என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கோட்டாரில் பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை
நாகர்கோவில்:
கோட்டார் செட்டித் தெருவைச் சேர்ந்தவர் நடேசன் (வயது 52), பெயிண்டர். நடேசனுக்கும் அவரது மனைவிக்கும் அவ்வப்போது குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. நேற்று நடேசன் வேலைக்கு சென்று விட்டு இரவு வீடு திரும்பினார். அப்போது மனைவியிடம் சிக்கன் வேண்டுமென்று கேட்டுள்ளார்.
இதையடுத்து அவரது மகன் கடைக்கு சிக்கன் வாங்க சென்றார். சிக்கன் வாங்கி வருவதற்கு தாமதமாவதாக கூறி நடேசன் மனைவியிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் வீட்டில் இருந்த அறைக்குள் சென்ற நடேசன், திடீரென தூக்கில் தொங்கினார். சத்தம் கேட்டு அவரது மனைவி ஓடிச்சென்று பார்த்தார். கணவன் தூக்கில் தொங்கியதை பார்த்த அவர் கூச்சலிட்டார்.
அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தூக்கில் தொங்கிய நடேசனை மீட்டு 108 ஆம்புலன்சு உதவியுடன் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் நடேசன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கோட்டார் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பலியான நடேசனின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராளமானோர் ஆஸ்பத்திரியில் திரண்டுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்