search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுக்கடைகள் மூடல்
    X
    மதுக்கடைகள் மூடல்

    டாஸ்மாக் மதுக்கடைகள் மூடல்: அரசுக்கு ரூ.1,700 கோடி இழப்பு

    கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படுள்ளதால் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன. இதனால் அரசுக்கு ரூ.1,700 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் 5,300 சில்லரைக் கடைகள் மூலம் மதுபானங்களை விற்பனை செய்கிறது. டாஸ்மாக் கடைகள் மூலம் நாள்தோறும் 100 கோடி ரூபாய் கிடைக்கிறது. விடுமுறை தினங்களில் மது வகைகள் அதிகமாக விற்பனையாகின்றன.

    மது வகைகள் மீது விதிக்கப்படும் ஆயத்தீர்வை மற்றும் மதிப்பு கூட்டு வரி வாயிலாக தமிழக அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. அதன்படி 100 ரூபாய்க்கு மது பாட்டில் விற்பனையானால் வரியாக ரூ.83, பீர் வாயிலாக ரூ.73 என அரசுக்கு வருவாய் கிடைக்கிறது

    201920 ம் நிதியாண்டில் பிப்ரவரி மாதம் வரை டாஸ்மாக் பீர், மது விற்பனையால் ஆயத்தீர்வை மூலம் ரூ.6,606 கோடியும், மதிப்பு கூட்டு வரியால் 22 ஆயிரத்து 233 கோடி ரூபாயும் என மொத்தம் ரூ. 22,839 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

    இதற்கிடையே கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்தியா முழுவதும் கடந்த 25-ம் தேதி முதல் ஏப்ரல் 14-ந் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுள்ளது.

    இதனால் 21 நாட்களுக்கு டாஸ்மாக் மதுக்கடைகளை மூட அரசு உத்தரவிட்டது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    தினமும் ரூ 100 கோடி என 21 நாட்களுக்கு கணக்கிட்டால் மொத்தம் 2100 கோடி ரூபாய் மதிப்பிலான மது விற்பனை பாதிக்கப்படும். அந்த மதிப்பிலிருந்து அரசுக்கு சராசரியாக 80 சதவீதம் என கணக்கிட்டால் ரூ. 1680 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

    Next Story
    ×