என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வல்லத்தில் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட முயன்ற வாலிபர் கைது
வல்லம்:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையை அடுத்துள்ள கோமாபுரம் கொத்தம்பட்டியை சேர்ந்தவர் முனியாண்டி (வயது 26). இவருடைய சகோதரி வல்லம் அருகே உள்ள சென்னம்பட்டியில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் முனியாண்டி கந்தர்வக் கோட்டையில் இருந்து வல்லத்திற்கு வந்துள்ளார். வல்லத்தில் இருந்து சென்னம்பட்டி சாலையில் செல்லும்போது அங்குள்ள ஒரு கோவில் பூட்டி இருப்பதை பார்த்து உள்ளார். அப்போது கோவிலில் யாரும் இல்லாததால் உண்டியலை அருகில் இருந்த இரும்பு கம்பியை கொண்டு உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதனை மறைந்திருந்து பார்த்த பொதுமக்கள் சிலர் உடனே வல்லம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து இன்ஸ்பெக்டர் அனந்தபத்மநாபன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தாமஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது கோவிலில் உண்டியலை உடைத்து கொண்டு இருந்த முனியாண்டியை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர்.
இதுகுறித்து வல்லம் ஜைஸ்கூல் சாலையைச் சேர்ந்த ரவி என்பவர் கொடுத்துள்ள புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முனியாண்டியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்