search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    திருவண்ணாமலை அருகே சாராயம் விற்ற 7 பேர் கைது

    திருவண்ணாமலை அருகே சாராயம் விற்ற 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் மற்றும் டெல்டா தனிப்பிரிவு போலீசார் இணைந்து திருவண்ணாமலை தாலுகா மேல்வலசை பகுதியில் சாராய ஒழிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு மறைத்த வைக்கப்பட்டு இருந்த 1000 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது. மேலும் திருவண்ணாமலை தாலுகா நடுப்பட்டு பகுதியில் 20 லிட்டர் சாராயத்தை விற்பனைக்காக வைத்திருந்த ஏழுமலை (வயது 53), ஆறுமுகம் (50) ஆகியோரையும், கீழ்பென்னாத்தூர் தாலுகா பூதமங்கலம் பகுதியில் 70 லிட்டர் சாராயம் விற்பனைக்காக வைத்திருந்த ஏழுமலை (35) என்பவரையும், வழுத்தலங்குணம் பகுதியில் 110 லிட்டர் சாராயம் விற்பனைக்காக வைத்திருந்த வீரமணி (27) என்பவரையும் கைது செய்தனர்.

    கீழ்பென்னாத்தூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 275 லிட்டர் சாராயம் விற்பனைக்காக வைத்திருந்த வழுதலங்குனம் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை மனைவி பாரதி, மேக்களூர் கிராமத்தை சேர்ந்த மகேஷ்(20), விஜி (22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
    Next Story
    ×