search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவன் தற்கொலை"

    • பெற்றோர் தினமும் மகனுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி பள்ளிக்கு அனுப்பி வைத்து வந்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் அம்மாப்பேட்டை காமராஜர் காலனியை சேர்ந்தவர் சிவசண்முகம். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகின்றார். இவருடைய மனைவி கெஜலட்சுமி. இவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு ஹரிகரசுதன் (14) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    ஹரிகரசுதன் அயோத்தி யாப்பட்டணத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இதற்கிடையே ஹரிகரசுதனுக்கு பள்ளிக்கு போக விருப்பம் இல்லை என கூறப்படுகிறது. இதனால் பெற்றோர் தினமும் மகனுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி பள்ளிக்கு அனுப்பி வைத்து வந்தனர்.

    இந்த நிலையில் வழக்கம்போல் நேற்றும் ஹரிகரசுதன் தனது பெற்றோரிடம் பள்ளிக்கு போகமாட்டேன் என கூறி அடம்பிடித்ததாக கூறப்படுகிறது. பெற்றோர் அவருக்கு அறிவுரை கூறி காலையில் பள்ளி வாகனத்தில் அனுப்பி வைத்தனர். இதனால் மனமுடைந்த ஹரிகரசுதன் மாலையில் வகுப்பு முடிந்து வீட்டிற்கு வந்ததும் வீட்டிற்குள் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த நிலையில் கல்லூரியில் பயிலும் அவரது சகோதரி மாலையில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது தனது தம்பி தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி உடனே தனது பெற்றோருக்கு தெரிவித்தார். அவர்கள் வீட்டிற்கு விரைந்து வந்து மகனின் உடலை பார்த்து கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாலையில் நாகராஜன், தனது 2-வது மகனை பள்ளிக்கு சென்று அழைத்துக்கொண்டு வீடு திரும்பியுள்ளார்.
    • நரேன் கடந்த 2 ஆண்டுகளாக சரியாக படிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    நெல்லை:

    பாளையங்கோட்டை சாந்தி நகர் போலீஸ் காலனியை சேர்ந்தவர் நாகராஜன். இவருக்கு மனைவி மற்றும் நரேன் (வயது 14), சுஜித்(11) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

    நாகராஜன் தனியார் கட்டுமான நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பாளையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நரேன் பாளை-திருச்செந்தூர் சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பும், சுஜித் அதே பள்ளியில் 5-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று நரேன் பள்ளிக்கு செல்லவில்லை. அவரது தம்பி சுஜித் மட்டும் பள்ளிக்கு சென்றுள்ளார். அவரது பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்டனர். இதனால் நரேன் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

    இந்நிலையில் மாலையில் நாகராஜன், தனது 2-வது மகனை பள்ளிக்கு சென்று அழைத்துக்கொண்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் கதவு பூட்டிக்கிடந்துள்ளது. உடனே நாகராஜன் கதவை தட்டியுள்ளார். ஆனால் உள்ளே இருந்த நரேன் கதவை திறக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த நாகராஜன் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார்.

    அப்போது நரேன் வேஷ்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.

    அவரது உடலை பார்த்து நாகராஜன் அலறி துடித்தார். தகவல் அறிந்து வந்த அவரது மனைவியும் மகனின் உடலை பார்த்து கதறி அழுதார். இதுகுறித்து பாளை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுவனின் உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நரேன் கடந்த 2 ஆண்டுகளாக சரியாக படிக்கவில்லை என்று கூறப்படுகிறது. சமீபத்தில் நடந்த தேர்வு ஒன்றில் மிகக்குறைவான மதிப்பெண் எடுத்ததாகவும், இதனால் அவனது பெற்றோரை பள்ளிக்கு அழைத்த நிர்வாகம், நரேனின் படிப்பு குறித்து கூறி கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

    இதன் காரணமாக நரேன் மன உளைச்சல் அடைந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே மாணவன் தற்கொலைக்கு பள்ளி நிர்வாகத்தின் நெருக்கடியே காரணம் என குற்றம்சாட்டி மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இன்று பள்ளியின் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்களுடன் உதவி போலீஸ் கமிஷனர் ஆவுடையப்பன், இன்ஸ்பெக்டர் ஹரிஹரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது ஆர்.டி.ஓ. அயூப்கான், மாவட்ட கல்வி அலுவலர் ராஜா ஆகியோர் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் கொடுக்கும் அறிக்கையின்படி மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். எனினும் அவர்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். திடீரென அவர்கள் சாலை மறியலுக்கு முயன்றனர். அவர்களுக்கு ஆதரவாக சில அமைப்பினர்களும் திரண்டனர்.

    இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • பிரம்மதேசம் போலீசார் பவித்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • தற்கொலை செய்து கொண்ட மாணவன் பவித்திரன், பள்ளியில் பயிலும் மாணவியை கேலி செய்துள்ளார்.

    மரக்காணம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே நகர் என்கிற ஊரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இருபாலரும் பயிலும் இப்பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த 800-க்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர்.

    அதன்படி நகர் கிராமத்தை சேர்ந்த பவித்திரன் (வயது 13), அப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். இவன் நேற்று இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொணடான். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் கதறி அழுதனர். தகவல் அறிந்து விரைந்து வந்த பிரம்மதேசம் போலீசார் பவித்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும், தற்கொலை செய்து கொண்ட மாணவன் பவித்திரன், பள்ளியில் பயிலும் மாணவியை கேலி செய்துள்ளார். இதனை ஆசிரியர்கள் கண்டித்ததுடன், பவித்திரனை முட்டி போட வைத்துள்ளனர். இதனால் மனமுடைந்த மாணவன் வீட்டிற்கு வந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    தொடர்ந்து பிரம்மதேசம் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான போலீசார் அரசு மேல்நிலை பள்ளி ஆசிரியர் 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆசிரியர் கண்டித்ததால் பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • தீபக் சரியாக படிக்கவில்லை என்று பெற்றோரும், தேர்வுகளில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதற்காக ஆசிரியர்களும் கண்டித்து அறிவுரை கூறியுள்ளனர்.
    • பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி ராமேசுவரத்தில் இருந்து 20 நாட்களுக்கு பிறகு மீட்டனர்.

    சாயல்குடி:

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே அமைந்துள்ள ஏ.புனவாசல் கிராமத்தை சேர்ந்தவர் ஜெகநாதன், விவசாயி. இவரது மகன் தீபக் (வயது 15) 10-ம் வகுப்பும் படித்து வந்தார்.

    வழக்கத்தைவிட இன்று அதிகாலையிலேயே எழுந்த மாணவர் தீபக் குளித்து முடித்து, சீருடை அணிந்து பெற்றோரிடம் கூறிவிட்டு பள்ளிக்கு புறப்பட்டார். அவரது தந்தை காரணம் கேட்டபோது, பள்ளிக்கு சென்று படிக்க வேண்டியுள்ளது என்று தெரிவித்துள்ளார். பின்னர் அங்கிருந்து பேருந்தில் ஏறி பள்ளிக்கு வந்து சேர்ந்தார்.

    10-ம் வகுப்பு 'ஏ' பிரிவில் படிக்கும் அவர், முதல் மாணவராக பள்ளி வளாகத்திற்குள் வந்ததும், தனது புத்தகப்பையை வகுப்பறையில் வைத்துவிட்டு, 'சி' பிரிவுக்கு சென்றார். பின்னர் வகுப்பறை கதவுகளை பூட்டியுள்ளார். இதனை அங்கிருந்த யாரும் கவனிக்கவில்லை. இதையடுத்து வீட்டில் இருந்து மறைத்து எடுத்து வந்த நைலான் கயிற்றை அங்கிருந்த உத்திரத்தில் மாட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சுமார் 8.30 மணியில் இருந்து அடுத்தடுத்து மாணவர்கள் பள்ளிக்கு வரத்தொடங்கினர். 10-ம் வகுப்பு 'சி' பிரிவுக்கு சென்ற மாணவர்கள், வகுப்பறையில் தீபக் பிணமாக தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சியில் அலறினர். முதல்கட்ட விசாரணையில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு, தீபக் சரியாக படிக்கவில்லை என்று பெற்றோரும், தேர்வுகளில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதற்காக ஆசிரியர்களும் கண்டித்து அறிவுரை கூறியுள்ளனர். இதனை ஏற்றுக்கொள்ளாத தீபக், வீட்டை விட்டு வெளியேறி மாயமானார். அவரது பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி ராமேசுவரத்தில் இருந்து 20 நாட்களுக்கு பிறகு மீட்டனர்.

