என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உசிலம்பட்டி அருகே தூக்குப்போட்டு மாணவன் தற்கொலை
Byமாலை மலர்12 Jan 2021 2:39 PM GMT (Updated: 12 Jan 2021 2:39 PM GMT)
உசிலம்பட்டி அருகே தூக்குப்போட்டு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உசிலம்பட்டி:
உசிலம்பட்டி தேனி ரோட்டில் உள்ள காளை தேவர் தெருவை சேர்ந்தவர் வீரசிங்கம். இவர் உசிலம்பட்டி பஸ் நிலையத்தில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மகன் சுபாஷ்(வயது 15) .இவர் உசிலம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். சுபாஷ் தன்னுடைய பெற்றோரிடம் செல்போன் வாங்கித் தருமாறு அடிக்கடி கேட்டு வந்துள்ளான். இதற்கு பெற்றோர்கள் தற்போது வாங்கி தர இயலாது, விரைவில் வாங்கி தருகிறோம் என்று கூறியுள்ளனர். இதில் மனவேதனை அடைந்த சுபாஷ் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். இதுகுறித்து வந்த புகாரின் பேரில் உசிலம்பட்டி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X