search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட முக ஸ்டாலின்
    X
    கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட முக ஸ்டாலின்

    கொரோனா தடுப்பூசி 2-வது டோஸ் போட்டுக்கொண்டார் மு.க.ஸ்டாலின்

    கொரோனா தடுப்பூசி இதுவரை போட்டுக்கொள்ளாதவர்கள் உடனடியாக போட்டுக்கொள்ளவும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
    சென்னை:

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பூசியின் 2-வது டோஸை சென்னை காவேரி மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

    இதையடுத்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

    கொரோனா தடுப்பூசி இரண்டாவது டோஸ் இன்று எடுத்துக் கொண்டேன்.

    இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் உடனடியாக போட்டுக் கொள்ளவும். வேறு உடல் பாதிப்பு உள்ளவர்கள் எனில் தங்கள் மருத்துவரை கலந்தாலோசனை செய்துவிட்டு தடுப்பூசி எடுத்துக் கொள்ளவும்.

    நம்மையும் - நாட்டு மக்களையும் பாதுகாப்போம்!

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
    Next Story
    ×