    இந்தநிலையில் தான் இன்று அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். படிப்பு மட்டுமே அவரது இந்த தற்கொலை முடிவுக்கு காரணமா அல்லது வேறு ஏதாவது பிரச்சனையில் சிக்கிக்கொண்டாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 

    • மனமுடைந்து காணப்பட்ட கல்லூரி மாணவர் மணிகண்டன் நேற்று வீட்டில் திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • மாணவனின் தற்கொலை குறித்து 15 வேலம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் சாமுண்டி புரத்தை சேர்ந்தவர் ஜெயராமன், பனியன் தொழிலாளி. இவரது மகன் மணிகண்டன் (வயது 19). இவர் கோவையில் உள்ள அரசு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்தநிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மணிகண்டனின் தந்தை ஜெயராமன் மாரடைப்பு ஏற்பட்டு திடீரென பலியானார்.

    இதனால் மனமுடைந்து காணப்பட்ட கல்லூரி மாணவர் மணிகண்டன் நேற்று வீட்டில் திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து 15 வேலம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    அப்போது மணிகண்டன், வீட்டில் கடிதம் ஒன்று எழுதி வைத்திருப்பது தெரியவந்தது. அந்த கடிதத்தில், என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. அப்பா உயிரோடு இருக்கும் போது அவரது அருமை எனக்கு தெரியவில்லை. அவரின் சொல் பேச்சு கேட்காமல் எனது இஷ்டம் போல் இருந்தேன்.

    எனவே நான் எனது தந்தையிடம் நேரடியாக சென்று மன்னிப்பு கேட்க செல்கிறேன். எனது நண்பர்கள் உள்ளிட்ட யாரிடமும் விசாரிக்க வேண்டாம். தந்தை சென்ற இடத்திற்கு நானும் செல்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நகுலை கவுந்தப்பாடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
    • புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் திங்களூர் அருகே நிச்சாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 41). இவரது மகன் நகுல் (14). இவர் வெள்ளாளங்கோயில் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று நகுலை சரியாக வீட்டுப்பாடம் செய்யவில்லை என ரமேஷ் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த நகுல் வீட்டில் தோட்டத்திற்காக வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்து விட்டார்.

    இதையடுத்து அருகில் இருந்தவர்கள் நகுலை கவுந்தப்பாடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதலுதவி பெற்று பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த நகுல் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து ரமேஷ் திங்களூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என மெசேஜ் அனுப்பி விட்டு போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டார்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து ராயந்த் ரெட்டியை தேடி வந்தனர்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம், நெல்லூரை சேர்ந்தவர் சுரேஷ் குமார் ரெட்டி. இவரது மனைவி ஸ்வப்னா ரெட்டி. தம்பதிக்கு 2 மகன்கள் இவர்களது மூத்த மகன் ராயந்த் ரெட்டி (வயது 14).

    இவர் ஐதராபாத், காஜாகுடா பகுதியில் உள்ள சர்வதேச பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    மகன்கள் இருவரும் ஐதராபாத்தில் படித்து வருவதால் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சுரேஷ்குமார் ரெட்டி தனது குடும்பத்தினருடன் ஐதராபாத் கச்சி பவுலி பகுதியில் உள்ள மை ஹோம் பூஜா அடுக்குமாடி குடியிருப்புக்கு குடி பெயர்ந்தார்.

    இந்நிலையில் ராயந்த் ரெட்டிக்கு படிப்பில் நாட்டம் இல்லாததால் சரிவர படிக்க முடியவில்லை. நேற்று முன்தினம் இரவு 8-30 மணி அளவில் ராயந்த் ரெட்டி தனது தாயாருக்கு செல்போனில் தகவல் அனுப்பினார். அதில் படிப்பில் இஷ்டம் இல்லாததால் அவமானமாக உள்ளது.

