என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
11ஆம் வகுப்பு சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு ரத்து - பள்ளிக்கல்வித்துறை
Byமாலை மலர்9 Jun 2021 1:49 PM GMT (Updated: 9 Jun 2021 1:49 PM GMT)
பல்வேறு தரப்பினர் கோரிக்கையை ஏற்று 11ஆம் வகுப்பு சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை:
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், குறிப்பிட்ட பாடப்பிரிவுகளுக்கு அதிக விண்ணப்பங்கள் வந்தால் பள்ளி அளவில் 10ஆம் வகுப்பு பாடத்தின் அடிப்படையில் தேர்வு நடத்தி மாணவர் சேர்க்கையை நடத்தலாம் எனத் தமிழக அரசு தெரிவித்திருந்தது.
இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 11-ம் வகுப்புக்கு நுழைவு தேர்வு என்ற அறிவிப்பை திரும்பப் பெறுமாறு பலரும் கோரிக்கை விடுத்தனர்.
இந்தநிலையில், பல்வேறு தரப்பினர் கோரிக்கையை ஏற்று 11ஆம் வகுப்பு சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் வெளியிட்ட செய்தியில்,
11-ம் வகுப்பு சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு செய்யப்படுகிறது. 9-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் 11-ம் வகுப்பு சேர்க்கை நடத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலால் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X