search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் ஜெயக்குமார்
    X
    அமைச்சர் ஜெயக்குமார்

    அ.தி.மு.க. கொடியை சசிகலா பயன்படுத்த உரிமையில்லை- அமைச்சர் ஜெயக்குமார்

    அ.தி.மு.க. நிர்வாகியாகவோ, உறுப்பினராகவோ இல்லாத சசிகலா அ.தி.மு.க. கொடியை பயன்படுத்த உரிமையில்லை என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
    சென்னை:

    சசிகலா அ.தி.மு.க. கொடி பயன்படுத்தியது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேட்டபோது கூறியதாவது:-

    சசிகலாவும் அவரோடு இருந்தவர்களும், 2017-ம் ஆண்டிலேயே அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டு விட்டனர்.

    அ.தி.மு.க. நிர்வாகியாகவோ, உறுப்பினராகவோ இல்லாத அவர் அ.தி.மு.க. கொடியை பயன்படுத்த உரிமையில்லை. அது சட்டத்திற்கும் எதிரானது.

    மேலும் அவருக்கு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களை பயன்படுத்தவும் உரிமைகள் கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×