    இதனால் நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என மெசேஜ் அனுப்பி விட்டு போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டார்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது தாய் குடியிருப்பு காவலாளிகளுடன் சேர்ந்து இரவு முழுவதும் தேடினர். தகனது மகனை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதையடுத்து ராயதுர்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து ராயந்த் ரெட்டியை தேடி வந்தனர். நேற்று காலை அடுக்கு மாடி குடியிருப்பின் எச்.பிளாக் படிக்கட்டில் மாணவன் ராயந்த் ரெட்டி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் ராயந்த் ரெட்டி அடுக்குமாடி குடியிருப்பின் 35-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    • தேர்வு நேரத்தில் மாணவன் முடி மற்றும் தாடியை வெட்டாததால் பள்ளி நேரத்தில் மாணவனை பள்ளியை விட்டு வெளியே அனுப்பி உள்ளனர்.
    • மாணவனை பள்ளியை விட்டு அனுப்பி விட்டு மாணவனின் பெற்றோருக்கு பள்ளி ஆசிரியர்கள் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை அருகே விஜயபுரம் பகுதியை சேர்ந்தவர் கண்ணையா. இவர் நெடுஞ்சாலைத்துறையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மாரிகண்ணு. இவர்களுக்கு மகரஜோதி என்ற மகளும், மணிமுத்து மற்றும் மாதேஸ்வரன் என்ற 2 மகன்களும் உள்ளனர்.

    இதில் மாதேஸ்வரன் புதுக்கோட்டை தஞ்சை சாலையில் மச்சுவாடி அருகே உள்ள அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில் வேளாண்மை பிரிவில் பிளஸ் 2 படித்து வந்துள்ளார்.

    இதற்கிடையே மாணவன் மாதேஸ்வரன் தலைமுடி அதிகமாக வளர்த்து, தாடி வைத்து வந்ததால் தொடர்ந்து பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வரும் பொழுது முடியையும் தாடியையும் வெட்டி விட்டு வருமாறு கூறி கண்டித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இருப்பினும் அவர் தொடர்ந்து தலைமுடியை வெட்டாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாதேஸ்வரன் வழக்கம்போல் பள்ளியில் நடைபெறும் தேர்வுக்கு சென்றார்.

    பள்ளிக்கு சென்ற மாணவனை பள்ளி தலைமை ஆசிரியர் தலைமுடியை ஏன் வெட்டவில்லை. தலை முடியையும், தாடியையும் வெட்டிவிட்டு தேர்வு எழுத பகல் ஒரு மணிக்குள் வா என்று கூறி வருகை பதிவேட்டில் மாணவன் பள்ளிக்கு வந்துள்ளான் என்று குறித்து விட்டு மாதேஸ்வரனை காலை 11 மணிக்கு பள்ளியிலிருந்து திருப்பி அனுப்பியதாக தெரிகிறது.

    மேலும் மாணவனை பள்ளியை விட்டு அனுப்பி விட்டு மாணவனின் பெற்றோருக்கு பள்ளி ஆசிரியர்கள் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில் மாலை வரை மாணவன் மாதேஸ்வரன் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் அவர் படிக்கும் பள்ளி ஆசிரியர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது மாணவன் முடி மற்றும் தாடியை வெட்டாமல் பள்ளிக்கு வந்ததால் காலை 11 மணிக்கு முடியையும் தாடியையும் எடுத்துவிட்டு தேர்வு எழுத பகல் ஒரு மணிக்கு பள்ளிக்கு வா என்று கூறி அவரை அனுப்பி விட்டதாக தொலைபேசியில் தெரிவித்துள்ளனர்.

    அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள், குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர் பின்னர் இரவில் மாதேஸ்வரன் தான் படிக்கும் பள்ளிக்கு பின்புறம் உள்ள ஒரு மரத்தில் நைலான் கயிற்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தது தெரியவந்தது.

    இதனைப் பார்த்த மாதேஸ்வரனின் பெற்றோர், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து அவரது உடலை மரத்திலிருந்து கீழே இறக்கி வைத்து விட்டு மாணவனின் உடலை கட்டி அணைத்து கதறி அழுதனர்.

    இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கணேஷ் நகர் காவல்துறையினர் மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மாணவனின் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர்.

