என் மலர்
சென்னை
- மக்களின் உணர்வுகளைக் கைத்தட்டல்களாகவும் - உங்களால் அதிகம் பகிரப்படும் காணொளியாகவும் மாற்றிய தங்கை கனிமொழியை வாழ்த்தினேன்!
- இந்தியாவுக்கான குரலாக தமிழ்நாட்டின் அன்புமொழியை பேசியுள்ளார் தங்கை கனிமொழி.
சென்னை:
பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா நடத்திய 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து உலக நாடுகளுக்கு விளக்க கனிமொழி தலைமையிலான எம்.பி.க்கள் குழு வெளிநாட்டில் பயணம் மேற்கொண்டு உரையாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், தங்கை கனிமொழியைக் கண்டு பெருமை கொள்கிறேன்! என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியுள்ளதாவது:-
ஸ்பெயின் மண்ணில், "இந்தியாவின் தேசிய மொழி வேற்றுமையில் ஒற்றுமை" என உரக்கச்சொல்லி, மக்களின் உணர்வுகளைக் கைத்தட்டல்களாகவும் - உங்களால் அதிகம் பகிரப்படும் காணொளியாகவும் மாற்றிய தங்கை கனிமொழியை வாழ்த்தினேன்!
இந்திய நாட்டுக்கான குரலாகத் தமிழ்நாட்டின் அன்புமொழியை - ஒற்றுமைமொழியைப் பேசிய தங்கை கனிமொழியைக் கண்டு பெருமை கொள்கிறேன்! என தெரிவித்துள்ளார்.
- அண்ணாமலை இன்று தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
- தாங்கள் துடிப்புடன் மக்கள் பணியாற்றிட எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
சென்னை:
முன்னாள் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இன்று தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையடுத்து அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழிசை சவுந்தரராஜன், அண்ணாமலைக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழிசை சவுந்தரராஜன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தமிழக பா.ஜ.க. முன்னாள் மாநிலத்தலைவர் அன்புத்தம்பி அண்ணாமலைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். தாங்கள் துடிப்புடன் மக்கள் பணியாற்றிட எனது மனமார்ந்த வாழ்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.
- தைலாபுரம் தோட்டத்தில் கட்சியின் மூத்த உறுப்பினர்கள், நிர்வாகிகளை தொடர்ந்து சந்தித்து ராமதாஸ் கருத்துக்களை கேட்டு வருகிறார்.
- அன்புமணிக்கு ஆதரவு அதிகமாக உள்ள மண்டலங்களை குறி வைத்து அங்குள்ள நிர்வாகிகள் மாற்றப்பட்டு வருகின்றனர்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் நீடித்து வருகிறது. இந்த மோதல் முடிவுக்கு வராத நிலையில் வன்னியர் சங்க நிர்வாகிகள் நீக்கம், புதிய மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் நியமனம் தொடர்பான அறிவிப்புகள் நீடித்து வருகிறது.
அடுத்ததாக கூட்டுகின்ற பொதுக்குழுவின் போது தான் வெற்றி பெறுவதுடன் தனது பக்கம் தனிப்பெரும்பான்மை உருவாக்கும் வகையில் இந்த நடவடிக்கையில் ராமதாஸ் தீவிரம் காட்டி வருகிறார்.
அதிலும் குறிப்பாக அன்புமணிக்கு ஆதரவு அதிகமாக உள்ள மண்டலங்களை குறி வைத்து அங்குள்ள நிர்வாகிகள் மாற்றப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கட்சியின் முன்னணி நிர்வாகிகளுடன் நேற்றும் டாக்டர் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து புதிய மாவட்ட செயலாளர்கள் பட்டியல் நேற்றும் வெளியானது.
