என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவண்ணாமலையில் ரேசன் கடையில் குவிந்த மக்கள் கூட்டம்
Byமாலை மலர்31 March 2020 11:16 AM GMT (Updated: 31 March 2020 11:16 AM GMT)
கொரோனா பரவுவதை தடுக்க மக்கள் வீட்டிலே இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. திருவண்ணாமலையில் ரேசன் கடையில் 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூட்டமாக நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை வேங்கி காலில் உள்ள ரேசன் கடையில் நேற்று மண்ணெண்ணெய் வழங்கப்பட்டது. இதனை வாங்குவதற்காக பொதுமக்கள் ஏராளமானோர் குவிந்தனர்.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பொதுமக்கள் வீட்டிலே இருக்க வேண்டும். வெளியில் செல்பவர்கள் முககவசம் அணிந்து செல்ல வேண்டும்.
5 பேருக்கு மேல் ஒன்றாக இருக்கக்கூடாது என்று அறிவிக்கப்பட்டும் ரேசன் கடைகளில் மண்ணெண்ணெய் வாங்குவதற்காக 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று திரண்டு கூட்டமாக காத்திருந்தனர். பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் முக கவசம் அணியாமலும் கூட்டமாக இருந்தனர்.
அரசும் மாவட்ட நிர்வாகமும் பல அறிவுரைகள் வழங்கியும் அதனை பொதுமக்கள் கடைபிடிக்காமல் இருந்து வருவது வேதனைக்குரியது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X