    அப்போது உறவினர்கள் மாணவனின் உயிரிழப்பிற்கு பள்ளியின் ஆசிரியர்கள் தான் காரணம். தேர்வு நேரத்தில் மாணவன் முடி மற்றும் தாடியை வெட்டாததால் பள்ளி நேரத்தில் மாணவனை பள்ளியை விட்டு வெளியே அனுப்பி உள்ளனர்.

    மேலும் மாணவனின் பெற்றோருக்கு எந்தவித தகவலையும் ஆசிரியர்கள் தெரிவிக்கவில்லை, இதனால் மன உளைச்சலில் இருந்த மாணவன் இந்த நிலைக்கு ஆளாகியுள்ளான் என்றும் மாணவன் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளது.

    சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடலை அங்கிருந்து எடுக்கவிடமாட்டோம் என்று கூறியதோடு மாணவனின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மாணவனின் உடலை தூக்கி புதுக்கோட்டை தஞ்சை சாலையில் மறியல் செய்ய முயன்றனர்.

    அப்போது தடுத்து நிறுத்திய நகரத் துணை போலீஸ் சூப்பிரண்டு ராகவி தலைமையிலான போலீசார் மாணவன் மாதேஸ்வரனின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பிரேத பரிசோதனை செய்து முடிவு வந்ததற்கு பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

    இதை அடுத்து போராட்டத்தை அவர்கள் கைவிட்டனர். மாணவனின் உடலை எடுத்துச் செல்ல அனுமதித்ததை தொடர்ந்து காவல்துறையினர் அரசு அமரர் ஊர்தி மூலம் உடற்கூறு ஆய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடலை பாதுகாப்போடு எடுத்துச் சென்றனர்.

    மேலும் நள்ளிரவில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட மாணவனின் உடலை காவல்துறையினரை எடுக்க விடாமல் மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது. அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இச்சம்பவம் குறித்து புதுக்கோட்டை மாவட்ட கல்வி அதிகாரி விசாரணை நடத்தி வருகிறார்.

    • வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கமலேஷ் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான்.
    • அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார்.

    பாகூர்:

    புதுச்சேரி அரியாங்குப்பத்தை அடுத்த வீராம்பட்டினம் நடுத்தெருவை சேர்ந்தவர் பச்சை வள்ளி. இவர் புதுவையில் உள்ள தனியார் ஜவுளி கடையில் துப்புரவளராக வேலை செய்து வருகிறார். இவரது கணவர் அருள்தாஸ் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு மீன்பிடி படகில் அடிபட்டு இறந்து விட்டார்.

    இவர்களுக்கு கமலேஷ் (வயது 17), ரிஸ்வான் (12) 2 மகன்கள். கமலேஷ் புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு படித்து வந்தான்.

    இவன் வீட்டில் இருக்கும் நேரங்களில் செல்போனில் ப்ரீ பையர் எனும் விளையாட்டை தொடர்ந்து விளையாடிக் கொண்டிருப்பது வழக்கம்.

    அதேபோல் நேற்று இரவும் கமலேஷ் செல்போனில் விளையாடிக் கொண்டிருந்தான். இன்று காலை செல்போனுக்கு ரீசார்ஜ் பண்ணுவதற்காக தனது தாய் பச்சை வள்ளியிடம் பணம் கேட்டான். அதற்கு வேலைக்கு சென்று விட்டு மாலையில் தருவதாக கமலேஷிடம் கூறிவிட்டு பச்சையம்மாள் வேலைக்கு சென்று விட்டார்.

    விடுமுறை நாளான இன்று வீட்டிலிருந்தும் செல்போனில் விளையாட முடியாத வேதனையில் இருந்த கமலேஷ் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தான்.

    வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கமலேஷ் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான்.

    இது குறித்து அக்கம் பக்கத்தினர் பச்சைவள்ளிக்கு தகவல் தெரிவித்தனர். இதைகேட்டு அதிர்ச்சியடைந்த பச்சைவள்ளி பதறி அடித்து கொண்டு வீட்டு வந்தார். அங்கு மகனின் உடலை பார்த்து கதறி அழுதார்.

