என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    செல்வபெருந்தகை ஏன் பதட்டம் அடைகிறார்?: அண்ணாமலை கேள்வி
    X

    செல்வபெருந்தகை ஏன் பதட்டம் அடைகிறார்?: அண்ணாமலை கேள்வி

    • ஞானசேகரனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் 30 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது.
    • தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது என தெரிவித்தார்.

    சென்னை:

    அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் தாக்குதல் வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் 30 ஆண்டு சிறைத்தண்டனை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது எனக்கூறிய தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை காணொளி ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் ஞானசேகரன் சம்பவம் நடந்த அன்றும், மறுநாளும் யார் யாரிடம் தொலைபேசியில் பேசினான் என்ற விவரங்களையும் அதில் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

    அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு குற்றவாளி ஞானசேகரன், குற்றம் நடந்த அன்றும், அதற்கு அடுத்த தினமும், யார் யாருடன் தொலைபேசியில் பேசினான், அவனுடன் பேசியவர்கள் வேறு யார் யாருடன் பேசினார்கள் என்ற முழு விவரங்களையும், எனது காணொளியில் கூறியிருந்த பின்னரும், தமிழகக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை, அதே தகவல்களை ஏன் வெளியிடவில்லை என கேட்கிறார். அதிலும், குறிப்பாக அவர் ஏன் இத்தனை பதட்டம் அடைகிறார் என்று தெரியவில்லை.

    ஒரு பொதுப் பிரச்சனை குறித்து கருத்து தெரிவிக்கும் முன்னர், அது குறித்த முழு விவரங்களையும் தெரிந்து கொள்வது ஒரு நல்ல அரசியல் தலைவருக்கு அழகு. செல்வப்பெருந்தகை எனது காணொளியை முழுமையாகக் காணும்படி கேட்டுக் கொள்கிறேன். வேண்டுமென்றால், அவருக்கு வாட்ஸ் அப்பில் அந்தக் காணொளியை அனுப்பி வைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×