என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருத்தணி அருகே 6-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
- மாணவன் பிரவீன் குமாருக்கு விடுதியில் தங்கி படிக்க விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருத்தணி:
திருத்தணி அடுத்த சீனிவாசபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் பிரவீன்குமார் (வயது11). இவர், பொதட்டூர் பேட்டை அருகே உள்ள பாண்டரவேடு கிராமத்தில் உள்ள புனித இதய மேல் நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி 6-ம் வகுப்பு படித்து வந்தார். ஆனால் மாணவன் பிரவீன் குமாருக்கு விடுதியில் தங்கி படிக்க விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சனி, ஞாயிறு விடுமுறை நாளில் விடுதியில் இருந்து வீட்டுக்கு வந்திருந்தார். பின்னர் அவர் பள்ளிக்கு செல்ல மறுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவரை பெற்றோர் பள்ளியில் விட்டு வந்து உள்ளனர்.
இந்த நிலையில் பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்த மாணவன் பிரவீன்குமார் திடீரென வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
விடுதியில் தங்கி படிக்க விருப்ப மில்லாத நிலையில் பெற்றோரின் வற்புறுத்தலால் மனம் உடைந்த மாணவன் தற்கொலை செய்து இருக்கலாம் என்று தெரிகிறது. இது குறித்து திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்