search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி
    X
    எடப்பாடி பழனிசாமி

    கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி

    கொரோனா இறப்புகளை வெளிப்படைத்தன்மையுடன் அரசு அறிவிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
    சேலம்: 

    சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள அரசு மருத்துவமனையில் முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

    சேலம் மாவட்டத்தில் ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பி விட்டன. கூடுதல் ஆக்சிஜன் படுக்கைகளை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும். சேலம் உருக்காலையில் 500 படுக்கை வசதிகளை துவக்கி வைத்த நிலையில் அவை இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லை. 

    தமிழக அரசு

    கொரோனா இறப்புகளை வெளிப்படைத்தன்மையுடன் அரசு அறிவிக்க வேண்டும். பரிசோதனை மையங்களை அதிகரித்து ஆர்டிபிசிஆர் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். 

    இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×