search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
    X
    உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

    மணல் விற்பனையை ஒழுங்குபடுத்தக் கோரி வழக்கு - அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

    மணல் விற்பனையை ஒழுங்குபடுத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
    மதுரை:

    மணல் விற்பனையை ஒழுங்குப்படுத்த தமிழ்நாடு மணல் கழகத்தை அமைக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இந்திய  கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தொடர்ந்த பொதுநல வழக்கில் பதில்மனு தாக்கல் செய்ய அரசுக்கு உயர்நிதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.  உவரி, சவுடு, வண்டல் மணல் போன்றவற்றை எடுக்க அனுமதி வழங்கக்கூடாது என முத்தரசன் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் இந்த உத்தரவை உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்துள்ளது
    Next Story
    ×