என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ரோட்டில் கிடந்த 350 கிலோ ரேஷன் அரிசி அதிகாரிகள் பறிமுதல்
Byமாலை மலர்28 April 2022 8:48 AM GMT (Updated: 28 April 2022 8:48 AM GMT)
மேட்டூர் அருகே ரோட்டில் கிடந்த 350 கிலோ ரேஷன் அரிசி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேட்டூர்:
மேட்டூரை அடுத்த கருமலைக்கூடல் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தல் நடைபெறுவதாக மேட்டூர் வட்ட வழங்கல் அதிகாரி கார்த்திக்கு தகவல் கிடைத்தது.
இதனை அடுத்து கார்த்தி, வருவாய் ஆய்வாளர்கள் வேணுகோபால், சுதா லட்சுமி ஆகியோர் கருமலைக்கூடல் கண்ணையன் தெரு பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று பார்த்தனர்.
அப்போது அந்த பகுதியில் உள்ள சாலையில் சிறிய சிறிய மூட்டையாகக் கட்டப்பட்டு கிடந்த ரேசன் அரிசியை பறிமுதல் செய்த அதிகாரிகள் எடை போட்டுப் பார்த்ததில் 350 கிலோ இருந்தது.
இதனையடுத்து குஞ்சாண்டியூரில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக கிடங்குக்கு எடுத்துச் சென்று ரேஷன் அரிசி மூட்டைகளை ஒப்படைத்தனர்.
மேலும் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X