு வலசை பகுதியை சேர்ந்த மாணவர் ஒருவர் படித்துள்ளார்.

    இந்நிலையில் கடந்த 2-ந்தேதி அன்பு சரவணன் புல்லுக்காட்டுவலசை மாணவரின் ஊருக்கு வந்துள்ளார். இதையடுத்து அவர்கள் இருவரும் அங்குள்ள ராமச்சந்திரபட்டினம் நான்குவழிச்சாலை பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.

    அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கவிழ்ந்ததில் அன்பு சரவணன் பலத்த காயமடைந்தார்.

    அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அன்பு சரவணன் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×