search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாராயம் கைது"

    • வாணியம்பாடி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்
    • 100 லிட்டர் பறிமுதல்

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி திருமாஞ்சோலை பகுதியில் சாராயம் விற்ற (வயது 42), பிரபுதேவா (30), நியூடவுன் பகுதியில் ஜெயசீலன் சாராயம் விற்ற சரவணன் (29), ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 52 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் வாணியம்பாடி தாலுகா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சாராயம் மற்றும் மது பானங் களை விற்ற பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த தேவேந்திரன், தசரதன், சி.வி.பட்டறை பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணி, புருஷோத்தமகுப்பம் பகுதியை சேர்ந்த முனியம்மா, மேட் டுப்பாளையம் பகுதியை சேர்ந்த சுரேஷ் ஆகியோர் கைது . செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 25 மதுபாட்டில்கள், 60 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

    திம்மாம்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சாராயம் விற்பனை செய்த அனுமுத்துராணி, பெருமாள், உஷா ஆகியோர் கைது அவர்களிடம் இருந்து 100 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். ஆலங்காயம் பகுதியில் சாராயம் விற்ற பெத்தூர் பகுதியை சேர்ந்த பார்த் திபன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

    மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டு வாணியம்பாடி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • சங்கராபுரம் அருகே 50 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.
    • சாராயம் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சங்கராபுரம்:

    சங்கராபுரம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சண்முகம், இளங்கோ தலைமையிலான போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது கொசப்பாடி கிராமத்தை சேர்ந்த இளகாந்தம் (வயது 57) என்பவர் தனது வீட்டின் பின்புறம் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். இதைபார்த்த போலீசாா், அவரை கைது செய்து, அவரிடமிருந்து 50 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் சேஷசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த செல்வம் (40) என்பவர் கொசப்பாடி ஏரிகோடி பாலம் அருகே சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரையும் போலீசார் கைது செய்து, 55 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் பாவளம் கிராமத்தில் சாராயம் விற்றதாக அதே பகுதியை சேர்ந்த ஆராயி (55) என்பவரையும் போலீசாா் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 55 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    ×