search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kasimedu Fish Market"

    • மீன்பிடி துறைமுகத்தில் இருந்த மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
    • சூர்யாவிற்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ராயபுரம்:

    எர்ணாவூர், நேதாஜி நகரை சேர்ந்தவர் சூர்யா என்கிற கேரளா சூர்யா (வயது 22).ரவுடி. இவர் மீது கொலை உள்பட மொத்தம் 7 வழக்குகள் உள்ளன.

    இந்நிலையில் நேற்று இரவு சூர்யா காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ஏலம் விடும் இடத்திற்கு வந்தார்.

    அப்போது பின் தொடர்ந்து வந்த 7 பேர் கும்பல் திடீரென கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அவரை சுற்றி வளைத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சூர்யா அவர்களிடம் இருந்து தப்பிக்க ஓடினார்.

    ஆனால் மர்ம கும்பல் அவரை ஓட, ஓட விரட்டி சரமாரியாக வெட்டினர். இதில் தலை, கழுத்தில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த சூர்யா ரத்த வெள்ளத்தில் சரிந்தார். உடனே மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

    இதனை கண்டு மீன்பிடி துறைமுகத்தில் இருந்த மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து காசிமேடு மீன்பிடி துறைமுக போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உயிருக்கு போராடிய சூர்யாவை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சியை வைத்து மர்ம கும்பல் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இன்று விடுமுறை நாள் என்பதால் வழக்கத்தை விட காசிமேடு மீன்மார்க் கெட்டில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
    • மற்ற மீன்களின் விலையும் கடந்த வாரத்தை விட சற்று அதிகமாகவே காணப்பட்டது.

    ராயபுரம்:

    காசிமேடு மீன்மார்க் கெட்டில் விடுமுறை நாட்களில் மீன்வாங்க மக்கள் கூட்டம் அதிகம் அலை மோதும். மீன்பிடி தடை காலத்திற்கு பின்னர் கடந்த வாரமாக எதிர்பார்த்த அளவு பெரியவகை மீன்கள் வராமல் இருந்தது.

    இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்ற 400 முதல் 450 விசை படகு மீனவர்கள் கரைக்கு திரும்பினர்.

    இதனால் பெரிய வகை மீன்கள் விற்பனைக்கு அதிக அளவில் குவிந்து இருந்தன. வஞ்சிரம், வவ்வால், பாறை, உள்ளிட்ட மீன்கள் அதிகமாக காணப்பட்டது.

    பெரியவகையாக இருந்ததால் சங்கரா, பாறை, இறால், கடம்பா போன்ற மீன்களின் விலை ரூ.50 முதல் ரூ.100 வரை விலை கூடுதலாக விற்கப்பட்டன. இதேபோல் மற்ற மீன்களின் விலையும் கடந்த வாரத்தை விட சற்று அதிகமாகவே காணப்பட்டது.

    இன்று விடுமுறை நாள் என்பதால் வழக்கத்தை விட காசிமேடு மீன்மார்க் கெட்டில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதிகாலை 2 மணி முதலே மீன்வியாபாரிகள் மற்றும் மக்கள் கூட்டம் அலைமோதியது. மீன்விலை அதிகமாக இருந்ததால் மீன்பிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர். எனினும் பெரியவகை மீன்களை போட்டி போட்டு வாங்கிச் சென்றனர். பெரியவகை வஞ்சிரம் ஒரு கிலோ ரூ.1000 முதல் ரூ.1100 வரை விற்கப்பட்டது. காசிமேட்டில் மீன்விலை(கிலோவில்) வருமாறு:-

    கொடுவா- ரூ.600

    சீலா- ரூ.500

    சங்கரா- ரூ.500

    பாறை- ரூ.600

    இறால்- ரூ.400

    நண்டு- ரூ.300

    நவரை- ரூ.200

    கானங்கத்தை- ரூ.200

    கடம்பா- ரூ.300

    • ஆழ்கடல் மீன்பிடிக்க சென்ற சுமார் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரைக்கு திரும்பின.
    • மீன் விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை.

    ராயபுரம்:

    தமிழகத்தில் ஏப்ரல் 15-ந் தேதி தொடங்கிய 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் கடந்த 14-ந் தேதியுடன் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து காசிமேட்டில் இருந்து சுமார் 800 விசைப்படகு மீனவர் கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.

