search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கண்டக்டர் சின்னசாமி.
    X
    கண்டக்டர் சின்னசாமி.

    பணியிலிருந்த அரசு பஸ் கண்டக்டர் திடீர் சாவு

    மேட்டூரில் பணியிலிருந்த அரசு பஸ் கண்டக்டர் திடீர் என இறந்தார்.
    மேட்டூர்:

    மேட்டூர் அரசு போக்குவரத்து கழகத்தின் மேட்டூர் பணி மனையில் பஸ்  கண்டக்டர் ராக பணியாற்றி வந்தவர் சின்னுசாமி(வயது 58). இவர் நேற்று மேட்டூரில் இருந்து கொளத்தூர் மற்றும் நீதிபுரம் கிராமத்திற்கு செல்லும் பஸ்ஸில்  பணியாற்றினார்.

    நேற்று நீதிபுரம் கிராமத்திலிருந்து இருந்து திரும்பி மேட்டூர் நோக்கி வரும்போது சின்னதண்டா என்ற இடத்தில் கண்டக்டர் சின்னசாமிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. பஸ் டிரைவர் மற்றும் பயணிகள் ஒன்று சேர்ந்து உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைத்து சின்னசாமியை மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

    அங்கு  அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பணியில் இருந்த நடத்துனர் இறந்தது மேட்டூர் பணிமனையை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
    Next Story
    ×