search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கனிமொழி எம்.பி
    X
    கனிமொழி எம்.பி

    தமிழகத்தில் தற்போது ஸ்டாலினுக்கு இணையான தலைவர்கள் யாரும் இல்லை - கனிமொழி

    தமிழகத்தில் தற்போது திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு இணையான தலைவர்கள் யாரும் இல்லை என கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.

    தூத்துக்குடி:

    விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற முழக்கத்தோடு தி.மு.க.வினர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்காக தூத்துக்குடி மாவட்டத்திற்கு வந்த கனிமொழி எம்.பி. இன்று தூத்துக்குடி கலைஞர் அரங்கில் நடைபெற்ற சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

    வருகிற சட்டமன்ற தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தலாகும். தேர்தலில் நாம் திறம்பட செயல்பட வேண்டியது அவசியமாகும். தமிழகத்தில் தற்போது ஸ்டாலினுக்கு இணையான தலைவர்கள் யாரும் இல்லை. தமிழகத்தை மீட்டெடுக்க வேண்டுமென்றால் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைய வேண்டும்.

    தமிழகம் வளர்ச்சிப் பாதையில் பயணிப்பதாக பொய்யான பிரசாரத்தை அ.தி.மு.க. அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தும் நடைபெற வேண்டுமென்றால் தி.மு.க. ஆட்சி அமைய வேண்டும். வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனாலும் நாம் திறம்பட செயல்பட வேண்டும்.

    யார் வெற்றி பெற்று விடக்கூடாது என்பதை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். மக்கள் தி.மு.க.விற்கு வாக்களிக்க தயாராக உள்ளனர். அதனால் நாம் சாதாரணமாக இருந்துவிடாமல் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும்.

    பொய் பிரசாரங்களை கூறியும், பணத்தை கொடுத்தும் வெற்றி பெற்றுவிடலாம் என்று எண்ணுகின்றனர். இதனை முறியடிக்க வேண்டியது அவசியமாகும். நாம் சமூக வலைதளங்களை எல்லாம் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தேர்தல் முடியும் வரை ஓய்வின்றி ஒவ்வொருவரும் உழைக்க வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×