search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக பள்ளிக் கல்வித்துறை
    X
    தமிழக பள்ளிக் கல்வித்துறை

    கொரோனா அச்சுறுத்தல் - தமிழகத்தில் மழலையர் பள்ளிகளுக்கு மார்ச் 31 வரை விடுமுறை

    கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் அனைத்து மாவட்ட மழலையர் பள்ளிகளுக்கு மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை அறிவித்துள்ளது.
    சென்னை:

    சீனாவின் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளானோர் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது.

    இந்நிலையில், கொரோனா முன்னெச்சரிக்கையாக 16-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை கேரளா மாநில எல்லையோரம் உள்ள மாவட்டங்களில் செயல்படும் பள்ளிகளுக்கு தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள மழலையர் பள்ளிகளுக்கு வரும் 31-ம் தேதி வரை விடுமுறை விடப்படுகிறது.

    மேலும், குமரி, நெல்லை, கோவை, திருப்பூர், தேனி, நீலகிரி மாவட்டங்களில்  எல்.கே.ஜி. முதல் 5-ம் வகுப்பு வரை விடுமுறை விடப்படுகிறது என தெரிவித்துள்ளது.
    Next Story
    ×