search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    உசிலம்பட்டி அருகே தூக்குப்போட்டு மாணவன் தற்கொலை

    உசிலம்பட்டி அருகே தூக்குப்போட்டு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உசிலம்பட்டி:

    உசிலம்பட்டி தேனி ரோட்டில் உள்ள காளை தேவர் தெருவை சேர்ந்தவர் வீரசிங்கம். இவர் உசிலம்பட்டி பஸ் நிலையத்தில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மகன் சுபாஷ்(வயது 15) .இவர் உசிலம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். சுபாஷ் தன்னுடைய பெற்றோரிடம் செல்போன் வாங்கித் தருமாறு அடிக்கடி கேட்டு வந்துள்ளான். இதற்கு பெற்றோர்கள் தற்போது வாங்கி தர இயலாது, விரைவில் வாங்கி தருகிறோம் என்று கூறியுள்ளனர். இதில் மனவேதனை அடைந்த சுபாஷ் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். இதுகுறித்து வந்த புகாரின் பேரில் உசிலம்பட்டி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×