    பின்னர் இதுகுறித்து அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து வந்து மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செல்போனில் விளையாடுவதற்கு ரீசார்ஜ் செய்ய தாய் பணம் தராததால் மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • செல்போனில் விளையாடிக் கொண்டிருந்த தாமுவை தாயார் திட்டியதாக கூறப்படுகிறது.
    • மாணவன் உயிரிழப்பு தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் கணியம்பாடி அடுத்த பெரிய பாலப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் வசந்தகுமார் முன்னாள் ராணுவ வீரர் இவரது மனைவி கீதா, மகன் தாமு (வயது 14). அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் 8-ம் வகுப்பு படித்து வந்தான்.

    வசந்த் குமார் உயிரிழந்த நிலையில் தனது தாயுடன் வசித்து வந்தார். தாமு எந்நேரமும் செல்போன் மூலம் பிரீ பயர் கேம் விளையாடி வந்துள்ளார். இதனால் அவரது தாயார் தொடர்ந்து அவரை எச்சரித்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு செல்போனில் விளையாடிக் கொண்டிருந்த தாமுவை தாயார் திட்டியதாக கூறப்படுகிறது.

    கோபித்துக் கொண்ட மாணவன் தாமு மொட்டை மாடிக்கு சென்றார். இரவு ஒரு மணி ஆகியும் மகன் வராததால் தாய் கீதா மாடிக்கு சென்று பார்த்தார்.

    அங்கு பிளேடால் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் தாமு இறந்து கிடந்தான். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் கதறி அழுதார்.

    வேலூர் தாலுகா போலீசார் மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திாக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் மாணவன் உயிரிழப்பு தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாணவன் தாமு பொதுவாக யாரிடமும் பேசாமலும், பழகாமலும் பெரும்பாலான நேரம் தனிமையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அதேசமயம் நன்றாக படிக்கக் கூடியவராகவும் இருந்துள்ளார்.

    அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

    • ரெதின் கல்லூரி ஒன்றில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
    • ரெதினுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது.

    நாகர்கோவில்:

    விளவங்கோடு ஒடையன் விளை பகுதியை சேர்ந்தவர் ரெஜிஸ்குமார். இவர் கேரளாவில் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் ரெதின் ரெதீஷ் ஜெயந்திரோஜர் (வயது 22).

    இவர் அந்த பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. நேற்றும் மதுபோதையில் வீட்டிற்கு சென்று உள்ளார். இதையடுத்து அவரது பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர்.

    இதனால் மனமுடைந்த ரெதின் வீட்டிலிருந்து புறப்பட்டார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது பெற்றோர் அவரை தேடினார்கள்.

    இந்த நிலையில் குழித்துறை ரெயில்வே ஆற்றுப்பாலம் பகுதியில் ரெதின் தற்கொலை செய்து இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

    பிணமாக கிடந்த ரெதின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கல்லூரி மாணவன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • உடல் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது .
    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம் மரவனேரி பிரபுநகர் பகுதியை சேர்ந்தவர் மதன்கிருஷ்ணன். இவரது மகன் சாரதி (16). இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்தநிலையில் 10-ம் வகுப்பு படிப்பதால் பள்ளியில் அதிக அளவில் வீட்டுப்பாடம் கொடுத்துள்ளனர். இதனை அவர் சரியாக எழுதாததால் ஆசியர்கள் கண்டித்துள்ளனர். இதனால் சாரதி பள்ளிக்கு செல்ல மனமில்லாமல் இருந்துள்ளார்.

    இதற்கிடையே அவரது பெற்றோரும் 10-ம் வகுப்பு படித்து முடியும் வரை சற்று கஷ்டமாகதான் இருக்கும், இதனால் பள்ளிக்கு செல்லுமாறு கூறி உள்ளனர். இதனால் மனம் உடைந்த தனது சகோதரனிடம் நாளை பள்ளிக்கு செல்லமாட்டேன் என்று சாரதி கூறி உள்ளார்.

    பின்னர் நேற்றிரவு வீட்டில் தூங்க சென்றார். சற்று நேரத்தில் வீட்டின் கதவை பெற்றோர் தட்டிய நிலையில் கதவை திறக்காததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

    அப்போது வீட்டில் உள்ள மின் விசிறிக்காக அமைக்கப்பட்ட கொக்கியில் தூக்கு போட்ட நிலையில் தொங்கினார். இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இறந்து விட்டார். தொடர்ந்து அவரது உடல் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது .

    இந்த சம்பவம் குறித்து கன்னங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×