என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கோவில்பட்டியில் கைதான வாலிபரின் மோட்டார் சைக்கிள், இறைச்சி கடை தீ வைத்து எரிப்பு- போலீசார் விசாரணை
Byமாலை மலர்29 April 2022 9:27 AM GMT (Updated: 29 April 2022 9:27 AM GMT)
கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட வாலிபரின் மோட்டார் சைக்கிள், இறைச்சிகடைக்கு தீ வைத்து எரிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் மது போதையில் அய்யநேரியை சேர்ந்த கார்த்திக் என்பவர் தனியார் மாணவர்களுடன் தகராறில் ஈடுபட்டார்.
அப்போது கார்த்திக் அவரது நண்பர்கள் வீரவாஞ்சி நகரைச் சேர்ந்த சின்னமணி, கார்த்திக் என்ற அட்டு கார்த்திக் ஆகியோரை அழைத்து வந்து கடலையூரை சேர்ந்த கல்லூரி மாணவர் வைரமுத்து என்பவரை அரிவாளால் தாக்கி காயம் ஏற்படுத்தினர்.
இது தொடர்பான சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் வைரமுத்து கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து கார்த்திக், சின்னமணி, கார்த்திக் அட்டு கார்த்திக் 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு கார்த்திக் என்ற அட்டு கார்த்திக் வீட்டின் முன்பு நின்றிருந்த மோட்டார் சைக்கிளை மர்ம கும்பல் தீவைத்து எரித்து விட்டு தப்பி ஓடியது. இதில் மோட்டார் சைக்கிள் முற்றிலுமாக சேதமடைந்து விட்டது.
மேலும் அந்த கும்பல் கார்த்திக் என்ற அட்டு கார்த்திக் தந்தை காளிதாஸ் கதிரேசன் கோவில் சாலையில் நடத்திவரும் இறைச்சி கடையையும் தீயிட்டுக் கொளுத்தி விட்டு சென்றுள்ளனர். இறைச்சி கடையும் முற்றிலுமாக சேதமடைந்தது உள்ளது.
இச்சம்பவம் குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் மது போதையில் அய்யநேரியை சேர்ந்த கார்த்திக் என்பவர் தனியார் மாணவர்களுடன் தகராறில் ஈடுபட்டார்.
அப்போது கார்த்திக் அவரது நண்பர்கள் வீரவாஞ்சி நகரைச் சேர்ந்த சின்னமணி, கார்த்திக் என்ற அட்டு கார்த்திக் ஆகியோரை அழைத்து வந்து கடலையூரை சேர்ந்த கல்லூரி மாணவர் வைரமுத்து என்பவரை அரிவாளால் தாக்கி காயம் ஏற்படுத்தினர்.
இது தொடர்பான சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் வைரமுத்து கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து கார்த்திக், சின்னமணி, கார்த்திக் அட்டு கார்த்திக் 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு கார்த்திக் என்ற அட்டு கார்த்திக் வீட்டின் முன்பு நின்றிருந்த மோட்டார் சைக்கிளை மர்ம கும்பல் தீவைத்து எரித்து விட்டு தப்பி ஓடியது. இதில் மோட்டார் சைக்கிள் முற்றிலுமாக சேதமடைந்து விட்டது.
மேலும் அந்த கும்பல் கார்த்திக் என்ற அட்டு கார்த்திக் தந்தை காளிதாஸ் கதிரேசன் கோவில் சாலையில் நடத்திவரும் இறைச்சி கடையையும் தீயிட்டுக் கொளுத்தி விட்டு சென்றுள்ளனர். இறைச்சி கடையும் முற்றிலுமாக சேதமடைந்தது உள்ளது.
இச்சம்பவம் குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X