என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கோவையில் ஆளுங்கட்சியின் அடாவடியை எதிர்த்துதான் போராட்டம் நடந்தது- ஓ.பன்னீர்செல்வம்
Byமாலை மலர்19 Feb 2022 8:19 AM GMT (Updated: 19 Feb 2022 10:22 AM GMT)
தி.மு.க. தனது தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் மக்களை ஏமாற்றி வருகிறது என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
பெரியகுளம்:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தேனி மாவட்டம் பெரியகுளம் எட்வர்டு பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் தனது குடும்பத்துடன் வந்து வாக்களித்தார்.
அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தி.மு.க. தனது தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் மக்களை ஏமாற்றி வருகிறது. அந்த ஆட்சிக்கு மூக்கணாங்கயிறு போடும் வகையில் தமிழக மக்கள் உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்து வருகின்றனர்.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது போடப்பட்ட திட்டங்கள் தான் தற்போது நிறைவேற்றப்பட்டு வருகிறது. தி.மு.க. ஆட்சியில் எந்த புதிய திட்டமும் அறிவிக்கப்படவில்லை.
தமிழகத்தில் நல்லாட்சியை அமைத்தவர் ஜெயலலிதாதான் என்பதை தமிழக மக்கள் இன்றுவரை நினைவு வைத்துள்ளனர். எனவே தற்போது நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க.விற்கு அமோக வெற்றியை தருவார்கள்.
அ.தி.மு.க.வினர் தேவையின்றி போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த மாட்டார்கள். நியாயமான கோரிக்கைகளுக்காகத்தான் போராட்டம் நடத்துவோம். அதன்படி கோவையில் ஆளுங்கட்சியினரின் அடாவடியை எதிர்த்துதான் அங்கு முன்னாள் அமைச்சர் மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் போராட்டம் நடத்தினர்.
ஆனால் அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆளுங்கட்சியினரின் அடாவடியை தாண்டி அ.தி.மு.க. இத்தேர்தலில் மகத்தான வெற்றிபெறும்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தேனி மாவட்டம் பெரியகுளம் எட்வர்டு பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் தனது குடும்பத்துடன் வந்து வாக்களித்தார்.
அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தி.மு.க. தனது தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் மக்களை ஏமாற்றி வருகிறது. அந்த ஆட்சிக்கு மூக்கணாங்கயிறு போடும் வகையில் தமிழக மக்கள் உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்து வருகின்றனர்.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது போடப்பட்ட திட்டங்கள் தான் தற்போது நிறைவேற்றப்பட்டு வருகிறது. தி.மு.க. ஆட்சியில் எந்த புதிய திட்டமும் அறிவிக்கப்படவில்லை.
தமிழகத்தில் நல்லாட்சியை அமைத்தவர் ஜெயலலிதாதான் என்பதை தமிழக மக்கள் இன்றுவரை நினைவு வைத்துள்ளனர். எனவே தற்போது நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க.விற்கு அமோக வெற்றியை தருவார்கள்.
அ.தி.மு.க.வினர் தேவையின்றி போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த மாட்டார்கள். நியாயமான கோரிக்கைகளுக்காகத்தான் போராட்டம் நடத்துவோம். அதன்படி கோவையில் ஆளுங்கட்சியினரின் அடாவடியை எதிர்த்துதான் அங்கு முன்னாள் அமைச்சர் மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் போராட்டம் நடத்தினர்.
ஆனால் அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆளுங்கட்சியினரின் அடாவடியை தாண்டி அ.தி.மு.க. இத்தேர்தலில் மகத்தான வெற்றிபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்... திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் பிரம்மோற்சவ விழா நாளை தொடங்குகிறது
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X