

சென்னை:
பரந்தூர் புதிய விமான நிலைய திட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.
சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை 11.30 மணிக்கு தொழில் துறை அமைச்சர், செயலாளர் மற்றும் அரசின் முக்கிய அதிகாரிகளுடன் அடுத்தகட்ட பணிகள் தொடர்பாக ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பரந்தூர் விமான நிலையத்துக்கான நிலத்தை கையகப்படுத்தும் பணியில் தமிழ்நாடு அரசின் தொழில்துறை ஈடுபட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.