    கடந்த வாரம் முதல் ஞாயிற்றுக் கிழமையின் போது குறைந்த அளவிலான விசைப்படகுகளே கரை திரும்பியதால் பெரியவகை மீன்கள் எதிர்பார்த்த அளவு விற்பனைக்கு வரவில்லை.

    இந்த நிலையில் தடைக்காலம் முடிந்து 2-வது ஞாயிற்றுக் கிழமையான இன்று ஆழ்கடல் மீன்பிடிக்க சென்ற சுமார் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரைக்கு திரும்பின.

    இதனால் காசிமேட்டில் பெரியவகை மீன்கள் அதிக அளவில் விற்பனைக்கு குவிந்து இருந்தது. கடந்த வாரத்தை விட இன்று பெரிய வகை மீன்கள் அதிக அளவு விற்பனை செய்யப்பட்டது.

    இதையொட்டி அதிகாலை முதலே பொது மக்கள், வியாபாரிகள் மீன்வாங்க குவிந்ததால் காசிமேட்டில் கூட்டம் அலைமோதியது.

    வஞ்சிரம், பாறை, வவ்வால், நெத்திலி, சங்கரா, இறால், கடமா உள்ளிட்ட மீன்களை பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கிச் சென்றனர். ஆனால் மீன் விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. இதனால் மீன் பிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    வஞ்சிரம் ஒரு கிலோ ரூ.1000 முதல் ரூ.1200 வரை விற்பனை செய்யப்பட்டது. பாறை ரூ.400 முதல் ரூ.500 வரையும், இறால் ரூ.400 முதல் ரூ.1300 வரையும், சங்கரா ரூ.300 முதல் ரூ.500 வரையும், வவ்வால் மீன் ரூ.300 முதல் ரூ.600 வரையும், பாறை-ரூ.350,நெத்திலி-ரூ.150 க்கு விற்பனை ஆனது.

    இதுகுறித்து மீனவர்கள் கூறும்போது, கடந்த வாரத்தை விட கூடுதலாக விசைப்படகுகள் கரை திரும்பியதால் பெரியவகை மீன்கள் விற்பனைக்கு வந்துள்ளன. அடுத்த வாரத்தில் கூடுதலாக மீன்கள் வரும் என்பதால் விலை குறைய வாய்ப்பு உள்ளது என்றனர்.

    • மோக்கா புயல் காரணமாக சிறிய வகை படகுகளும் கடலுக்குள் செல்லாததால் காசிமேடு மார்க்கெட்டுக்கு மீன் வரத்து முற்றிலும் குறைந்தது.
    • இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் மீன் வாங்க ஏராளமானோர் மார்க்கெட்டுக்கு வந்தனர்.

    ராயபுரம்:

    வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள மோக்கா புயல் இன்று வங்கதேசம் மற்றும் மியான்மர் இடையே கரையைக் கடக்கிறது. புயல் சின்னம் காரணமாக மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று ஏற்கனவே வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.

    ஏற்கனவே கடந்த மாதம் 15-ந்தேதி முதல் மீன்பிடி தடைகாலம் நடைமுறையில் உள்ளது. இதனால் விசைப்படகுகள் ஆழ்கடலுக்குள் செல்லவில்லை. சிறியவகை பைபர் படகுகளில் மட்டும் மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன்பிடித்து வருகிறார்கள்.

    இதன் காரணமாக தடைகாலம் தொடங்கியது முதல் காசிமேடு மீன்மார்க்கெட்டுக்கு குறைந்த அளவு மீன்களே விற்பனைக்கு வந்தன.

    தற்போது மோக்கா புயல் காரணமாக சிறிய வகை படகுகளும் கடலுக்குள் செல்லாததால் காசிமேடு மார்க்கெட்டுக்கு மீன் வரத்து முற்றிலும் குறைந்தது. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் மீன் வாங்க ஏராளமானோர் மார்க்கெட்டுக்கு வந்தனர்.

    ஆனால் எதிர்பார்த்த மீன்கள் இல்லாததால் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் விலையும் கடந்த வாரத்தை விட 2 மடங்கு அதிகமாக இருந்தது.

    சிறியவகை மீன்களான நெத்திலி, சங்கரா, நண்டு, இறால் மட்டுமே விற்பனைக்கு வந்திருந்தன. இதில் பாறை, சங்கரா, கொடுவா, வவ்வால் மற்றும் சிறிய வகை மீன்கள் வரத்து முற்றிலும் இல்லை.

