search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொன் ராதாகிருஷ்ணன்
    X
    பொன் ராதாகிருஷ்ணன்

    பாஜகவை மையமாக வைத்தே தமிழக அரசியல் நடக்கிறது- பொன் ராதாகிருஷ்ணன்

    தமிழகத்தில் பாஜகவை மையமாக வைத்து அரசியல் நடக்கிறது என்று முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
    தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் வேளையில், பாஜக தேர்தல் பணிகளை தீவிரமாக தொடங்கிவிட்டது. அண்மை காலமாக தமிழகத்தில் அடுத்து பாஜக ஆட்சிதான். பாஜக கைகாட்டும் கட்சிதான் ஆட்சியளிக்கும் என்றெல்லாம தமிழக பாஜக தலைவர்கள் பேசி வருகிறார்கள்.

    இந்நிலையில் தமிழக பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன் கூறியதாவது, 

    தமிழகத்தில் பாஜகவை மையமாக வைத்து அரசியல் நடக்கிறது. பிரதமர் மோடியை ஆதரித்தோ, எதிர்த்தோ பேசினால் தான் அரசியலில் நிலைக்க முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது. 

    மாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் முயற்சியில் திமுகவும், பிரபல நடிகர்களும் ஈடுபட வேண்டாம். தமிழகத்தில் லட்சக்கணக்கான மாணவர்கள் நீட் தேர்வை எழுதியதை சூர்யா நினைவில் கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.
    Next Story
    ×