search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சூறைக்காற்றால் சாய்ந்த வாழை மரங்கள்.
    X
    சூறைக்காற்றால் சாய்ந்த வாழை மரங்கள்.

    ஓட்டப்பிடாரம் அருகே பலத்த காற்றுடன் கனமழை-வாழைகள் சேதம்

    ஓட்டப்பிடாரம் அருகே சவலாபேரி பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் வாழைகள் சேதமடைந்தது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
    புதியம்புத்தூர்:

    ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆலந்தா ஊராட்சி சவலாப்பேரி கிராமத்தில் விவசாயிகள் வாழைகள் பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று சவலாப்பேரி, ஒட்டநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இந்நிலையில் சவலாபேரி பகுதியில் வாழை குலைதள்ளி அறுவடைக்கு தயாராக இருந்த வாழைகள் அடியோடு சாய்ந்தது.

    இதில் சவலாபேரி பகுதியை சேர்ந்த கருத்தபாண்டி என்பவருக்கு மட்டும் 4500,கணேசன் என்பவருக்கு 1500 என சுமார் 7 ஆயிரம் வாழைகள் அடியோடு சாய்ந்ததால் விவசாயிகள் மிகுந்த கவலையில் உள்ளனர். மேலும் விவசாயிகள் கூட்டுறவு சொசைட்டியில் கடன் வாங்கி வாழை பயிரிட்டிருந்த நிலையில் வாழைகள் சாய்ந்ததால் மிகுந்த கவலையில் உள்ளனர்.

    இந்நிலையில் ஆலந்தா கிராம நிர்வாக அதிகாரி மாரி சங்கர் சேதமடைந்த வாழை மரங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். எனவே சேதமடைந்த வாழைகளுக்கு உரிய இழப்பீட்டு தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×