search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    11ஆம் வகுப்பு சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு ரத்து - பள்ளிக்கல்வித்துறை

    பல்வேறு தரப்பினர் கோரிக்கையை ஏற்று 11ஆம் வகுப்பு சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
    சென்னை:

    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், குறிப்பிட்ட பாடப்பிரிவுகளுக்கு அதிக விண்ணப்பங்கள் வந்தால் பள்ளி அளவில் 10ஆம் வகுப்பு பாடத்தின் அடிப்படையில் தேர்வு நடத்தி மாணவர் சேர்க்கையை நடத்தலாம் எனத் தமிழக அரசு தெரிவித்திருந்தது. 

    இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 11-ம் வகுப்புக்கு நுழைவு தேர்வு என்ற அறிவிப்பை திரும்பப் பெறுமாறு பலரும் கோரிக்கை விடுத்தனர்.

    இந்தநிலையில், பல்வேறு தரப்பினர் கோரிக்கையை ஏற்று 11ஆம் வகுப்பு சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்வதாக 
    தமிழக அரசு
     அறிவித்துள்ளது.

    இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் வெளியிட்ட செய்தியில்,

    கோப்புபடம்

    11-ம் வகுப்பு சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு செய்யப்படுகிறது. 9-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் 11-ம் வகுப்பு சேர்க்கை நடத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் கொரோனா பரவலால் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×