அதன்படி இதுவரை காலியாக இருந்த மாவட்டங்களில் புதிய மாவட்ட செயலாளர்களாக எஸ்.டி.கே. சேகர் (திருவள்ளூர் வடக்கு) பகவான் பழனி (திருவள்ளூர் கிழக்கு) ரஜினி (திருவள்ளூர் தெற்கு) பழனிசாமி (தென்சென்னை தெற்கு) மயிலை ஆறுமுகம் ( தென்சென்னை கிழக்கு) வி.எஸ். வெங்கடேஷ் (வேலூர் கிழக்கு), முருகன் (மதுரை புறநகர் தெற்கு) பாண்டி காமாட்சி என்ற பாரதி பாண்டியன் (மதுரை புறநகர்) சந்தானதாஸ் (ராமநாதபுரம் கிழக்கு) சிங்கராயன் (தென்காசி தெற்கு) திருமலைசாமி (தென்காசி வடக்கு) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 16-ந்தேதி முதல் டாக்டர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் கட்சியின் மூத்த உறுப்பினர்கள், நிர்வாகிகளை தொடர்ந்து சந்தித்து கருத்துக்களை கேட்டு வருகிறார்.
அதன்படி இன்றும் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை டாக்டர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவரிடம் அன்புமணி ராமதாஸ் கட்சியில் இருந்து நீக்கப்படுவாரா? பொதுக்குழு எப்போது கூட்டப்படும்? என கேட்டபோது வருகிற வியாழக்கிழ மை (நாளை) பதில் அளிப்பதாக கூறினார்.
அதன் படி ராமதாஸ் நாளை முக்கிய முடிவை அறிவிப்பார் என பா.ம.க. தொண்டர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
- பொதுத்துறை, உள்ளாட்சித் துறைத் தணிக்கையை செய்வதற்கு சி.ஏ நிறுவனங்களை விண்ணப்பிக்குமாறு கோரியுள்ளது.
- இந்த நிறுவனங்களைத் தணிக்கை செய்வதில் சி.ஏ.ஜி துறை அதிகாரிகளின் தனித்திறன் நிபுணத்துவமுடையது.
பொதுத்துறை மற்றும் உள்ளாட்சி துறைகளை தணிக்கை செய்ய தனியார் சிஏ நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாமென சிஏஜி அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்முக்கு மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் எழுதி உள்ளார். அதில்,
அண்மையில் சி.ஏ.ஜி வெளியிட்டுள்ள ஒரு டெண்டர் அதிர்ச்சியளிக்கிறது. அது பொதுத்துறை, உள்ளாட்சித் துறைத் தணிக்கையை செய்வதற்கு சி.ஏ நிறுவனங்களை விண்ணப்பிக்குமாறு கோரியுள்ளது. கணக்குத் தணிக்கை ஊழியர்களுடன் சேர்ந்து இந்த சி.ஏ நிறுவனங்கள் தணிக்கை செய்வார்களாம்.
இந்தியாவின் உயர்ந்த தணிக்கை அதிகாரியான சி.ஏ.ஜி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்டவர். நாடாளுமன்றத்துக்கு மட்டுமே கட்டுப்பட்டவர். அவரது பணி அரசுடைமையான பொதுத்துறை, தன்னாட்சி பெற்ற நிறுவனங்கள், உள்ளாட்சி நிறுவனங்களை தணிக்கை செய்வது ஆகும். சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட் (சி.ஏ) செய்யும் தணிக்கையும், சி.ஏ.ஜியின் தணிக்கையும் ஒன்றல்ல. இந்த நிறுவனங்களைத் தணிக்கை செய்வதில் சி.ஏ.ஜி துறை அதிகாரிகளின் தனித்திறன் நிபுணத்துவமுடையது.
அதேபோல் உள்ளாட்சி தணிக்கையும் சிஏஜியின் தணிக்கை வரம்புக்கு உட்பட்டதேயாகும். சுருக்கமாக சிஏஜி என்பவரும், அவரது கணக்குத் தணிக்கைத் துறையும், இந்திய மக்களின் நிதியின் பாதுகாவலர்கள் என்றால் மிகையாகாது.
