search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
    X
    முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

    சசிகலாவும், டிடிவி தினகரனும் அ.தி.மு.க.வுக்கு தொடர்பு இல்லாதவர்கள்- ஜெயக்குமார்

    வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தும் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி இதுநாள் வரை நிறைவேற்றப்படவில்லை.
    ராயபுரம்:

    தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் இன்று தமிழகம் முழுவதும் அவரவர் வீடுகளின் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னை ராயபுரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இல்லத்தரசிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அரசு சொன்னதை இதுநாள்வரை செய்யவில்லை . பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு ஐந்து ரூபாயும் டீசல் விலை 4 ரூபாய் குறைக்கப்படும் என்று சொன்னதை இதுவரை அரசு நிறைவேற்றவில்லை.

    பெட்ரோல், டீசல்

    வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தும் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி இதுநாள் வரை நிறைவேற்றப்படவில்லை.

    டி.டி.வி.தினகரன் நேற்று அ.தி.மு.க.வை மீட்டெடுப்பதற்கான பணிகளை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தொடர்ந்து செய்யும் என்று சொல்லி இருந்தது குறித்து நிருபர்கள் கேட்டபோது, டி.டி.வி. தினகரனும், சசிகலாவும் அ.தி.மு.க.வுக்கு தொடர்பில்லாதவர்கள். கட்சியை மீட்டு எடுப்பதெல்லாம் நடக்குமா?

    கூரையேறி கோழி பிடிக்க தெரியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போக ஆசைப்படுவதெல்லாம் நடக்கவே நடக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.



    Next Story
    ×