என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காசிமேடு மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது
Byமாலை மலர்21 Sep 2020 3:18 AM GMT (Updated: 21 Sep 2020 3:18 AM GMT)
புரட்டாசி மாதம் தொடங்கினாலும் காசிமேடு மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் குறைந்தபாடில்லை. இறைச்சி கடைகளில் வழக்கத்தைவிட கூட்டம் சற்று குறைந்திருந்தது.
சென்னை:
கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருந்த காலத்தில் மீன் மார்க்கெட் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்ட பிறகு, மீன் மார்க்கெட்டுகளில் கூட்டம் அலைமோதுகிறது. அதன்படி, நேற்றும் காசிமேடு, வானகரம், சிந்தாதிரிப்பேட்டை, திரு.வி.க.நகர் போன்ற இடங்களில் உள்ள மீன் மார்க்கெட்டுகளில் எப்போதும் போலவே மக்கள் கூட்டம் அலைமோதியது.
அதிலும் காசிமேடு மீன் மார்க்கெட்டில் வழக்கம்போல் தேன் கூட்டில் தேனீக்கள் மொய்ப்பது போன்று கூட்டம்கூடி தற்போதுள்ள கொரோனா காலத்தில் பின்பற்ற வேண்டிய சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்டுவிட்டனர். மீன் மார்க்கெட்டுகளுக்கு வந்திருந்த பெரும்பாலான வியாபாரிகள், பொதுமக்கள் முக கவசம் அணிந்திருந்தாலும், சிலர் அதை ஒரு பொருட்டாக கருதாமல் சாதாரண நாட்களில் உலாவுவது போல சென்றனர்.
புரட்டாசி மாதம் தொடங்கினால் பொதுவாக அசைவ உணவு வகைகளின் விற்பனை, விலை குறைந்து காணப்படும். ஆனால் புரட்டாசி மாதம் தொடங்கினாலும் நேற்று காசிமேடு மீன் மார்க்கெட்டில் விற்பனையும், விலையும் வழக்கத்தைப் போலவே இருந்தது. பொதுமக்கள், வியாபாரிகள் அதிகளவில் வந்து வாங்கிச் சென்றனர்.
கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் எவ்வளவு தான் நடவடிக்கை எடுத்தாலும் பொதுமக்களின் ஈடுபாடு இருந்தால் மட்டுமே அது சாத்தியம் ஆகும் என்பதற்கு காசிமேடு மீன் மார்க்கெட் ஒரு சிறந்த உதாரணமாக இருக்கிறது.
ஆனால் இறைச்சி கடைகளில் கடந்த சில நாட்களாக மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டு வந்தது. இந்த நிலையில் புரட்டாசி மாதம் தொடங்கியதை தொடர்ந்து அங்கு கூட்டம் வழக்கத்தைவிட சற்று குறைந்திருந்ததை பார்க்க முடிந்தது. விற்பனை குறைந்திருந்தாலும், இறைச்சி வகைகளின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமலே காணப்பட்டது.
கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருந்த காலத்தில் மீன் மார்க்கெட் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்ட பிறகு, மீன் மார்க்கெட்டுகளில் கூட்டம் அலைமோதுகிறது. அதன்படி, நேற்றும் காசிமேடு, வானகரம், சிந்தாதிரிப்பேட்டை, திரு.வி.க.நகர் போன்ற இடங்களில் உள்ள மீன் மார்க்கெட்டுகளில் எப்போதும் போலவே மக்கள் கூட்டம் அலைமோதியது.
அதிலும் காசிமேடு மீன் மார்க்கெட்டில் வழக்கம்போல் தேன் கூட்டில் தேனீக்கள் மொய்ப்பது போன்று கூட்டம்கூடி தற்போதுள்ள கொரோனா காலத்தில் பின்பற்ற வேண்டிய சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்டுவிட்டனர். மீன் மார்க்கெட்டுகளுக்கு வந்திருந்த பெரும்பாலான வியாபாரிகள், பொதுமக்கள் முக கவசம் அணிந்திருந்தாலும், சிலர் அதை ஒரு பொருட்டாக கருதாமல் சாதாரண நாட்களில் உலாவுவது போல சென்றனர்.
புரட்டாசி மாதம் தொடங்கினால் பொதுவாக அசைவ உணவு வகைகளின் விற்பனை, விலை குறைந்து காணப்படும். ஆனால் புரட்டாசி மாதம் தொடங்கினாலும் நேற்று காசிமேடு மீன் மார்க்கெட்டில் விற்பனையும், விலையும் வழக்கத்தைப் போலவே இருந்தது. பொதுமக்கள், வியாபாரிகள் அதிகளவில் வந்து வாங்கிச் சென்றனர்.
கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் எவ்வளவு தான் நடவடிக்கை எடுத்தாலும் பொதுமக்களின் ஈடுபாடு இருந்தால் மட்டுமே அது சாத்தியம் ஆகும் என்பதற்கு காசிமேடு மீன் மார்க்கெட் ஒரு சிறந்த உதாரணமாக இருக்கிறது.
ஆனால் இறைச்சி கடைகளில் கடந்த சில நாட்களாக மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டு வந்தது. இந்த நிலையில் புரட்டாசி மாதம் தொடங்கியதை தொடர்ந்து அங்கு கூட்டம் வழக்கத்தைவிட சற்று குறைந்திருந்ததை பார்க்க முடிந்தது. விற்பனை குறைந்திருந்தாலும், இறைச்சி வகைகளின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமலே காணப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X