என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேளாண் அவசர சட்டங்களால் தமிழகத்தில் விவசாயிகள் பாதிக்கப்படவில்லை- எச்.ராஜா பேட்டி
Byமாலை மலர்27 Jan 2021 7:22 AM GMT (Updated: 27 Jan 2021 7:22 AM GMT)
வேளாண் அவசர சட்டங்களால் தமிழகத்தில் விவசாயிகள் பாதிக்கப்படவில்லை என எச்.ராஜா கூறினார்.
வடுவூர்:
திருவாரூர் மாவட்டம் வடுவூரில் பா.ஜனதா முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ராமஜென்ம பூமி தீர்ப்பு அனைத்து தரப்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்ப்பாகும். ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக 15 பேர் கொண்ட அறக்கட்டளை உருவாக்கப்பட்டு பிரதமர் மோடி கோவிலுக்கு அடிக்கல் நாட்டி உள்ளார்.
ராமர் கோவில் கட்டுவதில் நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் பங்களிப்பு இருக்க வேண்டும். இதற்காக அவர்களிடம் இருந்து நன்கொடை பெறப்படுகிறது. பத்து ரூபாய் கூட பங்களிப்பாக பக்தர்கள் வழங்கலாம். அதன் மூலம் கோவில் கட்டுவதை பெருமையாக கொள்கிறோம்.
தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கையில் வேல் ஏந்தி இருப்பதை பா.ஜனதா வேல் யாத்திரைக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கிறோம்.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களால் தமிழகத்தில் எந்த ஒரு விவசாயியும் பாதிக்கவில்லை. தமிழகத்தில் டிராக்டர் பேரணிக்கு முதல்- அமைச்சர் தடைவிதித்தது சரியான முடிவு.
இவ்வாறு எச்.ராஜா கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X