என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரேஷன் கடைகளில் ரூ.500 மதிப்பிலான மளிகை பொருள்கள் தொகுப்பு வழங்கப்படும் - தமிழக அரசு
Byமாலை மலர்10 April 2020 3:13 PM GMT (Updated: 10 April 2020 3:13 PM GMT)
ரேஷன் கடைகளில் 500 ரூபாய் மதிப்புடைய 19 பொருள்கள் அடங்கிய மளிகை பொருள் தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை:
தமிழக அரசுவெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வரும் 14-ம் தேதியுடன் முடிவடைய உள்ள ஊரடங்கு மேலும் சில நாட்கள் நீட்டிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கச் செய்யும் வகையில் ரேஷன் கடைகள் மூலம் மளிகை பொருட்களை விற்பனை செய்ய தமிழக அரசு முடிவுசெய்துள்ளது.
அதன்படி, ரூ.500 மதிப்புள்ள வகையில் அரை கிலோ துவரம் பருப்பு, அரை கிலோ உளுத்தம் பருப்பு, கால் கிலோ கடலை பருப்பு, மிளகு 100 கிராம், கடுகு100 கிராம், சீரகம் 100 கிராம், வெந்தயம் 100 கிராம் மற்றும் டீத்தூள், மஞ்சள் தூள் உப்பு, பூண்டு உள்ளிட்ட 19 பொருட்கள் உள்ளடக்கிய பைகளை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X