search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காதலிக்கு வேறு இடத்தில் திருமணம்: விரக்தியில் வாலிபர் தற்கொலை
    X

    காதலிக்கு வேறு இடத்தில் திருமணம்: விரக்தியில் வாலிபர் தற்கொலை

    • ஆத்தூர் அருகே தலைவாசலை அடுத்த காமக்காபாளையத்தில் காதலிக்கு வேறு இடத்தில் திருமணம் நிச்சியத்தால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
    • இவர் அதே கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவியை காதலித்து வந்ததாக தெரிகிறது.

    ஆத்தூர்:

    ஆத்தூர் அருகே உள்ள தலைவாசலை அடுத்த காமக்காபாளையம் பகுதியை சேர்ந்தவர் நந்தா (வயது 21). இவர் சேலம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் இறுதி ஆண்டு படித்து வந்தார். இவர் அதே கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவியை காதலித்து வந்ததாக தெரி–கிறது.

    அந்த மாணவி பண்ருட்டி பகுதியைச் சேர்ந்தவர். இந்த நிலையில் அந்த மாணவிக்கு வேறு இடத்தில் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி மாணவி நந்தாவிடம் கூறி தன்னை மறந்து விடுமாறு சொன்னதாக தெரிகிறது.

    இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த நந்தா திடீரென விஷத்தை குடித்து விட்டார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே நந்தா பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி தலைவாசல் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று நந்தாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×