என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மத்திய அரசை பின்பற்றியே தமிழகத்தில் மத ஊர்வலங்களுக்கு தடை- முதலமைச்சர்
Byமாலை மலர்20 Aug 2020 8:32 AM GMT (Updated: 20 Aug 2020 8:32 AM GMT)
மத்திய அரசை பின்பற்றியே மத ஊர்வலங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
வேலூர்:
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது.
* கொரோனா பாதிப்பை கண்டறிவதற்கு வேலூரில் 2,609 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.
* ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3,350 காய்ச்சல் முகாம்கள் நடைபெற்றுள்ளன.
* திருப்பத்தூர் மாவட்டத்தில் சுய உதவிக்குழுக்களுக்கு 3 ஆண்டுகளில் ரூ.583.45 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
* சிறப்பு குறைதீர் திட்டம் மூலம் தீர்வு காணப்பட்ட மனுக்களின் எண்ணிக்கை: வேலூர் - 11,667, ராணிப்பேட்டை - 7,524, திருப்பத்தூர் - 4,650
* இருசக்கர வாகன திட்டத்தில் பயனடைந்தோர் எண்ணிக்கை: வேலூர்-3,882, ராணிப்பேட்டை-3,878, திருப்பத்தூர்-3,540
* கொரோனாவை தடுக்க குடும்ப அட்டையில் பெயர் உள்ள அனைவருக்கும் விலையில்லா முகக்கவசம் வழங்கப்பட்டுள்ளது.
* தென்பெண்ணையாறு-பாலாறு இணைப்புத்திட்டத்திற்கு பணிகள் நடைபெற்று வருகின்றன.
* வேலூர் மாவட்டத்தில் பிற பகுதிகளை சேர்ந்த பெண் தொழிலாளர்களுக்கு விடுதி கட்ட பரிசீலனை
* கொரோனாவால் அரசுக்கு வருவாய் இழப்பு இருந்தாலும் மக்களுக்கான திட்டங்கள் குறைவின்றி நிறைவேற்றப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டது குறித்த கேள்விக்கு முதலமைச்சர் கூறியதாவது:
கொரோனா அச்சுறுத்தலால் மத ஊர்வலங்களை மத்திய அரசு அனுமதிக்கவில்லை; அதனை தமிழக அரசு பின்பற்றுகிறது. நீதிமன்ற உத்தரவு, மத்திய அரசு வழிகாட்டுதல்படி விநாயகர் சதுர்த்தி கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது.
* கொரோனா பாதிப்பை கண்டறிவதற்கு வேலூரில் 2,609 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.
* ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3,350 காய்ச்சல் முகாம்கள் நடைபெற்றுள்ளன.
* திருப்பத்தூர் மாவட்டத்தில் சுய உதவிக்குழுக்களுக்கு 3 ஆண்டுகளில் ரூ.583.45 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
* சிறப்பு குறைதீர் திட்டம் மூலம் தீர்வு காணப்பட்ட மனுக்களின் எண்ணிக்கை: வேலூர் - 11,667, ராணிப்பேட்டை - 7,524, திருப்பத்தூர் - 4,650
* இருசக்கர வாகன திட்டத்தில் பயனடைந்தோர் எண்ணிக்கை: வேலூர்-3,882, ராணிப்பேட்டை-3,878, திருப்பத்தூர்-3,540
* கொரோனாவை தடுக்க குடும்ப அட்டையில் பெயர் உள்ள அனைவருக்கும் விலையில்லா முகக்கவசம் வழங்கப்பட்டுள்ளது.
* தென்பெண்ணையாறு-பாலாறு இணைப்புத்திட்டத்திற்கு பணிகள் நடைபெற்று வருகின்றன.
* வேலூர் மாவட்டத்தில் பிற பகுதிகளை சேர்ந்த பெண் தொழிலாளர்களுக்கு விடுதி கட்ட பரிசீலனை
* கொரோனாவால் அரசுக்கு வருவாய் இழப்பு இருந்தாலும் மக்களுக்கான திட்டங்கள் குறைவின்றி நிறைவேற்றப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டது குறித்த கேள்விக்கு முதலமைச்சர் கூறியதாவது:
கொரோனா அச்சுறுத்தலால் மத ஊர்வலங்களை மத்திய அரசு அனுமதிக்கவில்லை; அதனை தமிழக அரசு பின்பற்றுகிறது. நீதிமன்ற உத்தரவு, மத்திய அரசு வழிகாட்டுதல்படி விநாயகர் சதுர்த்தி கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X