search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி - துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம்
    X
    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி - துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம்

    எம்.ஜி.ஆர். அண்ணன் மகன் மரணம்: எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் இரங்கல்

    எம்.ஜி.ஆர். அண்ணன் மகன் மரணமடைந்ததையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
    சென்னை:

    முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சரும், கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

    அ.தி.மு.க. நிறுவனத்தலைவர் எம்.ஜி.ஆரின் சகோதரர் மறைந்த எம்.ஜி.சக்கரபாணியின் மகன் எம்.சி.சந்திரன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமடைந்தோம்.

    சந்திரனை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு இந்த துயரத்தை தாங்கிக்கொள்ள கூடிய சக்தியையும், தைரியத்தையும் இறைவன் அளிக்க வேண்டும் என்றும், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
    Next Story
    ×