search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டாலின்
    X
    ஸ்டாலின்

    ‘சச்சின் கொரோனா தொற்றில் இருந்து விரைவில் நலம் பெற வேண்டும்’ - ஸ்டாலின் டுவிட்டரில் பதிவு

    இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் கொரோனா தொற்றில் இருந்து விரைவில் நலம் பெற வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
    சென்னை:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் தெண்டுல்கர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
    சச்சின் தெண்டுல்கர்
    தலைசிறந்த கிரிக்கெட் வீரரான சச்சின் தெண்டுல்கர் கொரோனா தொற்றில் இருந்து விரைந்து நலம்பெற விழைகிறேன். தற்போது ஏற்பட்டுள்ள பெருந்தொற்று அலையினை விழிப்போடு எதிர்கொள்ளுமாறும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளுமாறும் நாட்டு மக்களை கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×