இந்த நிலையில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் புரளும் இந்தத் தணிக்கையைத் தனியார் சி.ஏ நிறுவனங்கள் மேற்கொள்ள அழைப்பது என்பது சிஏஜியிடம் அரசியலமைப்புச் சட்டம் கொடுத்துள்ள கடமையை மீறுவதாகும். மேலும் இந்த நிறுவனங்களிடம் இருக்கும் ரகசியமான விவரங்களும் தனியார் கைகளுக்குப் போய்ச் சேரும் ஆபத்தும் உண்டு.
சி.ஏ.ஜி எந்த அரசியல் தலையீடும் இல்லாமல் பணிபுரிய வேண்டும் என்பதால்தான் அண்ணல் அம்பேத்கார் இயற்றிய அரசியலமைப்புச் சட்டம் அவரைத் தனி உரிமையுடன் வைத்தது. அந்த அரசியலமைப்புச் சட்ட விதிகளுக்கு மாறாக சிஏஜியே தனியாரை துணைக்கு அழைப்பது ஆபத்தானது.
எனவே சி.ஏ.ஜி உடனடியாக இந்த நடவடிக்கையைக் கைவிட வேண்டும். இந்தத் துறையின் தனித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும். அப்போதுதான் மக்களது நிதியைக் காப்பாற்ற முடியும். எனவே தனியார் சி.ஏ. நிறுவனங்களை அழைத்து வெளியிட்டிருக்கும் அறிவிக்கையை சி.ஏ.ஜி உடனடியாகத் திரும்பப் பெற அறிவுறுத்த வேண்டும்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மூதாட்டி சேத்துப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
- உயிரிழந்த மூதாட்டிக்கு கேன்சருடன், நீரழிவு பாதிப்பும் இருந்ததாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர்.
சென்னையில் கொரோனா பாதிப்பால் மூதாட்டி உயிரிழந்துள்ளார்.
சென்னையில் சவுகார்பேட்டை பகுதியை சேர்ந்த மூதாட்டிக்கு சுவாசப்பிரச்சனை இருந்ததால் அவரை சோதனை செய்தபோது, கொரோனா பாதிப்பு உறுதியானது. அவர் சேத்துப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உயிரிழந்த மூதாட்டிக்கு கேன்சருடன், நீரழிவு பாதிப்பும் இருந்ததாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர்.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,000-ஐ கடந்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் புதிதாக 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
- நேற்று சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,640-க்கும் விற்பனையானது.
- இரண்டாவது நாளாக வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.
சென்னை:
தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. பெரும்பாலும் தங்கம் விலை உயர்ந்து காணப்படுகிறது. வார தொடக்க நாளான திங்கட்கிழமை சவரனுக்கு ரூ.1,120-ம், நேற்று சவரனுக்கு ரூ.160-ம் உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,640-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், மூன்றாவது நாளாக இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,090-க்கும் சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,720-க்கும் விற்பனையாகிறது.
