என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வதந்தி பரப்பி போராட்டத்தை தூண்டிவிட்டனர்- சட்டசபையில் முதல்வர் பரபரப்பு குற்றச்சாட்டு
Byமாலை மலர்17 Feb 2020 6:58 AM GMT (Updated: 17 Feb 2020 10:59 AM GMT)
வண்ணாரப்பேட்டை போராட்டத்தின்போது தடியடி நடத்தியதில் முதியவர் இறந்ததாக வதந்தி பரப்பி, மாநிலம் முழுவதும் போராட்டத்தை தூண்டி விட்டிருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சென்னை:
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் நடந்த போராட்டத்தின்போது தடியடி நடத்தப்பட்டது. இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெறுகிறது. இதுபற்றி இன்று சட்டசபையில் விவாதம் நடந்தது. இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் விளக்கம் அளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
சென்னை வண்ணாரப்பேட்டையில் அனுமதியில்லாமல் போராட்டம் நடைபெற்றது. அனுமதியின்றி பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் பலர் போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்தியவர்களை காவல்துறை கைது செய்ய முயன்றபோது, அவர்கள் ஒத்துழைக்க மறுத்து காவல்துறையின் வாகனங்களை சேதப்படுத்தினர். போலீசார் மீது செருப்பு, கற்கள் மற்றும் பாட்டில்கள் வீசப்பட்டன. இந்த வன்முறை தொடர்பாக 82 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சில விஷமிகள் போராட்டத்தை தூண்டிவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. வண்ணாரப்பேட்டை போராட்டத்தின்போது தடியடி நடத்தியதில் முதியவர் இறந்ததாக வதந்தி பரப்பி, மாநிலம் முழுவதும் பேராட்டத்தை தூண்டி விட்டுள்ளனர். ஆனால் அந்த முதியவர் நோயின் காரணமாகவே இறந்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
முதல்வரின் பதிலை ஏற்க மறுத்து திமுக, காங்கிரஸ், ஐயுஎம்எல் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X