search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டவர்களை படத்தில் காணலாம்.
    X
    ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டவர்களை படத்தில் காணலாம்.

    மகுடஞ்சாவடி வட்டாரத்தில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம்

    மகுடஞ்சாவடி வட்டாரத்தில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார்.
    சேலம்:

    சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி வட்டாரத்தில் 2021-22-ம் ஆண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தை செயல்படுத்த வைகுண்டம், கண்ணந்தேரி, தப்பகுட்டை ஆகிய கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 

    இந்த திட்டத்தினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்  வருகிற 23-ந் தேதி காணொலிக் காட்சி மூலமாக   தொடங்கி  வைக்க உள்ளார்.

     தொடக்க விழாவினை அந்தந்த கிராமங்களில் காணொளி வாயிலாக விவசாயிகளும் கண்டுகளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் மகுடஞ்சாவடி வட்டார மண்டல அலுவலர் கண்ணன், முதுநிலை செயலாளர் ஆகியோர் தலைமையில் மகுடஞ்சாவடி வேளாண் விரிவாக்க மையத்தில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மகுடஞ்சாவடி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர், வட்டார வளர்ச்சி அலுவலர், உதவி வேளாண்மை அலுவலர்கள், உதவி விதை அலுவலர்கள், துணை தோட்டக்கலை அலுவலர்,  உதவி தோட்டக்கலை அலுவல, உதவி கால்நடை மருத்துவர்கள் மற்றும் அட்மா திட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×