இரண்டாவது நாளாக வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 114 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 14 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
03-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,640
02-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,480
01-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,360
31-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,360
30-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,360
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
03-06-2025- ஒரு கிராம் ரூ.113
02-06-2025- ஒரு கிராம் ரூ.111
01-06-2025- ஒரு கிராம் ரூ.111
31-05-2025- ஒரு கிராம் ரூ.111
30-05-2025- ஒரு கிராம் ரூ.111
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
- ஆகாஷ் நகர், கெருகம்பாக்கம், மணிமேடு, தாரப்பாக்கம்.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (05.06.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
அம்பத்தூர்: மில்லினியம் டவுன் கட்டம் 1,2,3, பார்க் சாலை, யு.ஆர்.நகர், பாலாஜி நகர், குப்புசாமி தெரு, ஜெமி காம்பவுண்ட், கலெக்டர் நகர், எம்.எம்.எம். மருத்துவமனை, எஸ்.எம். நாராயணன் நகர், ராம் நகர், கலைவாணர் காலனி, 11 கே.வி. பம்பிங் ஸ்டேஷன், ஹெச்.டி. சர்வீஸ், வடக்கு அவென்யூ சாலை, கொரட்டூர் ரெயில்வே, ஸ்டேஷன் புக்கிங் அலுவலகம், கொரட்டூர் பேருந்து நிலையம், 61 முதல் 72-வது தெரு, துரைசாமி 1 மற்றும் 2வது தெரு, தனபால் செட்டி 1 மற்றும் 2-வது தெரு, ரெயில் நிலைய சாலை, வி.ஓ.சி. 1 முதல் 2-வது தெரு மற்றும் லட்சுமி முதலை 1 முதல் 3-வது தெரு.
கோவூர்: தண்டலம், ஆகாஷ் நகர், கெருகம்பாக்கம், மணிமேடு, தாரப்பாக்கம், சி.பி.கார்டன், பாரதியார் தெரு, அம்பாள் நகர், ரோஸ் கார்டன், வணிகர் தெரு.
கொரட்டூர்: ரெட்டி தெரு, பாரதி நகர், ரெயில்வே ஸ்டேஷன் ரோடு, திருமுல்லைவாயல் ரோடு, மாணிக்கம் பிள்ளை தெரு, மேனாம்பேடு ரோடு, எம்.டி.எச்.ரோடு.
ரெட்ஹில்ஸ்: சோத்துப்பெரும்பேடு பகுதி, காரனோடை, முனிவேல்நகர், ஆத்தூர், தேவனேரி, பஸ்தாபாளையம், விஜிபி மேடு பகுதி முழுவதும் ஆகிய இடங்களில் மின் நிறுத்தப்படும் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அடுத்தகட்ட பணிகள் தொடர்பாக ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- பரந்தூர் விமான நிலையத்துக்கான நிலத்தை கையகப்படுத்தும் பணியில் தமிழ்நாடு அரசின் தொழில்துறை ஈடுபட்டு வருகிறது.
சென்னை:
பரந்தூர் புதிய விமான நிலைய திட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.
சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை 11.30 மணிக்கு தொழில் துறை அமைச்சர், செயலாளர் மற்றும் அரசின் முக்கிய அதிகாரிகளுடன் அடுத்தகட்ட பணிகள் தொடர்பாக ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பரந்தூர் விமான நிலையத்துக்கான நிலத்தை கையகப்படுத்தும் பணியில் தமிழ்நாடு அரசின் தொழில்துறை ஈடுபட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.
- பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு த.வெ.க. சார்பில் கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.
- கடந்த விழாவில் நீட் குறித்தும், பெரியார் குறித்தும் விஜய் பேசி இருந்தார்.
தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் இந்தாண்டும் கடந்த 30-ந்தேதி முதற்கட்டமாக 18 மாவட்டங்களைச் சேர்ந்த 88 தொகுதி மாணவர்களுக்கு பரிசுகளை த.வெ.க. தலைவர் விஜய் வழங்கினார்.
இந்த நிலையில், த.வெ.க. சார்பில் இன்று 2-ம் கட்டமாக கல்வி விருது வழங்கும் விழா மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற உள்ளது.
இதில் 84 தொகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழும், ஊக்கத்தொகையையும் த.வெ.க. தலைவர் விஜய் வழங்க உள்ளார். மேலும் மாணவர்களுடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்துக்கொள்கிறார்.
இதற்காக ஓட்டலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கடந்த விழாவில் நீட் குறித்தும், பெரியார் குறித்தும் விஜய் பேசி இருந்தார். மேலும் 2026 தேர்தலில் வண்டி வண்டியாக பணத்தை கொட்டப்போகிறார்கள் என விஜய் விமர்சித்து இருந்தார்.
- சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
- பூந்தமல்லி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
சென்னை:
தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில், இன்று ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
சென்ட்ரல், எழும்பூர், நுங்கம்பாக்கம், வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், கோயம்பேடு, திருவல்லிக்கேணி, கோடம்பாக்கம், மாம்பலம், கிண்டி,ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
புறநகர் பகுதிகளான பூந்தமல்லி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. பூந்தமல்லி, குமணன்சாவடி, கரையான்சாவடி, செம்பரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
- ஞானசேகரனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் 30 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது.
- தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது என தெரிவித்தார்.
சென்னை:
அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் தாக்குதல் வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் 30 ஆண்டு சிறைத்தண்டனை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது எனக்கூறிய தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை காணொளி ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் ஞானசேகரன் சம்பவம் நடந்த அன்றும், மறுநாளும் யார் யாரிடம் தொலைபேசியில் பேசினான் என்ற விவரங்களையும் அதில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு குற்றவாளி ஞானசேகரன், குற்றம் நடந்த அன்றும், அதற்கு அடுத்த தினமும், யார் யாருடன் தொலைபேசியில் பேசினான், அவனுடன் பேசியவர்கள் வேறு யார் யாருடன் பேசினார்கள் என்ற முழு விவரங்களையும், எனது காணொளியில் கூறியிருந்த பின்னரும், தமிழகக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை, அதே தகவல்களை ஏன் வெளியிடவில்லை என கேட்கிறார். அதிலும், குறிப்பாக அவர் ஏன் இத்தனை பதட்டம் அடைகிறார் என்று தெரியவில்லை.
ஒரு பொதுப் பிரச்சனை குறித்து கருத்து தெரிவிக்கும் முன்னர், அது குறித்த முழு விவரங்களையும் தெரிந்து கொள்வது ஒரு நல்ல அரசியல் தலைவருக்கு அழகு. செல்வப்பெருந்தகை எனது காணொளியை முழுமையாகக் காணும்படி கேட்டுக் கொள்கிறேன். வேண்டுமென்றால், அவருக்கு வாட்ஸ் அப்பில் அந்தக் காணொளியை அனுப்பி வைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
- நீட் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை விதித்தது.
- வரும் 6ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
சென்னை:
மருத்துவப் படிப்பிற்காக நீட் நுழைவுத் தேர்வு (இளநிலை) 2025 இந்தியா முழுவதும் பல்வேறு மையங்களில் கடந்த 4-ம் தேதி நடத்தப்பட்டது. சென்னையை அடுத்த ஆவடி மையத்தில் 464 மாணவர்களுக்கு தேர்வு எழுத நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டது. பிற்பகல் 2 மணிக்கு தேர்வு தொடங்கிய நிலையில் கனமழை காரணமாக 3 மணியில் இருந்து 4.15 மணி வரை மின்தடை ஏற்பட்டது. இதனால் அந்த மையத்தில் தேர்வெழுதிய மாணவர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
இதையடுத்து, தங்களுக்கு மறு தேர்வு தேவை என ஆவடி தேர்வு மையத்தில் தேர்வெழுதிய 16 மாணவர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
மின் தடையால் குறைந்த வெளிச்சத்தில் தேர்வு எழுதியதாகவும், கவனச்சிதறலால் முழு திறமையுடன் தேர்வு எழுதவில்லை என்றும், தங்களுக்கு மறு தேர்வு தேவை எனவும் மாணவர்கள் தங்களது மனுவில் தெரிவித்து இருந்தனர். இதனால் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்தது.
இந்நிலையில், இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மின்தடை காரணமாக நீட் தேர்வில் எந்த பாதிப்பும் ஏற்படாத நிலையில் மறுதேர்வு நடத்தமுடியாது என மத்திய அரசு தெரிவித்தது. இதையடுத்து, வரும் 6ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.






