என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா அச்சுறுத்தல் - தமிழகத்தில் மழலையர் பள்ளிகளுக்கு மார்ச் 31 வரை விடுமுறை
Byமாலை மலர்13 March 2020 2:46 PM GMT (Updated: 13 March 2020 3:41 PM GMT)
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் அனைத்து மாவட்ட மழலையர் பள்ளிகளுக்கு மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை அறிவித்துள்ளது.
சென்னை:
சீனாவின் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளானோர் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கொரோனா முன்னெச்சரிக்கையாக 16-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை கேரளா மாநில எல்லையோரம் உள்ள மாவட்டங்களில் செயல்படும் பள்ளிகளுக்கு தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள மழலையர் பள்ளிகளுக்கு வரும் 31-ம் தேதி வரை விடுமுறை விடப்படுகிறது.
மேலும், குமரி, நெல்லை, கோவை, திருப்பூர், தேனி, நீலகிரி மாவட்டங்களில் எல்.கே.ஜி. முதல் 5-ம் வகுப்பு வரை விடுமுறை விடப்படுகிறது என தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X