என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இருவேறு விபத்துகளில் விவசாயி உள்பட 2 பேர் பலி
Byமாலை மலர்13 Aug 2020 1:29 PM GMT (Updated: 13 Aug 2020 1:29 PM GMT)
ஒட்டன்சத்திரம் பகுதியில் நிகழ்ந்த இருவேறு விபத்துகளில் விவசாயி உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்து போனார்கள்.
ஒட்டன்சத்திரம்:
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியை சேர்ந்தவர் தமிழரசன் (வயது 33). இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றில் ஊழியராக வேலை செய்து வந்தார். இந்தநிலையில் அவர் தனது சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்தார். இதற்காக அவர் திருப்பூரில் இருந்து ஒட்டன்சத்திரம் வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
ஒட்டன்சத்திரத்தை அடுத்த மூலசத்திரம் என்ற இடத்தில் தமிழரசன் வந்தபோது, எதிரே வந்த மினி லாரி ஒன்று அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கிவீசப்பட்ட தமிழரசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சக்கம்பட்டியை சேர்ந்தவர் மணிவேல் (51). விவசாயி. இவர் நேற்று வேலை தொடர்பாக அருகில் உள்ள அம்பிளிக்கை கிராமத்திற்கு சென்றார். பின்னர் அங்கிருந்து சக்கம்பட்டி நோக்கி மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒட்டன் சத்திரம்-தாராபுரம் சாலையை அவர் கடக்க முயன்றதாக தெரிகிறது. அந்த வேளையில் அவ்வழியாக வந்த கார் ஒன்று, மொபட் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே மணிவேல் இறந்தார். இதுகுறித்து அம்பிளிக்கை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X