search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்வர் பழனிசாமி
    X
    முதல்வர் பழனிசாமி

    சந்தர்ப்பவாத அரசியல் செய்கிறார் முக ஸ்டாலின்- முதல்வர் பழனிசாமி

    எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின் சந்தர்ப்பவாத அரசியல் செய்கிறார் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
    சென்னை:

    எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினின் கடிதத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் 21 நாட்கள் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  தமிழகத்தில் கொரோனா வைரசால் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  969 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா தொடர்பான புள்ளி விவரங்கள் எந்தவித ஒளிவுமறைவுமின்றி வெளியிடப்பட்டு வருகிறது. அரசு மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சித் தலைவர் சுமத்தியுள்ளது வருத்தம் அளிக்கிறது.
    முக ஸ்டாலின்.
    ஸ்டாலின் கருத்து கொரோன தடுப்பில் தன்னலமற்று பணியாற்றுவோரை கொச்சைப்படுத்துவதாக உள்ளது. தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைளை எதிர்க்கட்சி துணைத்தலைவரே பாராட்டியுள்ளார். திறமைமிக்க மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களால் தமிழகத்தில் இறப்பு விகிதம் 1 % குறைவாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×