    இதனால் சிறிய வகை வஞ்சிரம் கிலோ ரூ.900-க்கும், பெரியவகை வஞ்சிரம் ரூ.2 ஆயிரம் வரையும் விற்கப்பட்டது.

    இதேபோல் கடந்த வாரத்தில் ரூ.450 வரை விற்ற நெத்திலி இன்று ரூ.600-க்கும், சங்கரா ரூ.900-க்கும், இறால்-ரூ.600 வரையும், நண்டு ரூ.700 வரையும் விற்பனை ஆனது.

    இதுகுறித்து மீன் வியாபாரிகள் கூறும்போது, தடைகாலம் உள்ள நிலையில் புயல் சின்னம் காரணமாக சிறிய படகுகளிலும் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை. இதனால் காசிமேடு மார்க்கெட்டுக்கு இன்று குறைந்த மீன்களே விற்பனைக்கு வந்தன. இதன் காரணமாக மீன்விலை அதிகரித்து இருந்தது என்றார்.

    • வஞ்சிரம், வவ்வால், திருக்கை மீன்கள், ஊடான், வஞ்சிரம், சூறை உள்ளிட்ட பெரிய வகை மீன்களின் வரத்து அதிகமாக இருந்தது.
    • வஞ்சிரம் கிலோ ரூ.1100-வரை விற்பனை ஆனது. வவ்வால்மீன்-ரூ.800, பாறை ரூ.600-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    ராயபுரம்:

    புரட்டாசி மாதத்தில் பெரும்பாலானோர் அசைவ உணவை தவிர்ப்பது வழக்கம். சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளை வழிபடுவார்கள்.

    புரட்டாசி மாதத்தில் வரும் நான்கு சனிக்கிழமைகளும் நேற்றுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று காசிமேட்டில் மீன் வாங்க திரளானோர் குவிந்தனர்.

    அதிகாலை முதலே வியாபாரிகள், பொதுமக்கள் திரண்டதால் கடும் கூட்டம் காணப்பட்டது. அவர்கள் போட்டி போட்டு விரும்பிய மீன்களை வாங்கி செல்கின்றனர்.

    100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் இன்று கரை திரும்பியதால் வஞ்சிரம், வவ்வால், திருக்கை மீன்கள், ஊடான், வஞ்சிரம், சூறை, உள்ளிட்ட பெரிய வகை மீன்களின் வரத்து அதிகமாக இருந்தது. வஞ்சிரம் கிலோ ரூ.1100-வரை விற்பனை ஆனது. வவ்வால்மீன்-ரூ.800, பாறை ரூ.600-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    மீன்விலை வழக்கத்தை விட அதிகம் என்றாலும் பொதுமக்கள் மீன்களை அதிக அளவில் வாங்கிச் சென்றனர். இதனால் மீன்வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மீன் வியாபாரிகள் கூறும்போது, புரட்டாசி சனிக்கிழமை முடிந்ததால் மீன்வியாபாரம் பழைய நிலைக்கு திரும்பி உள்ளது. கடந்த வாரத்தை ஒப்பிடும்போது இந்த வாரம் கடலுக்கு செல்லாமல் இருந்த விசைப்படகுகள் அதிக அளவில் கடலுக்கு சென்று திரும்பின. மீன்களின் வரத்து மற்றும் பெரிய அளவிலான திருக்கை மீன்கள், ஊடான், வஞ்சிரம், சூறை, உள்ளிட்ட மீன்கள் அதிக அளவில் பிடிபட்டுள்ளன.

    அசைவ பிரியர்களின் படையெடுப்பால் காசிமேடு மீன் பிடி துறைமுகம் களை கட்டியுள்ளது. சில்லரை வியாபாரிகளும் தங்கள் பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்வ தற்காக ஏலத்தில் அதிக அளவில் மீன்களை வாங்கி சென்றனர் என்றார்.

    காசிமேட்டில் மீன் விலை (கிலோவில்)வருமாறு:-

    வஞ்சிரம்- ரூ.1100

    வவ்வால்- ரூ.800

    பாறை- ரூ.600

    சங்கரா- ரூ.400

    திருக்கை- ரூ.350

    நெத்திலி- ரூ.200

    சூறை- ரூ.500

    கடம்பா- ரூ.400

    இறால்- ரூ.350

    ×